October 24, 2009

KILL BILL- VOL I & II - விறுவிறுப்பான அதிரடி & பழிவாங்குதலும்



****IMDB RATING: (VOL-I)-8.2/10****TOP 250#143***

****IMDB RATING: (VOL-II-8.0/10****TOP 250#233***

சற்றும் ஒரு புள்ளியை கொண்டு 360 டிகிரி ஒரு வலையம் வரைந்து,அந்த வலையத்தை வலைமாக பார்க்கும் தட்டையான மனபாங்கு கொண்ட படைப்பாளிகிளுக்கு நடுவே வேறுகோணத்தில் அந்த வட்டத்தை புள்ளி, புள்ளியாக பிரித்து பார்க்கமுற்படுபவர்களை மனநிலை பிறழ்ந்தவன் என சமுதாயம் முத்திரை குத்தும்.

நாள் முழுதும் நடக்கும் நிகழ்ச்சிகளை மனது அட்டவணைப்படுத்துகையில் சில காட்சிகள் முன்னுக்கு பின்னாக பதியும், காலக்குழப்பம், காட்சிக்குழப்பம் என ஒரு தெளிவான அட்டவணை அமைய சற்று நேரம் எடுத்துக்கொள்ளும்.


அப்படி ஒரு தேர்ந்த புதிரைப்போல மிகுந்த ஆவலை நம்முள் கிளர்த்தும் திறன் கொண்டவை Quentin-னின் படைப்புகள். திரைமொழி அரிச்சுவட்டில் ஒரு திரையில் பல புதிய வார்த்தைகளை, கதைவேறு, களம் வேறு, அனுபவம் வேறு என்று புகுத்திய பெருமை இவருக்கு உண்டு. தன் படைப்புகளுக்கென கட்டமைக்கப்பட்ட படிமங்களுடனே ஒவ்வொரு புதுமுயற்சியையும் தருவதால், பழைய மொந்தை பழைய கள் என ஒதுக்கிவிட முடியாது.

இப்படி பழைய மொந்தை பழைய கள்(ளில்) ஒன்று தான் 2003 மற்றும் 2004-ல் வெளிவந்த KILL BILL VOL I & II.. இரண்டாம் பாகத்தில் கதைக்கான பின்புலனும், முதல் பாகத்தில் அரைவாசி கதையும் சொல்லப்படும் மிகவும் ஆர்வத்திற்குரிய படம்.

முதல் பாகத்தில் மண ஒத்திகை கோலத்தில் கொல்லப்படும் ஒரு பெண், தப்பி பிழைத்து தன்னை கொன்றவர்களை பழிவாங்கும் கதை பழிவாங்கல் ஒரு கலையாக, மிக மிக அழகாக சொல்லப்பட்டிருக்கும் படம். அறுந்து விழும் கால்கள் கைகள் தலைகள், ரத்தம், கத்தி என படம் ஒருவித வன்முறை உலகில் நமை ஆழ்த்துகிறது.


இரண்டாம் பாகத்தில் அந்த மணப்பெண் யார் எதற்காக கொல்லபடுகிறால் என விரிகிறது. முதல் பாகத்தின் விறுவிறுப்போ, ஈர்ப்போ இந்த படத்தில் இல்லை, எனினும் பார்த்தாக வேண்டிய படம். இந்த படத்தைப் பற்றியோ அல்லது படத்தின் கதையையோ எழுத ஆரம்பித்தால், பக்கம் பக்கமாக எழுத வேண்டிவரும்.

இவரது படத்தில் அவர் கையாலும் அடிப்படை யுத்திகள் என்னை பொறுத்த வரை:

