June 23, 2009

Deck The Halls......100% பொழுது போக்கு



****IMDB RATING:4.4 /10****




கிறிஸ்மஸ் பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடுவதில் போட்டியும் பொறாமையும் கொண்ட இரு அண்டை வீட்டுகாரர்களின் பூசல்தான் 2006 நவம்பர்-ல் வெளிவந்த நகைச்வை கலந்த குடுமப திரைப்படம் தான் "Deck The Halls"

சரி வாங்க கதையின் ஒரு சின்ன அறிமுகம்......

Steve தன் குடும்பத்தினருடன் கிறிஸ்மஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட ஆயத்தமாகிறன். அப்போது தான் அவன் பக்கத்துவீட்டிற்கு குடி வருகிறார்கள் Buddy Hall & family.

Hall ஒரு கார் விற்பனையாளார். மிக குறைந்த வருமானம். அவன் மனைவியோ எப்போதும் அவனை பணத்திற்காக அவனை நச்சரிக்கிறாள். Hall தான் எதாவது சாகசம் செய்து புகழ் பெறவேண்டும் என நினைக்கிறான். அதன் முயற்ச்சியாக கிறிஸ்மஸ் பண்டிகையின் போது வீட்டை விளக்குகளால் அலங்கரித்து வானில் இருந்து பார்த்தாலும் தெரியும் படி செய்ய பல முயற்சிகளை மேற் கொள்கிறான்.

ஆனால் பல ஆண்டுகளாய் வாழும் அவர்கள் குடியிருப்பு பகுதியில் Steve குடும்பமே கிறிஸ்மஸ் பண்டிகையை விமர்சனையாக கொண்டாடி புகழ் பெற்று வருகின்றனர். இந்த தருணத்தில் புதிதாக குடி வந்த Buddy யின் முயற்சிகளை கெடுக்க Steve செய்யும் குளறுபடிகளும் அதை Buddy எப்படி முறியடிக்கிறான் என அடிக்கும் லுட்டிகள்...





என்னதான் இவர்கள் இருவரும் போட்டி பொறாமையுடன் இருந்தாலும்.... இவர்கள் குழந்தைகளும் மனைவிகளும் இதை விரும்புவதில்லை. அவர்க்ள் ஒரே குடும்ப்மாக இருக்க வேண்டும் என எவ்வளவோ முயற்ச்சிகின்றனர்.

ஆனால் Buddy , Steve இருவரும் அவர்களின் பேச்சை கேட்க மறுப்பதால் இரு மனைவிகளும் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி கிறிஸ்மஸ் பண்டிகையை விடுதியில் கொண்டாட போவதாய் சொல்லி விட்டு போய் விடுகின்றன்ர்.
இறுதியில் Buddy & Hall தான் நினைத்ததை நிறைவேற்றி எல்லோரும் ஒன்று சேர்ந்து கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட நேரத்தை கொள்ளை கொள்ளும்....அத்தனை பேரின் இயல்பான நகைச்சுவை நடிப்பும் பார்பவர்களுக்கு 100% பொழுது போக்கு.....

குறிப்பாக கிறிஸ்மஸ் பாடல்கள் குறும்பாடல்களாக வந்து போவது இனிமை.


My Rating:6.5/10

June 17, 2009

பராசக்தி (1952).... (ஒரு மைல்கல்)



*****IMBD RATING:9.2/10*****

பராசக்தியை பற்றி எழுதிக் கொண்டே போகலாம். அதனால்தான் எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியாமல் எனக்கு.... அது எனக்கு உண்மையிலேயே பிடித்த படங்களில் ஒன்று.

....

"சக்சஸ், இன்று முதல் நானும் ஒரு ஏமாற்றுக்காரன்" இந்த இடத்தில் ஆரம்பிக்கிறது நடிப்பு சக்ரவர்த்தியின் ஆட்சி. அதிலிருந்து படம் முழுதும் அவர் ஆளுமைதான். இது இவருக்கு முதல் படம் என்று சொன்னால் அதை யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு கச்சிதமாக நடித்திருந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது என்று வசனம் பேசி பார்க்காத தமிழ் நடிகர் இல்லை. ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் என்றும் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்றும் பேசுவதை மறக்க முடியாது.

"பராசக்தி"தமிழ் திரையுலக வரலாற்றில் இன்றும் எட்ட முடியாத ஒரு மைல்கல். கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை, வசனசத்தில் ஒரு காவியமாக எழுந்து நிற்கிறாள் இந்த பராசக்தி. இவள் இன்றும் நம்மை நோக்கி பல கேள்விகளை தொடுத்து நிற்கிறாள்.

