November 24, 2010

The Disappearance of Alice Creed (2009) ஒரு கடத்தல் மிக நேர்த்தியாய்....

எல்லோரும் நலம் உடன் இருப்பீர்கள்...நீண்ட நாட்களுக்கு பிறகு சி(ச)ந்திக்க வருகிறேன் ஒரு சிறந்த படத்துடன் என்று நம்புகிறேன்.

இந்த படத்தை பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாள் நீனைவில் இருந்தாலும் சமீபத்தில் என்னை ( நிறைய மக்களை பாதித்த ஒரு சம்பவம்).சமீபத்தில் கோவையில் பணத்திற்காக இரண்டு பள்ளி குழந்தகளை கடத்தி கொலை மற்றும் ஆந்திராவில் ஒரு சிறுமியை கடத்தி அடுப்பில் உயிரோடு எறித்ததும் நடந்த இந்த கொடூர கடத்தல் கொலைகளை பத்திரிக்கையில் எல்லோரும் படித்த செய்திதான்.. இந்த சின்ன குழந்தைகளின் போட்டோவை பார்த்து விட்டு நாம் எல்லோரும் பரிதாபபட்டதும் நம் நினைவுக்கு வரலாம்...

இந்த சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்தன... இப்படியும் மக்கள் இருக்கதான் செய்கிறார்கள் இந்த சமுதயத்தில்....எல்லாம் தெரிந்தும் வாழ்க்கையை பணயம் வைத்து கடத்தல் நாடகம் தினமும் அரங்கேறியபடி உள்ளது எல்லாம் பணத்துக்காக.....

THE DISAPPERANCE OF ALICE CREED-கதையும் இது போல ஒரு கதைதான். சரி-படத்தின் கதைக்கு வருவோம்......

கடத்தலில் இரண்டு வகை இருக்கின்றது.. ஒன்று பணத்தை வாங்கி கொண்டு கடைசியில் உயிரோடு விட்டு விடுவது.. இரண்டாவது பணத்தை வாங்கி கொண்டு எப்படியும் நம்மை காட்டிகொடுத்து விடுவார்கள் என்ற பயத்தில் கடத்தியவரை கொன்று விடுவது...

விக் & டேனி இரண்டு பேரும்... ஒரு வேன் திருடுகிறார்கள்...நம்பர்பிளேட் மாற்றபடுகின்றது...கடைக்கு சென்று சாமான்கள் வாங்குகிறார்கள்..உள்ளே என்ன கத்தினாலும் வெளியே கேட்காதது போல் ஒரு ரூம் அதில் ஒரு கட்டிலையும், அதில் ஒருவரை கட்டி போடுவதற்கு ஏற்றது போல் எல்லாம் ரெடி செய்து வைக்கிறார்கள்...

எல்லா முடிந்ததும் ஆலிஸ் என்ற பண்ணகாரர் வீட்டு பெண்ணை கடத்தி வருகின்றார்கள்..

கடத்தி வந்த பின் ஆலிஸ் சத்தம் போட்டாலும் வெளியே கேட்காத அறையில் அடைக்கபடுகிறாள்... அவள் எப்படியும் தப்பிவிடக்ககூடாது என்பதால் கை, கால்களை... கட்டிவிட்ட போதிலும் தங்களிடம் பேசி ஏதாவது மனதை மாற்றிவிடுவாள் என்பதால், வாயில் பால் கேங் வைத்து கட்டி விடுகிறார்கள்...

ஆலிஸ்யிடம் தெளிவாக சொல்லபடுகின்றது.. உன்னை துன்புறுத்துவது எங்கள் நோக்கம் அல்ல.. எங்களுக்கு வேண்டியது பணம் என்று.....

பின்.... கத்திரிக்கோல் எடுத்து ஆலிஸ்-யின் உடைகளை களைந்து முழு நிர்வாணமாக்குகிறார்கள்.. அவளின் பிறப்பு உறுப்பு மேல் ஒரு நியூஸ் பேப்பர் வைத்து மறைத்து விட்டு... அவளை அரைநிர்வாணமாக புகைபடம் எடுத்து அதனை அந்த பெண்ணின் அப்பாவுக்கு அனுப்பிகின்றனர்...