*கேமராக்கோணம் என பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் மிகவும் இயல்பான கோணங்கள் ஆனால் பாத்திரங்கள் வித்தியாசமான கோணங்களில் தென்படுகிறார்கள்.
*கூர்மையான வசனம், இயல்பான மொழியில் பக்கம் பக்கமாக பேசும் பாத்திரங்கள் பார்க்கும் போது நமக்கு எதோ ஒரு நாவல் படிப்பதை போன்ற உண்ர்வு வரும்..
*கதைக்களத்தில் நம்மை மெதுமெதுவாக மூழ்கடிக்கும் அவசரமற்ற கதைநகர்த்தல்.
*பெண்களுக்கு அதிக முக்கியத்துவம்.
*ஒருவர் பேசும்போது, பேசுபவரி விட்டு கவனிப்பவரை காண்பிப்பது.
*ஒரு படைப்பிற்கும் அடுத்த படைப்பிற்கும் படிமங்களின் மூலம் தொடர்பு ஏற்படுத்துவது.
*பழைய இசையின் மீதான் அதீத விருப்பம். எப்போழுதும் கார், பப்’களில் வழியும் jAZZ, Country types.

இவரது மற்ற படைப்புகள்: Pulp Fiction, Resrvior Dogs, Jackie Brown, Death Proof & Inglourious Basterds.


மனதை உருக்கும் படங்கள் ஆயிரம் இருக்கிறது. வெவ்வேறு மொழிகளில், அவரவர் கலாச்சாரத்தை முன்வைத்து அவை செல்லும் கருத்துக்கள் ஆயிரம் இருக்கலாம். Quentin-னின் படைப்புகள் அத்தகையன அல்ல. நிச்சயம் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் ஒரு மிக சிறந்த சினிமா அனுபவத்திற்காக..

திரையுக்தி, ஒருவித அழகியல் வன்மம், அதிர்ச்சி எனும் பிரிவிகளில் தவிர்க்க முடியாத இயக்குனர். அவரின் அனைத்து படங்களையும் நீங்கள் ரசிக்கலாம். திரையனுபவத்தின் இன்னொரு பரிமாணம் Quentin Tarantino

My Rating: 8.5/10

October 20, 2009

Eternal Sunshine of the Spotless Mind - நினனவுகளை தொலைத்தல்



****IMDB RATING: 8.5/10****

நாம் எல்லோரும் எதோ ஒரு தருணத்தில் இந்த கேள்வியை நம்மை நாமே கேட்டுக்கொள்வோம், இந்த வாழ்க்கையை
நாம் எல்லோரும் எதோ ஒரு தருணத்தில் இந்த கேள்வியை நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்,......

இந்த வாழ்க்கையை நாம் எப்போழுது வேண்டுமானலும் அடித்து திருத்தி எழுத முடியுமென்றால்? நினைவுகளை நம்மால் அழிக்க முடியுமானால்? மீண்டும் வாழ்வதற்கான வாய்ப்பு கிடைத்தால்?...... அப்படி ஒரு களத்தை கொண்டு 2004-ல் வெளிவந்த திரைப்படம் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற திரைப்படம் தான் Eternal Sunshine of the Spotless Mind.


Joel & Clementine-னும் இருவேறு துருவங்கள். இருவரும் தற்செயலாக சந்தித்து காதல் வயப்படுகின்றனர். சீராகச் செல்லும் அவர்களது உறவில் சிறு சிறு ஊடல்கள். சண்டைகள். எதற்குமே எளிதில் உணர்ச்சி வசப்படும் Clementin Joel-லுடனான உறவைத் துறக்க நினைக்கிறாள்.

Lacuna என்ற நிறுவனம் மூளையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவுகளை மட்டும் அழிப்பதை அறிந்த Clementine அவர்கள் மூலமாக Joel குறித்த நினைவுகளை அழித்துவிடுகிறாள்.

இதை நண்பர்கள் மூலம் அறியும் Joel தானும் அதே நிறுவனத்தின் மூலமாக Clementine-னின் நினைவுகளை அழிக்கச் செல்கிறான். தற்காலத்தில் இருந்து ஆரம்பித்து கடந்த கால நினைவுகள் அழிக்கப்படுகின்றன. அவன் Clementine-னுடன் கழித்த இனிமையான பொழுதுகள் அவன் ஆழ்மனதிற்கு தெரிகின்றது. அவன் Clementine-னை முழுமையாக இழக்கப் போவதை உணர்கிறான். அவளின் நினைவுகளை அழியாமல் காப்பதற்கு முயல்கிறான்.

அவன் அதில் வென்றானா, கடந்த கால நினைவுகள் அழிந்த க்ளெம்ன்டைனும் Joel -லும் மீண்டும் இணைவார்களா?........