சமுதாயத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை. வெறும் ஒரு குடும்பத்தின் கதையாக இருந்திருந்தால் அது இந்த அளவிற்கு வெற்றி பெற வாய்ப்பில்லை. அது பல தமிழர்களின் வாழ்வையும் குறித்த கதையாக இருக்கிறது.

"இட்லிக்கடையா?" என்று கேட்கும் கல்யாணியுடம் "தமிழ்நாட்டில் தாலி இழந்தவர்களுக்கு அது தானே தாசில் உத்யோகம்" என்று அவள் பக்கத்து வீட்டு பெண்மணி சொன்னது இன்றும் எவ்வளவு உண்மை.


படம் நடந்ததாக சொல்லப்படும் கால கட்டம் 1942. இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயமது. படத்தின் கதை இது தான்...

ஞான சேகரன், சந்திர சேகரன், குண சேகரன் மூவரும் சகோதர்கள். பிழைப்புக்காக ரங்கூன் (பர்மா) சென்றிருக்கிறார்கள். அவர்களின் ஒரே தங்கை கல்யாணியின் திருமணத்தைக்காண மூவரும் மதுரை வர முற்படுகிறார்கள். போர் நடக்கும் காரணத்தால் கப்பலில் பயணம் செய்ய ஒருவருக்கு மட்டும் இடம் என்றவுடன் குண சேகரனை அனுப்பி வைக்கிறார் அவர் அண்ணன்.போர் காரணமாக பல மாதங்கள் தாமதமாகி சென்னையை வந்தடைகிறது கப்பல். மதுரை ரயிலுக்கு டிக்கட் கிடைக்காததால் ஒரு நாள் தங்கிவிட்டு காலையில் புறப்படலாம் என்று ஹோட்டலில் தங்குகிறார் குணசேகரன். அங்கே ஒரு வஞ்சியால் வஞ்சிக்கப்பட்டு தன் கையிலிருந்த பணம் அனைத்தையும் இழக்கிறார்.
அவருக்கு அங்க யாரும் உதவ மறுப்பதால் பட்டினியில் வாடுகிறார். பிச்சையெடுக்கிறார், பின் அதுவும் உதவாததால் பைத்தியமாக நடித்து உண்கிறார். ஒரு வழியாக தன் சொந்த ஊருக்கு செல்கிறார். அங்கே விதியின் வசத்தால், கணவனை இழந்து, தந்தையையும் இழந்து கைக்குழந்தையுடன் குடிசை வீட்டில் தங்கி இட்லி வித்து வாழ்கிறாள் அவன் தங்கை கல்யாணி. மாமன் வருவான் நம் நிலைமை மாறும் என்று அவள் கைக்குழந்தைக்கு ஆறுதல் சொல்வதை போல் தனக்கே சொல்லி கொள்கிறாள்.


அவ்வாறு வாழும் கல்யாணியின் நம்பிக்கையில் மண் அள்ளி போட விருப்பமில்லாமல் அவள் முன்னும் பைத்தியமாக நடித்து அவளுக்கு காவலாளியாக இருக்கிறான் குணசேகரன்.கல்யாணியின் வறுமையை பயன்படுத்தி அவளை நாசமாக்க துடிக்கிறான் அந்த ஊர் மைனர் ஒருவன். அவன் குணசேகரனிடம் நன்றாக உதைவாங்கி கொள்கிறான். பிறகு அவளை வேலைக்கமர்த்தி காம லீலைக்கு அழைக்கிறான் நல்லவன் வேடம் போடும் நாட்டாமை ஒருவன். அவனிடமிருந்து தப்பித்து தன் அண்ணன் சந்திர சேகரன் வீட்டில் வைக்கும் விருந்திற்கே சென்று, தன் பிள்ளை ஆறு நாள் பட்டினி கிடப்பதாக சொல்லி, உணவுக்காக அவன் காலை பிடித்து கெஞ்சுகிறாள் கல்யாணி. அவனும் தன் தங்கையென்று தெரியாமல் எட்டி உதைக்கிறான்.பிறகு அருகே இருக்கும் பராசக்தியின் கோவிலுக்கு செல்கிறாள் கல்யாணி. அவளை மானபங்க படுத்த முயல்கிறான் அந்த கோவில் பூசாரி. அவனிடமிருந்து தப்பித்து செல்கிறாள் கல்யாணி. இந்த சுயநலமிக்க வஞ்சக உலகில் வாழ விருப்பமில்லாமல் தன் குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு, தற்கொலை செய்ய முயல்கிறாள் கல்யாணி. அங்கே இருக்கும் காவலரால் காப்பாற்றப்படுகிறாள்.பிறகு நீதிமன்றத்தில் அவள் இன்னாரென்று அவள் அண்ணன் சந்திர சேகரன் உணர்கிறான். தன் தங்கைக்காக கோவில் பூசாரியை தாக்கிவிட்டு நீதிமன்றத்தில் நிற்கிறான் குணசேகரன். அவன் காதலியால் கல்யாணியின் குழந்தை காப்பாற்றப்படுகிறது. ஒரு வழியாக கல்யாணியும், குணசேகரனும் சந்திரசேகரிடம் சேர்கிறார்கள். பிச்சைக்காரர்கள் மாநாட்டிற்கு பொருளுதவி கேட்டு வரும் ஞானசேகரனும் அவர்களுடன் சேர்கிறான். ஒரு வழியாக பிரிந்தவர்கள் சேர்கிறார்கள்.