மீண்டும் ஆலிஸ்க்கு வேறு உடை அணிவிக்கின்றனர்.. அந்த உடை கூட எளிதில் அகற்றலாம் அது போல ஒரு உடை... அந்த பெண்ணின் கண்ணை பார்த்தால் இரக்கம் வரும் என்பதால் கறுப்பு துணி தலையில் போட்டு மூடுகின்றார்கள்..

வீடியோவில் துப்பாக்கி முனையில் அலிசை மிரட்டி அவள் அப்பாவிடம் கதறி பணம் கேட்க வைக்கின்றார்கள்....

இதில் ஒரு கட்டத்தில் விக்கி வெளியே செல்ல .. போகும் போது டேனியை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு போக...

டேனி தனியே இருக்கும் போது தனக்கு மலம் வருகின்றது என்று ஆலிஸ் கையால் செய்கை செய்கின்றாள்..... ஒரு பக்கெட் மற்றும் ஒரு பேப்பர் நாப்கின் பேப்ப்ர் ரோல், எடுத்து போய் அவள் பக்கத்தில் வைத்து விட்டு துப்பாக்கி முனையில் அவள் கால்கள் மற்றும் ஒரு கை விலங்கை அவுத்து விட்டு வாயில் இருக்கும் பாலை எடுத்து விடுகின்றான்...

அவள் உடைகளை களைந்து அந்த பக்கெட்டில் உட்கார. துப்பாக்கி முனையில் அவளை பார்த்துக்கொண்டே இருக்க... ஆலிஸ்…. டேனியிடம்... இப்படியே பார்த்துக்கொண்டு இருந்தால் எனக்கு எதுவும் வராது என்று சொல்லி அவனை திரும்பி நிற்க்க சொல்ல, டேனியும் பாவம் பார்த்து திரும்பி நிற்க்க...

ஆலிஸ் அப்படியே திரும்பி அந்த பாக்கெட்டை சத்தம் காட்டாமல் எடுத்து அவன் தலையில் ஒரு போடு போட்டு விட்டு அவனிடம் இருக்கும் துப்பாக்கியை பறித்து வைத்துக்கொள்கின்றாள்... இப்போது டேனி அலிஸ்ன் துப்பாக்கி முனையில்... அவள் தப்பி இருக்கலாம் அல்லவா??? இல்லை தப்பிக்க முடியலை ஏன்....

நிறைய ஷாட்ஸ், நிறைய டூவிஸ்ட்.. படம் பார்க்கும் போது சஸ்பென்ஸ் போய் விடும் என்பதால் நான் விரிவாய் சொல்லவில்லை...

இந்த படத்தின் சிறப்பு என்ன தெரியுமா???

படம் முழுக்க.... மூன்றே பேர்தான்.. அப்புறம் படத்தில் பயணிக்கும் கேமரா...

அதாவது முதலில் ஒரு டிப்பார்ட்மென்ட் ஸ்டோர் காண்பிக்கும் போது...அப்பா போனில் பேசுவது ... ஏதிர் வீட்டு அப்பார்ட்மென்ட்டில் கதவை திறந்து ஆள் போவது.. பார்க்கிங் ஏரியாவில் யாராவது நடந்து போய் கார் எடுப்பது...என்று லோ ஆங்கிளில் கேமரா பயணிக்கும் போது ஒரு ஆள் இருப்பது போல வரும்.... ஆனால் ஒரு ஆள் கூட பிரேமில் வராதது போல் எடுத்து இருக்கின்றார்கள்... அதை தவிர்த்து பார்த்தால் படம் முடியும் வரை... அந்த மூன்று பேர்தான்.

அது போலான திரைக்கதை மற்றும் பிரேமிங்...அபாரம்...

முக்கியமா கடத்துவதற்கு முன் டென்ஷனா விரல்கள் நடுக்குவது...ரூம் ரெடி செய்யும் போது வைத்து இருக்கும் ஷாட்டுகள்....

