December 2, 2009

THE OTHERS (2001)-தில்லர் ஒரு புதிய கோணத்தில்



****IMDB RATING:7.8/10****



ரொம்ப நாளா... பதிவு ஏதும் போட முடியல... உண்மையை சொன்னால் இப்போழுது எல்லாம் படங்கள் பார்ப்பது குறைவு.. இருந்தும் என் பதிவில் போட ரொம்ப நாளாய் எழுத நினைத்த ஒரு படம் ..

நாம் வாழும் வீட்டில் நம் கண்ணுக்கு தெரியாமல் மற்றொரு குடும்பமும் வாழ்ந்து வந்தால்? அதுவும் அவர்கள் அனைவரும் இறந்தவராக இருப்பின்....?

வழக்கமான பேய்ப்படங்கள் போல் அல்லாமல், வெறும் அமைதியை வைத்தே மிரட்டுகிறார் டைரக்டர் Alejandro Amenabar....ரத்தம், கொலை, கொடூரமான மேக்கப், துரத்தும் மர்மப்பேய், இவை எதும் இல்லாமல் நம்மை மிரட்டும் த்ரில்லர் திரைப்படம் "THE OTHERS".

முழுப்படமும் ஒரே வீட்டுக்குள் நடந்து முடிகிறது.
இரண்டாம் உலகப்போரின் முடிவில் தொடங்குவதாய் கதை. தன் வீட்டில் வேலை செய்து வந்த பணியாட்கள் அனைவரும் திடீரென்று ஒரு நாள் காணாமல் போக, புதிதாக வரும் மூன்று பணியாட்களுக்கு வீட்டை சுத்தி காண்பிப்பதிலிருந்து ...... ஒவ்வொரு அறைக்கும் செல்லும் முன் முன்னிருந்த அறையை பூட்டிவிடுகிறார் Grace. காரணம் அவளின் இரு குழந்தைகள்... Grace-ன் குழந்தைகளுக்கு Photo sensetive அலர்ஜி, எனவே பகல் வேளைகளில் அவர்கள் இருக்கும் அறைகளின் திரைகள் எப்போதும் மூடப்பட்டே இருக்கும். அறைகள் அனைத்தும் பூட்டபட்டே இருக்க வேண்டும். இதனாலேயே படம் முழுவதும் விளக்கு வெளிச்சத்திலேயே நகர்கிறது. ஆரம்பம் முதலே Grace-ன் காரக்டர் சற்று வித்தியாசத்துடனே கையாளப்படுகிறது. அதே போல் வரும் மூன்று பணியாட்கள், சற்று மர்மத்துடனே நடமாடும் ஆட்கள்.

முதல் இருவது நிமிடங்கள் படம் வெகு அமைதி. Anne, Graceயிடம் இந்த வீட்டில் நம்மை தவிர இன்னும் சிலர் இருப்பதாக கூறும்போது தான் படம் சற்று விறுவிறுப்புடன் தொடங்குகிறது. Victor என்ற சிறுவனை தான் அடிக்கடி பார்ப்பதாகவும் அவனுடன் பேசுவதாகவும் சொல்லும் Anne-யை நம்ப மறுக்கிறாள் Grace. பொய் சொல்வதாக தண்டிக்கவும் படுகிறாள் Anne .... Victor அவ்வப்போது Anne-ன் கண்களுக்கு மட்டும் காட்சியளிக்கிறான். இது அவனுடைய வீடு, நீங்கள் இந்த வீட்டை உடனே காலி செய்ய வேண்டும் என்றும் தெரியப்படுத்துகிறான். முதலில் Anne சொல்லும் கதைகளை நம்ப மறுக்கிறார் Grace, ஆனால் அதற்க்கு பிறகு வரும் நிகழ்வுகளால், Grace Anne சொல்வது உண்மை தானோ என நம்ப தொடங்குகிறாள்.

Anne தினமும் இவர்களை இந்த வீட்டுக்குள் பார்ப்பதாக நான்கு உருவங்களை ஒரு தாளில் வரைந்து காண்பிக்கிறாள். ஒரு அப்பா,அம்மா மற்றும் சிறுவன் Victor. இவர்களுடன் சூநியிக்காரி போல் இருக்கும் ஒரு கிழவி. யார் அவர்கள் என்ற ஆராய்ச்சியிலும் சிறிது நேரம் இறங்குகிறார் Grace.



யார் இந்த நான்கு பேர் ? மூன்று பணியாகளின் மர்மங்கள் ? Grace-ன் வித்தியாசமான கேரக்டரிசம் எதனால்...? - இவைதான் மீதிப் படம்.


படம் நகர நகர, எப்படி முடியுமோ என்று எதிர்பார்ப்பு கடைசி நிமிடங்கள் வரை கூடிக்கொண்டே தான் போகிறது. கடைசியில் படத்தின் முடிவு படு வித்தியாசம்.

படத்தின் மூழுக்கதையும் எழுத வார்த்தைகள் வரவில்லை..நான் பார்த்த தில்லர் படங்களில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று..படத்தில் குறிப்பிட பட வேண்டிய விஷயங்கள்:

*மொத்தமே ஆறு கேரக்டர்ஸ் தான். இந்த ஆறு கேரக்டர்ஸ் நடிப்பு oowh...குறிப்பாக குழந்தைகள் நடிப்பு.. பிரதான கேரக்டர் Grace-யாக (Nicole Kidman).

*காமெரா மற்றும் படத்தின் பின்னனி இசை படத்தின் உயிர் நாடி என்றே சொல்லலாம். அந்த தனி வீடு, அது அமைந்துள்ள பனி மூட்ட லொகேஷன்,



*என்ன படத்தின் சில காட்சிகள் Sixth sense படத்தை நினைவூட்டுக்கிறது.



*குழந்தையின் அழுகுரல், பியானோ வாசிப்பது இந்த இரு காட்சிகளும், அற்புதம்.
etc etc. கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்...!!

3 comments:

Unknown said...

நல்ல பதிவு... word verification ah.. off பண்ணுங்க...

அஷ்வின் நாரயணசாமி said...

@ பேநா மூடி

முதன்முறையாக என் வலை தளத்திற்கு வந்தமைக்கு நன்றி..தொடர்ந்து வாருங்கள்...

Switch off the word verification.

வெடிகுண்டு வெங்கட் said...

நல்ல பதிவு அஷ்வின்.

தொடருங்கள்.

நேற்று வேட்டைக்காரன் படத்தின் சிறப்பு காட்சி நடைபெற்றது. அதில் சினிமா உலகின் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில் நம்முடைய ஆல் டைம் பேவரிட் காமெடியர் (ஒரு மரியாதை தான்) கவுண்டமணியும் அடக்கம். அந்த படத்தை பார்த்து விட்டு அவருடைய விமர்சனம்.


வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
வேட்டைக்காரன் - கவுண்டமணி சிறப்பு விமர்சனம்