படத்தில் Joel -Clementine-ன் காதலைத் தவிர Lacuna நிறுவனத்தின் தலைமை மருத்துவருக்கும் அதில் பணிபுரியும் மேரிக்கும் இடையேயான உறவு ஒரு சிறுகதை. இது சற்றும் எதிர்பாராத நேரத்தில் திரைக்கதையில் ஒரு திருப்பத்தைக் கொண்டு வரும் கிளைக்கதை.

அதேபோல் Clementine-னின் நினைவுகளை அழித்த Patrick அவள்பால் ஈர்க்கப்பட்டு Clementine Lacuna நிறுவனத்திடம் ஒப்படைத்த Joel -லின் அன்பளிப்புகளைக் கொண்டே அவளது அன்பைப் பெற முயற்சிப்பது சுவாரசியம்.


என்னை மன்னிச்சுடுங்க!.....இந்த படத்தின் முழுக்கதையும் கூறிவிட்டால் படம் பார்க்கும்போது அடுத்தடுத்த காட்சிகள் தரும் ஆச்சரியங்களைத் தவறவிடக்கூடும்.

கதாநாயகன் Joel-யாக Jim Carrey நடித்திருக்கிறார். Jim Carrey -யின் வழக்கமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் இருந்து வெகுவாக மாறுபட்ட Joel கதாபாத்திரத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் வாழ்க்கையில் விரக்தியடைந்த இளைஞனாகவும் நினைவுகள் அழிக்கப்படும்போது அதை தடுத்து நிறுத்த துடிக்கும் ஆழ் மனதின் மூலமாக Clementine-னின் நினைவுகளை அசைபோடும் போதும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

Kate Winslet Clementine-னாக நடித்திருக்கிறார். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு வேகமாக பேசுவதிலும் முகபாவங்களை சட்டென மாற்றுவதிலும் சிறப்பாக செய்திருக்கிறார். இந்த படத்திற்காக சிறந்த நடிக்கைக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். Kirsten Dunst, Elijah Wood, Mark Ruffalo ஆகியோரும் நடித்துள்ளனர்.

காலத்தில் முன்பின்னாக செல்லும் காட்சியமைப்புகள் பார்வையாளர்களுக்கு குழப்பம் ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளன. Clementine கதாபாத்திரத்தின் மனநிலைக்கு ஏற்றவாறு அவர் தலைமுடி நிறத்தையும் மாற்றிக்கொள்வது போல் அமைத்திருப்பது காட்சி நடக்கும் காலத்தை எளிதாக அறிய உதவுகிறது. கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் திரைக்கதையில் அடுத்தடுத்து ஏற்படும் திருப்பங்களும் நம்மைப் படத்துடன் ஒன்றவைக்கின்றன.

ஒவ்வொரு முறையும் இந்த திரைப்படம் குறித்து எழுத நினைத்து ஆரமிக்க இந்த படம் குறித்த நினைவுகள் என்னை கட்டிப்போட்டு விடுகின்றன.

நினைவுகளை அழிப்பது குறித்தும், இந்த படத்தின் கதாபாத்திரங்கள் குறித்தும் காதல் ஏற்படுத்தும் ஆச்சரியங்கள் குறித்துமான சிந்தனைகள் மனதை ஆட்கொள்கின்றன. உலகில் யாராலும் எளிதில் தீர்க்க முடியாத புதிர் மனித மனம். அதை விடக் கடினமான புதிர் காதல் தான் இல்லையா?.......

October 6, 2009

ஈரம் - சமூக செய்தியோடு ஒரு திர்ல்லர்..


தமிழில் சமிபத்தில் நான் கண்ட மெகா படங்கள் எல்லாம் என்னை கவிழ வைக்க.....சிறிய செலவில் கதையை மட்டும் நம்பி வெளிவந்த எனக்கு பிடித்த படங்கள் நாடோடிகள், சுப்பிரமணியபுரம், யாவரும் நலம்,......இப்போது இந்த பட்டிலில் இடம் பிடித்த படம் தான் "S" பிக்ச்சரிலிருந்து வெளிவந்திருக்கும் "ஈரம்"தமிழில் மீண்டும் ஒரு தில்லர்.