ஆலிஸ் உடம்புல கேமரா டிராவல் ஆகும் போது... அவள் தொப்புள் சுற்றி இருக்கும் எல்லா ரோமங்களும் சிலிர்த்து இருப்பது போன்ற காட்சியும்...

ஆலிஸ்ன்... மூத்திரத்தை டேனி பிடித்துக்கொண்டு போய் அதை டாய்லட்டில் கொட்டும் போதும் அதன் மஞ்சள் தன்மையும்...டாய்லட்டி தோட்டா பாகத்தை போட்டு விட்டு பிளஷ் செய்ய, அது போகாமல் அடம் பிடிக்க, என பல காட்சிகளால் நாமும் அந்த கதாபாத்திரங்களுடன் பயணிப்பதை தவிர்க்க முடியவில்லை....

கிளைமாஸ் என்னவென்று சொல்ல....இயக்குனரே சபாஷ்...

இதுல ஒரு கிஸ்சிங் சீன் அந்த சீனை நீங்க வாழ்க்கையில மறக்கவே முடியாது...மற்றும் டேனிக்கும் அலிஸ்க்கும் ஒரு டுவிஸ்ட் மேட்டர் சீன் வச்சி இருக்காங்க..அது போலான காட்சி அது...

ஆலிஸ்யாக நடித்து இருக்கும் Gemma Arterton... நடிப்பு செம நடிப்பு.... படம் முலுக்க கட்டி போட்டு இருப்பது போலான காட்சிதான் பின்னி எடுத்து இருக்குது பொண்ணு....

குறிப்பு: படம் டோரன்டோ,லண்டன் டிரேபிகா என மூன்று உலகபடவிழாவில் திரையிடபட்டு ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்றது.

பார்த்தே தீர வேண்டியபடங்களின் ஒன்று….. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் கருத்துகள் போட மாறகதீர்கள்………………………………

August 27, 2010

DOWNFALL - 2004 ( ஒரு சர்வாதிகாரியின் அந்திமகாலம்)



இந்த படம் பார்த்து முடித்து போது மனதில் நான் வடிவமைத்திருந்த ஹிட்லர் அந்த மனிதனின் வேறுமுகம் எனக்கு தெரிந்தது உலகத்தையே தன் வசபடுத்த நினைத்தவனின் வாழ்க்கையை இந்த படத்தில் பார்த்த போது இந்த மாமனிதன் மீது மிகப்பெரிய மதிப்பு வந்தது....இப்படியும் ஒரு மனிதனின் முன்னேற்றம் இருக்குமா? என்று என்னை வியக்கவைத்தன...

ஹிட்லர்- ஜெர்மன் மட்டுமே உலகை ஆள வேண்டும் என்று இரண்டாம் உலக போரை ஆரம்பித்து வைத்து விட்டு 5 கோடி பேரின் இறப்புக்கு கரணமாய் இருந்து, போதமைக்கு 50லட்சம் யூதர்கள் இறக்க காரணமாக இருந்த கொடுர மிருகம் என்பதாய் நாம் எல்லோரும் மனதில் வைத்து இருந்த பிம்பம்.

இரண்டாம் உலக போரை மையபடுத்தி நிறைய படங்கள் வந்து விட்டன...அதில் ஹிட்லரின் கொடுரத்தை சொல்லி அழுத படங்கள் ஏராளம்

முதல் உலக போரில் ஜெர்மனில் இராணுவ சிப்பாய் இரண்டாம் உலக போரின் போது ஜெர்மன் நாட்டை வழி நடத்துபவர் என்றால் அந்த வளர்ச்சியை யோசித்து பாருங்கள்...

ஒரு நாட்டையே ஆண்டவன் எல்லாவ்ற்றிலும் வெற்றி...அவனுக்காக எதையும் செய்ய கண் எதிரில் தயராக ஒரு கூட்டம்... இப்படி இருந்தால் ஒருவனுக்கு என்ன தோன்றி இருக்கும்??? உலகத்தின் பிதா நான் தான் என்று வாழ்ந்த ஒரு சர்வாதிகாரியின் கடைசி நிமிடங்கள்தான் இந்த படம்.... ஆனால் நன்றாக வாழ்ந்தவன் வீழ்வதை ஏனோ மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது...காரணம் அது போல இந்த படத்தை எடுத்து இருக்கின்றார்கள்...