சுபம்...

இனி படத்தில் என் மனதை தொட்ட காட்சிகள்...

"ஓ ரசிக்கும் சீமானே பாடலும்",
"புது பெண்ணின் மனதை தொட்டு போனவரே" பாடலும் படம் முடிந்து மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

போலிஸ் கான்ஸ்டபிலிடம் குணசேகரன் பேசும் வசனங்கள் அருமையிலும் அருமை......

படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பிற்கு பெரும்பாலும் நீதிமன்ற காட்சியையோ, அல்லது பராசக்தியின் பின்னாலிருந்து எழுந்து பூசாரியிடம் பேசும் வசனத்தையோ சொல்வார்கள்.

ஆனால் எனக்கு பிடித்தது, அவள் தங்கை முன்பு பைத்தியம் போல் முதன் முதலில் நடிக்கும் காட்சி. மன்னனை போல, கூத்தாடியை போல, மந்திரியை போல, ஏழை விவசாயி போல மோனோ ஆக்டிங் செய்திருப்பார்.

அந்த காட்சியை பார்த்ததும் அந்நியன் படத்தில் பிரகாஷ்ராஜ் பேசும் "எம்.ஜி.ஆரை பார்த்திருக்கேன், சிவாஜிய பார்த்திருக்கேன், ரஜினிய பார்த்திருக்கேன், கமலை பார்த்திருக்கேன். ஆனா இந்த மாதிரி ஒரு நடிகனை பார்த்ததில்லைனு" வசனத்தை எழுதியவருக்கு "பராசக்தி" DVD பார்சல் செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.

முதல் படத்திலே தான் ஒரு மகாநடிகன் என்று நிருபித்திருக்கிறார்.- படத்திற்கு பராசக்தி என்று பெயர் வைத்தது எவ்வளவு உண்மை.

என்னை நானே கேட்கும் கேள்விகள்:-

குணசேகரன் சென்னையை தொட்டதும் முதலில் கேட்கும் குரல் ஒரு பிச்சைக்காரனின் குரல். இந்த படம் வந்து ஐம்பத்தி ஐந்து வருடம் கழித்து வந்திருக்கும் சிவாஜி படத்திலும் நாயகன் சென்னையில் கேட்கும் முதல் குரல் ஒரு பிச்சைக்காரியின் குரல். ஐம்பத்தி ஐந்து வருடங்களாக பல ஆட்சி மாற்றமும் நம் சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லையா?-

பிச்சைக்காரர்களுக்கு ஓட்டுரிமை....அது இன்றும் நிறைவேறவில்லை என்றே நினைக்கிறேன்-

"மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கிறான்"

"உங்களை சொல்லலைங்க.......
"முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்ஷா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன்.

"சரி தான் போடா. மெட்ராஸுக்கு நீ மேயராகற காலத்துல மிருகத்தை எல்லாம் மனுஷனாக்கலாம்"....... பல மேயர்கள் வந்தாலும் இங்கே எந்த மாற்றமும் இல்லை.

இன்றும் தமிழர்கள் பலருக்கு பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஓரு ஊராகத்தான் இருக்கிறது.
என்று ஏற்படுமோ நல்ல மாற்றம்??????????.....
இன்று இந்த படம் முதல் முறையாக பார்ப்பவர்களுக்கு அதே தாக்கம் ஏற்படுமா என்பது எனக்கு சந்தேகம்தான். ஐம்பதுகளில் அது யதார்த்தமான படம் என்றே கருதப்பட்டிருக்கும். இப்போது நாடகத்தன்மை உள்ளது, melodrama என்று சொல்லலாம். melodrama-வின் ஒரு உச்சம் என்று நான் இந்த படத்தை கருதுகிறேன்.
My Rating:8.5/10

June 11, 2009

"காதலிக்க நேரமில்லை".(1964)


நாடகத்தனமாக சென்று கொண்டிருந்த சினிமாவை இயல்பான கலை வடிவமாக்கியவர் கதை மட்டும் இருந்தால் போதும் யாரை வேண்டுமானலும் நடித்து ஹிட் செய்லாம் என்பது இவரின் ஆணிதானமான கருத்து. அதற்கு எற்றவாறு குறுகிய காலத்திலேயே பல அருமையான படங்களை தந்தவர்.எனது மனம் கவர்ந்த இயக்குனர்களுள் இவரும் ஒருவர்.