சிந்து மேனன் இறப்பதிலிருந்து கதை தொடங்குகிறது.........

கள்ள காதல் தெரிய வந்த அவமானம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டதாக என்று அப்பார்ட்மென்ட் அக்கம் பக்கத்தினர் முதல், சிந்துவின் கணவன் 'நந்தா' வரை நம்புகின்றனர்.

இந்த சம்பவத்தை விசாரிக்க வரும் அசிஸ்டென்ட் கமிஷனர் 'ஆதி'. சிந்துவின் முன்னாள் காதலன். சிந்து இவரது முன்னால் காதலி என்பதால் இவர் கொஞ்சம் அதிகமா அக்கரை எடுத்து கொள்கிறார்.


பின்பு அந்த அப்பார்ட்மென்ட்டில் இருக்கும் சிலரும் தொடர்ந்து சாக தொடங்க, போலிசின் கவனம் தீவிரமாகிறது. எல்லா மரணத்திலும் இருக்கும் ஒரே தொடர்பு தண்ணீர். படம் மரணங்கள், விசாரணை, சிந்துவை திருச்சியில் கல்லூரியில் படித்த போது காதலித்த ஆதியின் நினைவுகள் என்று மாறி மாறி அழகாய் செல்கிறது.

ஒரு கட்டத்தில், இந்த மரணங்களுக்கு காரணம் "தண்ணீர்" என்னவென்பதை ஆதி அறிகிறார்.
என்ன நடந்தது? என்ன காரணம்? "Invesgation Begins".......

படத்தில் எனக்கு பிடித்ததே படத்தை குளிர்ச்சியா அழகா காட்டுது. மேலும் படத்தின் சுவாரஸ்யம் கெடாமல் படத்தை கொண்டு சென்றது.படத்தின் பின்னனி இசையும், ஒளிபதிவும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. ஸ்பெஷல் எபெக்ட்ஸ் டெக்னிக்கலா நல்லா இருக்கு.

படத்தின் மிக முக்கியமான கேரக்டர் தண்ணீர். அதுவும் செமையா இருக்கு படம் முழுதும். நாயகன் ஆதி செம ஸ்டைலா இருக்கிறார். நல்லாவும் நடிச்சிருக்கிறார். நந்தா திரையில் காதல் & நகைச்சுவை பார்த்த எனக்கு இதில் அழுத்தமான நடிப்புடன் கொஞ்சம் வித்தியாமாக தெரிகிறார்.

சிந்து மேனன், சரண்யா இவங்களும் நல்லா பண்ணி இருக்காங்க. (என்னை பொறுத்த வரையில் சிந்து இந்த ப்டத்தில் கொஞ்சம் அழகாய்.......!)

படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள், அதில் ஒன்று தீம் Music. இருக்கும் 'தரை இறங்கிய' மிக அழகான வரிகளை கொண்ட மிக அழகான பாடல்.

படத்தின் சில குறைகள் இருக்கு. படத்தின் நீளம் போன்றவை. ஆனா மேக்கிங் அதை மறைக்கிறது. சில கிளிஷே காட்சிகளை தவிர்த்திருந்தாலும், திர்ல்லர் படத்தில் அப்பார்மேன்ட்டை கீழிருந்து மேலாக எடுத்து போன்ற கிளிஷேக்களையும் தவிர்த்திருந்த்திருக்கலாம்.

படத்தை இன்னொரு பாதையில் பார்த்தால்........

பெண்களுக்கு எதிரான சமூக அவலத்தை படமாக்கி இருக்கிறார்கள். மேலும் இன்றைய நகர கலாச்சாரத்தில் எங்கோ நடக்கும் சில தப்புகளுக்கு, சில அப்பாவி பெண்களும் தவறுதலாக பலியாகின்றனர் என்பதையும்.... இந்த நுகர்வு கலாச்சாரத்தில் மனிதர்களின் குணங்கள் பற்றியும் பேசுகிறது "ஈரம்"- மனதில் ஈரம் இல்லாத மனிதர்களுக்காக.......


My Rating : 8.5/10