இரண்டாம் உலக போரின் போது ஜெர்மன் படைகள் ரஷ்ய படைகளிடம் தோல்வியை சந்தித்து பெர்லினை நோக்கி முன்னேறி வந்து கொண்டு இருக்க பதுங்கு அறையில் பதுங்கி இருத்த ஹிட்லர்.....அவர் சொல்வதை குறிப்பெடுத்து அதனை டைப்செய்து கொடுக்க சில பெண்களுக்கு நேர்முக தேர்வு நடப்பதில் துவங்கிறது படம்.

ஜெர்மன் தோல்வி செய்திகள் கேட்பதில் இருந்து... நாலாவது படையணி என்ன செய்து கொண்டு இருக்கின்றது ?என்று கேட்டு கத்துவதில் இருந்து...தீவிரவாதி, 40000 குழந்தைகள் கொன்றதில் பங்கு பெற்றவன், எழுத்தாளர், சர்வாதிகாரி, ஓவியன், அரசியல்வாதி, மது பழக்கத்தை விட்டவன்... நான்வெஜ் சாப்பிடாதவன்....என மாற்றும் இல்லாமல் தோல்வியால் துவண்டு திருமணம் செய்து கொண்டு,புதுமனைவியுடன் தற்கொலை செய்து இறப்பது வரை.... ஹிட்லரின் கடைசி காலத்தை நுட்பமாய் பதிவு செய்து இருக்கின்றது.

சமகாலத்தில் வாழ்ந்த ஒரு சர்வாதிகாரியின் அந்திமகாலம் எப்படி இருக்கும் என்பதை நம் கண் முன் நிறுத்தி இருக்கின்றார்கள்...

படத்தில் நான் ரசித்த காட்சிகள் சில... ஹிட்லராக Bruno Ganz வாழ்ந்து இருக்கின்றார்

நேர்முக தேர்வில் கலந்து கொண்டு ஹிட்லர் முதல் வருகையை ரொம்ப சிம்பிளாக பதிவு செய்தாலும் அந்த பெண்கள் கண்களில் காட்டும் அந்த ஆர்வம் உற்சாகம் வாய்ப்பே இல்லை...

பதுங்கு குழியில் இருக்கும் போது கூட போரிட்ட சிறுவர்களுக்கு மேடல் கொடுத்து உற்சாகபடுத்தியவன்...அந்த மெடல் கொடுக்கும் போது அந்த சிறுவர்களின் சந்தோஷத்தை பார்க்க வேண்டுமே???...

அப்படி ஒரு பெரிய சர்வாதிகாரியை, ஜெர்மனியில் வாழ்ந்த பல லட்சகணக்கான நேசிப்பை அந்த கண்களில் உள்ள ஆச்சர்யத்தின் மூலம் காட்சி படுத்தி இருப்பார்கள்...

இறக்கும் முன் நடக்கும் திருமணத்துக்கு, பயத்தில் முகத்தில் பவுடர் அதிகமாக அடித்துகொண்டு வரும் ஒரு காட்சி வாழ்கை முடிய போகின்றது என்று சலித்துகொள்ள அந்த ஒரு காட்சி போதும்...

பயம் வந்த பிறகு அதை காட்டிக்கொள்ளாமல் நடப்பது மிக அற்புதம்... எப்ப வேண்டுமானாலும் பிடிபடலாம் என்ற நிலையிலும் ஒருத்தனுக்கு தேச துரோகம் பட்டம் கொடுத்து அவனை சாகடிப்பதும் ஜெர்மனி & ஹிட்லர் வாழ்த்தி விட்டு சாவதும் அருமையான காட்சி.....

நிறைய இளைய படைவீரர்கள் இறந்து போய் விட்டார்கள்... பலருக்கு மருத்துவ உதவி இல்லை என்று சொல்லும் போது அறையில் உட்கார்ந்து கொண்டு.. அது அவர்கள் தலையேழுத்து அதற்கு தானே அவர்களை படையில் எடுத்தது என்று பேசுவது சுயநலத்தையும், கடைசி கட்ட திமிரையும் காட்டுகின்றது....