இன்னும் நூறு ஆன்டுகள் கழித்து யாரும் தமிழ்சினிமாவின் டாப் டென் காமெடி படங்கள் லிஸ்ட் போட்டாலும் இந்த படம் அதில் இருக்கும்.இந்த இயக்குனர் சிகரம் ஸ்ரீதர் இயக்கி 1964யில் வெளிவந்த "காதலிக்க நேரமில்லை".


நான் இப்படத்தை பல முறை பார்த்திருக்கிறேன்.இப்பொது பார்த்தாலும் இருக்கையில் இருந்து எழவிடாது.

முத்து ராமன், ரவிச்சந்திரன்,பாலையா,நாகேஷ், காஞ்சனா,சச்சு நடித்தது. "காதலிக்க நேரமில்லை"விஸ்வனாதன் வேலை வேணும்" என்ற பாடல் மிக பிரபலம். டைரெக்டராக ஆசைப்படும் நாகேஷ் பாலையாவிடம் கதை சொல்லும் சீன் கிளாசிக்.(இப்பவும் பல தொலைக்காட்சி வரும் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நிச்சியம் வரும்)

அதே போல் சச்சுவை நடிகையாக மாற்றும் முயற்சிகளும். காதலுக்காக சொல்லும் பொய்கள், ஆள்மாறாட்டம், மோதலில் ஆரமித்து காதல்... என படத்தின் ஒவ்வோரு காட்சிகளும் 50 ஆண்டுகளுக்கு முன்பே அவர் கையாண்ட கதை களங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன.

படத்தை பற்றி நான் அதிகம் விமர்சனம் செய்ய விரும்பவில்லை.. சுறுக்கமாக நீங்கள் தமிழில் ஒரு அருமையான நகைச்சுவை படம் பார்க்க விரும்பினால்.. மாறவமல் இந்த படத்தை பாருங்கள்.

மீண்டும் இப்படம் தமிழில் Re-make செய்ய கொண்டிருக்கிறார்கள் என ஒரு செய்தி...என்னை பொறுத்த வரையில் "Original Magic-யை Re-create செய்ய முடியாது.

மேலும் அவர் இயக்கத்தில் வந்து இன்னும் காலத்தால் அழிய காவியங்களில் சில வற்றை....

கல்யாணப்பரிசு (1959), தேன் நிலவு (1961), நெஞ்சில் ஓர் ஆலயம் (1962), சுமை தாங்கி, வெண்ணிற ஆடை (1965).

இவரை பற்றி ஒரு சில தகவல்கள்:(வலைபூவில் இருந்து கிடைத்தது)..

ஜெயலலிதா வை அறிமுகப்படுத்தியவர், இந்தி திரைஉலகின் கனவுக்கன்னி ஹேமமாலினி-யை மேக்கப் டெஸ்டில் நிராகரித்தவர்,ஜெமினி கணேசன் முதல் விக்ரம் வரை மூன்று தலைமுறையையும் இயக்கியவர். பக்கவாத நோய்தாக்கிய நிலையிலும் தினமும் சினிமா பார்க்கும் பழக்கத்தை மட்டும் மாற்றிக்கொள்ளவில்லை இவர்.

இந்த ஒரு பதிவு போதது இவரை பற்றி எழுத....என்னும் அவரை பற்றி ஒரு சில வார்த்தைகள்..

My Rating: 9/10

June 9, 2009

Twitter ரில் நான்.....


ரொம்ப நாள் யோசிச்சி ஒரு வழியாக Twitter ரில் சேர்ந்திட்டேன்.. கணினியைப் பயன்படுத்தும் போது மட்டுமே தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும் என்பது மாறி, இப்ப தொழிட்நுட்பம் எங்கெங்கோ போயிகிட்டு இருக்கு.. அதுனால, கொஞ்சம் tweet செஞ்சிதான் பார்ப்போமேன்னு ஆரம்பிச்சிட்டேன்.
http://twitter.com/ashwinmakes நீங்களும் என்னைத் தொடரலாம். இந்த வலப்பக்கத்திலும் tweet உரையாடல்களைப் பார்க்கலாம். .. :)

June 6, 2009

UP-2009 (Summer Special)




****IMDB RATING:9/10**
****TOP 250#15****









என் வலைபூ நண்பர் விஷ்வா & சரவணா அவர்களுக்கு......
நான் இந்த வலைபூ ஆரமித்தால் இருந்து என் பதிவகளுக்கு மறவாமல் பின்னுட்டி கொண்டிருக்கும் ஒரு நண்பர்...இந்த பதிவு.

இதோடு சேர்த்து மொத்தம் பத்தே படங்கள். போன ஒன்பது படங்களில் மொத்தம் 22 ஆஸ்கர் விருதுகள். ஒரு படம் கூட ஆஸ்கர் வாங்காமல் வந்ததில்லை. So...வரும் வருடம் இன்னும் ஒன்னு / இரண்டு.... வாங்க, UP இப்பவே ரெடி.

அது எப்படி... Pixer மட்டும்.. ஒவ்வொரு வருடமும் சொல்லி சொல்லி அடிக்குது? ஒவ்வொரு Pixer-ரின் படங்களும் அதனோட எதிர்பார்ப்பு எல்லையை உயர்த்திக்கிட்ட இருக்கும் இத்தருணத்தில், மனதில் பல கேள்விகள் ஏல...அதில் ஒன்று தான்....இவர்களால் மட்டும் வெற்றியின் சிகரத்தை எப்படி எட்டிப்பிடிக்க முடிகிறது தளராமல்?.....

Diseny-யின் (தனியான) தயாரிப்போ, Dream Works தயாரிப்போ.. Characterகளை திரையில் மட்டும் ஓடிக்கொண்டிருக்கும் போது, Pixer Films-ல் இருந்து வெளியே வரும் பொம்மைகள்,மீண்கள்,எறும்புகள்,எலிகள்,கார்கள், என எந்த ஒரு பொருளாக இருக்கட்டும்.. அந்த பாத்திரங்களோடு நமக்கு ஒரு இனம் புரியாத ஒட்டுதல் வந்திருக்கும்.

போன ஒன்பது படங்களில் இவ்வறான என அன்னியப்பட்ட Characterகளை வைத்து வித்தை காட்டி நம்மை கட்டி போட்டவர்கள், முதன் முறையாக மனிதர்களை மையமாக வைத்து எடுக்கும் போது... விட்டுவிடுவார்களா....என்ன??

Pixar's Family...., They came back & just done it again.


Carl-லும், Ellie-யும் சிறுவர்களாக இருக்கும் போதே உலகம் சுற்றும் Exploxer ஆகனும்னும், தென் அமெரிக்காவில் இயற்க்கையை அறிந்து அங்கிருக்கும் ‘Pirates Falls’ என்ற அருவியை பார்க்கனும் அவர்களின் விருப்பம்.
கதையின் நாயகன் Carls..... ‘Pirate Falls’-ல் இருக்கும், "Swenni" என்கிற கற்பனையான ஒரு பறக்க முடியாத பறவையின் எலும்புக்கூட்டை Carls, விஞ்ஞானிகளுக்கு காட்ட, அவரை ஏமாற்றுகாரன் என் சொல்லி பட்டம் கட்டி அனுப்பி விடுகிறார்கள். எப்படியாவது ஒரு "Swen"-ஐ பிடித்து காட்டுறேனா இல்லையான்னு பாரு’-ன்னு Carl's சபதம் போட்டுவிட்டு சென்று விட...,

Carl-லும் Ellie-யும் இப்பொழுது வளர்ந்து, பலூன் விற்க ஆரம்பித்து, குழந்தையில்லாமலேயே வயதாகிவிட..., Ellie இறந்துவிட.. இப்பொழுது கார்ல் தனி ஆளாய் அந்த ப்யானோவின் பின்னணி இசை......, அற்புதம்.
Carl's Character நம்மோடு ஒன்றியது அப்போதுதான்!

ஒரு பிரச்சனையில் Carl-லுக்கு, முதியோர் இல்லத்துக்கு போக வேண்டிய கட்டாயம். Ellie-யோடு இருந்த, வாழ்ந்த வீட்டை விட்டு போக மனமில்லாத Carl's, சிறு வயது ‘Pirate Falls’ ஆசையை நிறைவேற்ற, பலூனை வீட்டு மேல் கட்டி, வீட்டையும் சேர்த்து எடுத்துக்கொண்டு தென் அமெரிக்கா கிளம்பிவிட, வேண்டாத ஒட்டுதலாக Charles என்ற சிறுவன் சேர்ந்து கொள்கிறான்.