இன்னும் கொஞ்ச நேரத்தில் ரஷ்ய படையிடம் மாட்ட போகின்றோம் என்பது தெரிந்தும் பெரிய தலைகள் எல்லாம் தண்ணியை போட்டு விட்டு , பெண்களை அரைநிர்வாணமாக ஆடவிட்டு வேடிக்கை பார்பதும்... பலர் எதிரிலேயே உடலுறவு கொள்வதும் போகின்ற போக்கில் காட்டி இருப்பது அற்புதம்....எந்த உதவியும் இல்லாமல் பல வீரகள் இறந்து போவது... தலமை இல்லாமல் ஒரு சாம்ராஜ்யம் எப்படி எல்லாம் சின்னா பின்னமாகிவிடும் என்பதை மிக அழகாக காட்சி படுத்தி இருக்கின்றார்கள்...

இன்னும் நிறைய எழுதும் என்று ஆர்வம் இருத்தாலும்..... நேரமின்மை காரணத்தால் கடைசி ஒரு செய்தியுடன்.... ஹிட்லரோடு சமகாலத்தில் வாழ்ந்த படைதளபதிகள் பதுங்குழியில் இருந்த உதவியாளர்கள் என எல்லோரிடமும் பேசி அவர்கள் தந்த அடிப்படையில் இந்த படம் எடுக்கபட்டது

நான் படத்தை அவ்வளவு ரசித்தேன் நீங்களும் ரசிப்பீர்கள் என்று .. அதுதான் இந்த படத்தின் பலம்.

July 25, 2010

CHILDREN'S OF HEAVEN (1997)



நல்ல படம் எடுக்க லட்சம் லட்சமாக பணம் வேண்டுமென்று யார் சொன்னது?? ஒரு ஜோடி ஷூ போதுமென்பது மஜித்தின் வாதம்!

உலகதிரைப்பட பிரியர்களின் பட்டியலில் முக்கிய இடம்பெறும் தலைசிறந்த இயக்குனர். இவரது திரைப்படங்களில் இது தான் தேவையென்று என்ற வரையறைக்குள் அடங்காமல் ஒரு நிகழ்வை, சராசரி மனிதனின் வாழ்க்கை, அவன் வாழ்வின் ஒரு சில நாட்கள், சில மணிதுளிகளை அப்படியே சொல்லுவது இவரது பாணி. இவரது திரைப்படங்கள் வாழ்வின் விளிம்பு நிலை மக்களின் வாழ்வை சொல்லும் நகைசுவையோடு கூடிய கதைகளே மேலும் சொல்ல போனால்.... இவரது பல திரைப்படங்கள் உலக பிரசத்தி பெற்றவை

இந்த திரைப்படம் 95 நிமிடங்கள் மட்டுமே ஓடினாலும், நினைவில் அழுத்தமாக இடம் பிடிக்கிற படம். நான் பார்த்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று எனக்கு பிடித்தமான நான் கண்டு ரசித்த முதல் வேற்று மொழி திரைப்படம் Children of heaven இந்தப்படத்தை பற்றி பலர் எழுதியிருந்தாலும் நானும் எழுத வேண்டும் என்ற சின்ன ஆசை.

சரி படத்திற்கு வருவோம்,

அழகான பிங்க் நிற ஷூ ஒன்றை தைத்துக் கொண்டிருக்கிறார் ஒருவர். மீண்டும் அணிவதற்கு ஏதுவாக அதை மாற்றுகிறார் அதை பெற்றுக் கொண்டு புறப்படுகிறான் பத்து வயது இருக்கும் அலி.

உருளைக்கிழங்குகள் வாங்க காய்கறிக் கடைக்கு வெளியே ஷூ இருக்கும் தன்னுடைய பைகளை வைத்து விட்டு செல்கிறான். காய்கறிக்கடைக்கிறார் இதற்கு மேல் கணக்கில் வைத்துக் கொள்ள முடியாதென அடுத்த முறை பணத்தை கொடுக்குமாறு அலியிடம் சொல்கிறார்.