‘Pirate Falls’ நெருங்கும் நேரத்தில்...,
Falls-ன் எதிர்புறத்தில் வீடு ‘லேண்ட்’ ஆகிவிட.... கலர்ஃபுல்லான ஒரு Swen பறவையும், அந்த பறவையை வேட்டையாட வரும் சில பேசும் நாய்களும் என சேர்ந்து கொள்கின்றன.
பாலுன் உள்ள Helium இறங்குவதற்குள் வீட்டை சரியான இடத்திற்கு கொண்டு போக வேண்டிய கட்டாயத்தில் Carl's, வேட்டையாட துடிக்கும் நாய்களிடமிருந்து, Swen-னைப் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் Charle's,

தன் ‘ஃஏமாற்றுகாரன்’ பெயரை மாற்ற வேண்டிய நிர்பந்தத்தில் Carl's....
Chaseing, Action, Adventure, செண்டிமெண்ட் (எப்பவும் போல்) என... தியேட்டரில்.. குட்டிகளுக்கும், அவ்வளவு ஏன்.... வளர்ந்தவர்களுக்கும் கொண்டாட்டம் தான்.

டெக்னிகல் தொழில் நுட்பங்களின் நேர்த்தியை, இனிமேல் வேறு யாராவது சொல்லித்தான் Pixer-ரை பற்றி தெரியத்தேவையில்லை என்றாலும்,....
இது Pixer-ரின் முதல் 3D படம். சும்மா... புகுந்து விளையாடி கலக்கி இருக்காங்க சொல்ல நினைச்ச.....
Diseny-யின் Monsters VS Aliens -ல் வரும் 3D Effects கூட இல்லாத 3D படம் என்பது தான் பெரிய சோகம்.

இந்த படத்தின் Depth பெரும்பாலும் Flat-யாகவே இருப்பது, மொத்த படத்திற்கும் ‘திருஷ்டி பொட்டு’ வேச்சமாதிறி..

இதை 3D-ன்னு சொல்லி விற்றது, Diseny-யின் வியாபார தந்திரம்....

2D-யில் பார்த்திருந்தாலும் ஒன்றும் கெட்டிருக்காது; Atleast Title-காவது இன்னும் Better-யாக இருந்திருக்கும் என்பது என்னோட கருந்து.

இந்த படத்தில் மனிதர்களை ‘டீல்’ செய்வதாலோ என்னவோ... மற்ற ஒம்பது படங்களை விட இதில் செண்டிமெண்ட் அதிகம் (Wall-E -ஐ விடவும்). அதுவே படத்தின் வேகத்தையும் குறைக்கிறது. Wall-E-யில் முயற்சித்தை போலவே இதிலும், தொடர்ச்சியாக சில நிமிடங்களுக்கு வசனங்களே இல்லாத, பியானோ பின்னணியிசை காட்சிகள்.

ஆனால் Carl's-லோ, Charles-லோ சிரித்தால் நாமும் சிரிப்பதும், அவர்கள் சோகமானால் ஒட்டு மொத்த தியேட்டரும் சோகமாவதும் Pixer படங்களில் மட்டுமே நடக்கும் ஒரு அதிசயம்.

ஒரு ஆச்சரியம்/அதிர்ச்சி....! கார்ட்டூன் படங்களில், ‘காட்சி வன்முறை’ என்பது ரொம்ப சகஜம் என்றாலும்... எனக்கு நினைவு தெரிந்த வரை... முதன்முதலில் ‘இரத்தம்’ காட்டும் Pixer படம் இதுவாகத்தான் இருக்கும். இதற்கு முன் இறப்பது மாதிரியான காட்சிகள் (Finding Nemo, The Incredibles) வந்திருந்தாலும் ‘இரத்தம்’ வந்திருக்காது. ஒருவேளை "Rated G" படங்களின் ‘அடுத்த கட்டம்’ போலிருக்கிறது.

Up... Pixer-ரின் (என்னை பொறுத்தவரையில்) ‘The Best' இல்லையென்றாலும், இது வரை வெளிவந்துள்ள கோடை விடுமுறை படங்களில், சந்தேகமில்லாமல் The Best..!

(ஒரு சிறு தகவல் Diseny-யின் எல்லா அனிமேசன் படங்களும் இனி 3D-யில் மட்டுமே வருமாம்).
My Rating: 8.9/10

June 2, 2009

Ratatouille... ஆசை யாருக்குதான் இல்லை.



**** IMDB RATING 8.2/10****TOP 250:#161****


Pixer தயாரிப்பில் 2007-யில் வெளிவந்த மற்றொரு படம் தான் Ratatouille நான் பார்த்து என்னை மறந்த ஒரு படம்.. ஒரு எலிக்கு சிறந்த சமையல்காரர் ஆகும் ஆசை வருகிறது. அதை எப்படிச் சாதிக்கிறது என்பது தான் கதை. இந்த படத்தை பற்றி உங்களுடன்....

உலகின் தலைசிறந்த உணவு வகைகள் செய்யும் நாடான பாரீஸ், அதில் தலைசிறந்த உணவகம் தான் Chef Auguste Gusteau உணவகம் என்றும்,,அவர் எழுதிய புத்தகம் "Anyone Can Cook "மிகவும் பிரபலம் என்று ஒரு தொலைக்காட்சியில் அவரை பற்றி .. என படம் தொடங்குகிறது...