அழுகிய காய்கறிகளை அள்ளிச் செல்லும் தள்ளுவண்டி அங்கு வருகிறது. தவறுதலாக அந்த ஷூ இருக்கும் பை எடுத்துச் செல்லப்பட்டுவிடுகிறது. அம்மாவிடம் இதைப் பற்றிச் சொல்லுவதாக கூறிவிட்டு வெளியே வந்தால், ஷூக்களை காணவில்லை.., தேடிப் பார்க்கையில் தவறுதலாக காய்கறி கூடைகளை கீழே தள்ளிவிட காய்கறிக் கடைக்காரர் அவனை அங்கிருந்து துரத்திவிடுகிறார்.

வேகமாக வீட்டுக்கு ஓடுகிறான் அலி. தெருவில் நுழையும் போதே அவர்கள் வீட்டின் உரிமையாளர் வாடகை கேட்டு அம்மாவை சத்தம் போட்டுக்கொண்டிருப்பது தெரிகிறது. வீட்டின் உள்ளே அவனது ஆறு வயது தங்கை சாரா சில நாட்களுக்கு முன்னால் பிறந்த தம்பியை தூங்க வைத்துக்கொண்டிருக்கிறாள். தயங்கி தயங்கி அவளிடம் ஷூக்கள் தொலைந்ததை சொல்கிறான். அடுத்த நாள் தான் பள்ளிக்கு போகமாட்டேனென அழுகிறாள்.

அம்மாவிடம் இதை சொல்ல வேண்டாமென கெஞ்சுகிறான்.ஷூக்களை எப்படியும் கண்டுபிடித்துவிடுவதாக கூறுகிறான்.ஷூக்களை மீண்டும் தேட செல்கிறான்.

அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை என்று தெரிந்தும் அவளுக்கு எந்த உதவியையும் அலி செய்வதில்லை என்று அப்பாவுக்கு கோபம். அலியும் சாராவும் அமைதியாக வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருக்கிறார்கள். சாரா யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்துவிட்டு,

“நாளைக்கு நான் பள்ளிக்கு எப்படி செல்வது?” என்று நோட்டில் எழுதி அலியிடம் காண்பிக்கிறாள். அப்பா அம்மாவுக்கு தெரியாமல் இப்படி எழுதியபடி அவர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். இரானில் பெண்களுக்கு அதிகாலை முதல் மதியம் வரையும், ஆண்களுக்கு மதியம் முதல் மாலை வரை பள்ளி வகுப்புகள் நடைபெறும். ஆக, சாரா காலையில் அண்ணனுடைய ஷூவை அணிந்து கொண்டு பள்ளிக்கு போவதாகாவும், பள்ளி முடிந்ததும் வழியில் காத்துக்கொண்டிருக்கும் அண்ணனிடம் ஷூக்களை தந்துவிடுவதாகவும் முடிவு செய்கிறார்கள். இப்படியாக அப்பா அம்மாவுக்கு தெரியாமல் சமாளிக்கலாம் என்பது அவர்களின் எண்ணம்.இரு வெவ்வேறு கோடிகளில் இருக்கிறது இருவரின் பள்ளிகளும். பள்ளி முடிந்ததும் . வழியில் அண்ணன் காத்துக்கொண்டிருக்க மூச்சு வாங்க ஓடுகிறார்கள். யாருமில்லாத சந்து ஒன்றில் காத்திருக்கும் அலியும் அவளும் ஷூக்களை மாற்றிகொண்டு ஒரு வார்த்தை பேசாமல் எதிர் எதிர் பக்கம் ஓடுகிறார்கள் இருவரும்.

சில நாட்கள் இப்படியே ஒடுகிறது. ஒரு நாள் காலையில் பள்ளி வழிபாட்டு கூட்டத்தில் நின்றபடி தன் ஷூவையும் மற்றவர்களில் ஷூக்களையும் ஏக்கமாக பார்க்கிறாள் சாரா. வரிசையாக ஒவ்வொரு ஷூவாக பார்த்தபடி வருகையில் கண்ணில் படுகிறது அந்த பிங்க் ஷூ. இடைவேளையில் சாரா வெளியே வந்து அந்த மைதானம் முழுக்க இருக்கும் குழந்தைகளின் கால்களை பார்த்தபடி இருக்க ஒரு சிறுமி பிங்க் நிற ஷூ-வை அணிந்து இருக்கிறாள்.அவள் பெயர் ரோயா, இருவருக்கும் இடையே மலர்கிறது நட்பு.

வீட்டின் ஏழ்மையை அத்தனை சிறு வயதில் புரிந்துகொண்டு இந்த இருவரும் ஒரு ஜோடி ஷூவிற்காக படும் அவஸ்தைகளை கவிதைக்கு உரிய அழகோடு விவரிக்கிறது படம்!

ஒரு நாள் அப்படி அவள் ஓடுகையில் ஒரு ஷூ சாலையோர கால்வாயில் விழுந்து அடித்து கொண்டு செல்ல, சாரா அதை துரத்தி கொண்டு செல்லும் காட்சி நான் இதுவரை பார்த்திலேயே மிகச் சிறந்த காட்சி! கிழிந்த காலணியுடன் ஓடி பந்தயத்தில் வென்ற சிறுவனின் ரணப்பட்ட கால்களை, அவனது காயங்களை மீன்தொட்டியிலுள்ள மீன்கள் மெல்ல கடிப்பதுபோல அமைத்திருப்பார் சினிமாவில் கவிதை சொல்ல முடியும் என்பதற்கு அந்த க்ளைமாக்ஸ் அழுத்தமான உதாரணம்!

ஏழ்மையை இத்தனை அழகாக சொல்ல முடியுமா? அத்தனை அழகான சாராவும் பொறுப்பான அண்ணனாக அலியும், .சட் சட்டென சண்டை போடுவதும் சமாதானம் ஆவதும், சாமர்த்தியமாக ஷூ இல்லாமல் சமாளிப்பதும் அத்தனை அறிவும் அழகும் அக்குழந்தைகள்! உடம்பு முடியாத அம்மாவுக்கு உதவுவது, கஷ்டப்படும் அப்பாவிடம் ஷூ கேட்கக் கூடாது என்பதற்காக மேற்கொள்ளும் சாகசங்களென, தலைப்புக்கு ஏற்ப “CHILDREN'S OF HEAVEN”.

July 1, 2010

La Haine (1995) -"The Hate"


Three Young Friends... One Last Chance.....


இப்போழுதுதான் நேரம் கிடைத்தது.. உங்களை சந்திக்க என்னை பின்னுட்டி கொண்டு இருப்பவர்களுக்கு நன்றி

La Haine தற்செயலாகப் பார்க்கக் கிடைத்து மிகுந்த அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்த பிரெஞ்சு திரைப்படம்,

Vinz, அவனது நண்பர்கள் Saïd, & Hubert ஆகியோரின் கலவரத்திற்கு பின்னான 24 மணிநேர வாழ்க்கை திரையில்.....

Vinz, Saïd, & Hubert மூவரும் வேலையற்ற இளைஞர்கள். நண்பர்கள் ஆனாலும் மூவரும் தனித்தனி சுபவம் கொண்டவர்கள்

Vinz எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவன். எப்போதும் சண்டைக்குத் தயாராகயிருப்பவன்.

Hubert உடல்வலிமையுடையவன் என்றாலும் எந்த பிரச்சனையிலும் சிக்காது அமைதியான வாழ்க்கை வாழ விரும்புபவன். கலவரத்தில் தன் உடற்பயிற்சிக் கூடம் கொளுத்தப்பட்டதையும் அமைதியாக ஏற்றுக்கொள்பவன்.

Saïd எதைப் பற்றியும் கவலைகொள்ளாத மற்ற இருவர் அளவுக்கு முதிர்ச்சியடையாத சராசரி இளைஞன்.