REMY-இப்படத்தின் கதாநாயகன் அல்ல கதையின் நாயகன்.. இவன் மற்ற எலிகளில் இருந்து சற்று மாறுபட்டவன்..இவனிடன் வாசனை பிரிந்து பார்க்கும் சத்தி கொஞ்சம் அதிகமாக காணப்படுகிறது... இதனால் தன் வாழ்கையை உன்னும் உணவை பிரிந்து பார்த்து உன்னும் பழக்கம் கொள்கிறான்.இவனது திறமையை கண்டு அவன் அண்னன் மட்டும் ஆச்சிரியப்பட,வெறு யாரும் எற்று கொள்வதாய் தெரியவில்லை..

ஒரு கட்டத்தில் தன் திறமையை வைத்து தன் கூட்டத்தை ஒரு கட்டத்தில் உன்னும் உணவில் விசம் இருப்பாதாக கண்டு பிடித்து ஆபயாத்தில் இருந்து காப்பாற்ற.. உணவு பரிசோதிக்கும் பணியை கொடுக்கிறார் அவன் அப்பா "எலிகளின் தலைவர்"..... இந்த சம்பவம் நடந்த பிறகு,, தன் அப்பாவிடம் உணவை திருட தான் சாப்பிட வேண்டும்மென்றால் அதையை சமையில் இருந்து திருடலாமே என்று விவாதம் செய்ய,தன் அப்பா நாம் எலிகள்,மனிதர்களிடம் விலகி வாழ வேண்டும் என்று சொல்கிறார்,,


தன் அப்பாவுக்கும் தெரியாமல் சமையல் அறையில் செல்ல கழிக்க,,அங்கே உணவுகளின் வகைகள், அதனை தாயரிக்கும் முறை..எப்படி என்பதையும்
Chef Auguste Gusteau- வின் புத்தகங்களில் மற்றும் அவரது தொலைகாட்சி தொடரில் தெரிந்து கொள்ள தன் நேரங்களை கழிக்கிறான்.

ஒரு நாள் தன் அண்னனை அழைத்து சமையல் அறைக்கு செல்ல தன் குருவாக எற்று கொண்ட Gusteau பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதை சொல்லும் காட்சியை கண்டு அதிர உறக்கத்தில் இருந்த வீட்டின் உரிமையாளர் விழித்து கொள்ள....அவர்கள் இடத்தில் இருந்து தப்பிக்க முயலும் போது தன் குடும்பத்தில் இருந்து பிரிய நேர்கிறது..
தன்னை காப்பற்ற யாரேனும் வருவார்கள் என தன் கையில்யுள்ள புத்தகத்த வாசித்து கொண்டிருக்கிறது..நேரங்கள் நகர..யாரும் வரவில்லை..பசியும் தனிமையும் தன்னை கொள்ள உணவை தேடி புறப்படும் தருணத்தில் தான்... Gusteau-வின் உணவகத்தை கண்டு இத்தனை நாள் தான் பாரீஸ் நகரத்தில் வசிக்கிறோம் என்ற உண்மையை உணர்கிறது..


தன்க்குரிய ஆவலில் அந்த உணவகதிற்கு செல்கிறது..அந்த நேரத்தில் அங்க வேலை செய்யும் Alfredo Linguini (Garbage Boy) ஒரு உணவை சற்று கீழே சிந்த அதை மறைக்க தன் கைக்கு வந்த அத்தனை பொருகளையும் அள்ளி போட்டு குளமாக்கிறான். இதனை கண்ட Remy அவற்றை திருத்தி அமைக்கிறது....
தன் யாரேனும் பார்த்து விடுவார்கள் என்ற நோக்கில் தப்பிக்க முயலும் போது கண்டு Linguiniயிடம் மாற்றி கொள்கிறது. மீண்டும் தப்பிக்க முயலும் போதுதலைமை Chef Remyயை காண Linguini ஒரு bottle-யில் அடைக்க, தலைமைChef அதனை கொள்ளுமாறு சொல்கிறான்.

தன்னை காப்பாற்றிய ஒருவனை கொலை செய்ய மறுத்து Remy-யை விடுவிக்கிறான்.அதற்கு நன்றி கடன் செலுத்தும் வகையில், Linguini-க்கு உணவு தாயரிக்கும் பணியில் உதவுகிறது.

இதற்கிடையில் தன் உடன் வேலை செய்யும் Colette-யிடம் காதல் கொள்கிறான்.காதல் மலர்கிறது என காட்சிகள் நகர்கிறது.......


ஒரு கட்டத்தில் தன்னை குடும்பத்திரை காண நேர்கிறது,.... கண்டு மகிழ்ச்சியில் அவர்களுக்கு உதவும் முயற்ச்சியில் உணவகத்தில் உள்ள பொருகளை எடுத்து தர முயற்ச்சிகள் மேற்கொண்டபோது Linguini-தான் Gusteauவின் மகன் என்ற உண்மையை கானும் போது தலைமைchef (வில்லன்)பார்த்து விட....Remy அவனிடம் இருந்து தப்பிய உண்மையை Linguini-யிடம் சொல்ல.. Linguini தான் அப்பாவின் உணவகதிற்கு முதாலளி ஆயிகிறான்..
Anton Ego (ஒரு பழைய வில்லன் போல) உணவு விமர்சன்ம் மூலம் Gusteauவின் உணவகம் பற்றி எழுத தான் உணவத்திற்கு இருந்த five Star rating குறைக்க படுகிறது.



Gusteauவின் வளர்ச்சியை பத்திரிக்கையில் கண்ட Ego... Linguini Press meet நடக்கும் இடத்திற்கு வருகை தந்து.. தான் மீண்டும் Gusteauவின் உணவகம் பற்றி எழுத உணவத்திற்கு வருகை தர இருப்பதாக சொல்லிவிட்டு செல்கிறார்.

எல்லோரும் Egoவின் உணவை தாயரிக்க சொல்ல தடுமாறுகிறான். அப்போளுது Linguini உண்மையை சொல்ல எல்லோரும் அதனை எற்று கொள்ள மறுத்து சமையில் அறையில் இருந்து வெளியே செல்கிறார்கள்.

இதன் பின், Linguini எல்லாம் முடிந்து விட்டது என்று கவலை கொள்ள, Remy-யை தன் குடும்பத்தினர் வந்து அலைக்க... சற்று தடுமாறிய மீண்டும் உணவகத்திற்கு மீண்டும் உணவகத்திற்கு செல்ல வழியில் தலைமை Chef-யிடம் மாட்டிக் கொள்கிறது.

பின்னர் தான் குடும்பத்தின் உதவியுடன் விடுவிக்கப்பட்டு....பொத்த குடும்பமும் Ego மற்றும் மற்ற Customers காண உணவு வகைகளை தயாரிக்கும் பணியில் இடுபடுகிறார்கள். இதன் இடையில் Health Inspector ஒருவர் அங்கு வருகை தர.....

கோபித்து செல்லும் அவன் காதலி வழியில் Gusteauவின் "Anyone Can Cook " புத்தகம் கண்டு மனம் மாறி மீண்டும் திரும்ப....Remy-யுடன் சேர்ந்து Egoவிற்க்காண உணவை தயரிக்க உதவுகிறாள்.

உணவு Egoவிற்க்கு மிகவும் பிடித்து போக,.. Remy தயரித்த உணவை Linguini தயாரித்தாக எண்ணி பாரட்டுகிறார்.ஆனால் Linguini உண்மையை சொல்ல சற்று குழ்ப்பத்தில் செல்லும் Ego.. விமர்சனத்தில் proclaiming " the chef to be "the finest in Paris" while neglecting to reveal the chefs' true identity என எழுதிகிறார்.

ஆனால் சந்தோஷ்ச நிகழ்வுகள் நீண்ட நாள் நிடிப்பதில்லை,தலைமை Chef-வும், Health Inspector-யும் சேர்ந்து உணவகத்தில் சுகதார கேடு இருப்பதாக சொல்ல உணவகம் சீல் வைக்க படுகிறது.Ego-வும் தன் வேலை இழ்க்கிறார்.


முடிவாக இவ்முவரும் சேர்ந்து Colette, Linguini and Remy சேர்ந்து "La Ratatouille" என்ற பெயரில் உணவகம் ஒன்றை தொடங்க...படம் சுபம் என் முடிகிறது.

நான் எழுதிய வார்த்தைகளை விட பார்த்தல் அசத்தல் என்று நினைக்கிறேன். காட்சிகள் சற்றும் தடுமாறமல் செல்கிறது. நினைத்தைச் செய்வதற்கு அடிப்படை, பிறப்பு, சிறப்புத் தகுதிகள் என்று எதுவும் தேவை இல்லை என்பது தான் படத்தின் அடிப்படைக் கரு.
தப்ப நீனைக்காதிங்க Pixer மீது இருந்த ஒரு நன்மதிப்பு சில காட்சிகளில் சற்று குறைபோயிற்று.. எத்தனை நாள் தான் Sentiment Touch-யோட படத்தை.... இரண்டு மணி நேரம் கவலை மறந்து தாராளமாகப் பார்க்கலாம். Pixar animation studios தயாரிப்பு என்பதால், தனியாக animationஐப் பாராட்டத் தேவை இல்லை தானே?....
My Rating: 9/10