இப்படி தங்கள் வாழ்க்கை தருணத்தில் ஒரு நாள் பாரிஸ் நகரின் புறநகர் பகுதியில் நடக்கும் கலவரத்தில் இளைஞன் போலீலால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். அக்கலவரத்தில் காவல் அதிகாரி ஒருவர் தன் கைத்துப்பாக்கியைத் தொலைத்துவிடுகிறார். அத்துப்பாக்கி தக்கப்பட்ட இளைஞனின் நண்பனான Vinz கையில் கிடைக்கிறது. அத்துப்பாக்கி தன்னிடம் இருப்பதாக Vinz சொல்லும்போது அதனால் பிரச்சனை ஏற்படுமென்றும் அதை தூக்கியெறியுமாறும் Hubert கூறுகிறான்.அதை மறுக்கும் Vinz மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நண்பன் இறந்தால் ஒரு போலீஸையாவது சுட்டுக் கொல்லவேண்டுமென்று கூறுகிறான்.

மூன்று நபர்களும் துப்பாக்கியுடன் பாரீஸுக்குச் செல்கின்றனர். அங்கு அவர்கள் பல வகையான மனிதர்களை சந்திக்கிறார்கள்.
இனவெறி கொண்ட காவல் அதிகாரி, அவருக்கு எதிர்மறையாக நல்ல காவல் அதிகாரி, குடிகாரர்கள், கொலைகாரர்கள், போதை மருந்து கடத்துபவன், செல்வந்தர்கள், இனவெறியாளர்கள், முன்னாள் போர்வீரன் என பல்வகை மனிதர்களை சந்திக்கிறார்கள். ஒவ்வொரு நேரத்திலும் அத்துப்பாக்கி பயன்படுத்தத் தூண்டும் சம்பவங்கள் நடக்கின்றன. படத்தின் ஓட்டம் & பதட்டம் அதிகரிக்கின்றது. படத்தின் இறுதி வரை இப்பதட்டம் நம்மை உட்கொள்கிறது.

இப்பதட்டம் இறுதிக்காட்சியில் உச்சத்தை அடைகிறது. சற்றும் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விதத்தில் வந்த இறுதிக்காட்சி அதிர்வை ஏற்படுத்தியது. அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை உங்களுக்கு..மன்னிக்கவும் படத்தின் இறுதிக்காட்சி இன்னும் சிலநாட்களுக்கு அடிக்கடி நினைவில் வந்தபடியிருக்கும். திரையில் கான்க....

மூன்று மைய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் Vincent Cassel, Hubert Kounde, Said Taghmaoui மூவரும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல்மொழியும் வசன உச்சரிப்புகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதைவிட அந்த கதாபாத்திரங்களில் வாழ்ந்துயிருக்கிறார்கள். அதிலும் Vincent (Vinz) தன் கையில் துப்பாக்கி இருப்பதால் தெனாவெட்டுடன் அலைவதும் பின்னர் துப்பாக்கியைப் பயன்படுத்த நேரும்போது பயம்கொள்வதுமென அட்டகாசமாக நடித்திருக்கிறார்.

வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் வலியவர்கள் மீதான பயம் வெறுப்பாக உருமாறும் நிலை சிறப்பாக பதிவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் முழுக்க கருப்பு வெள்ளையில் படமாக்கியிருக்கிறார்கள். வித்தியாசமான காமிரா கோணங்களும் காட்சியமைப்புகளும் ரசிக்கும்படி உள்ளன.

இப்படத்தின் திரைக்கதை என்னவென்று சொல்ல ஆரம்பத்தில் வேலையின்றி அரட்டைகளில் பொழுதைக் கழிக்கும்போது மெதுவாக நகரும் காட்சிகள் நண்பர்களின் கையில் துப்பாக்கி கிடைத்து பாரிஸுக்கு சென்றபின் அசுர வேகத்தில் செல்கின்றன.

இந்த மூன்று கதாபாத்திரங்களும் படத்தின் இறுதிக்காட்சியும் யாரையும் நியாயப்படுத்தாமல் உள்ளது உள்ளபடி படமாக்கியிருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது.

June 9, 2010

prayanam (Telugu)....


ரொம்ப நாட்கள் ஆகிறது இப்படி ஒரு சந்தோஷமாக ஒரு காதல் படத்தை பார்த்து...

இரண்டு மணிநேரத்தில் ஒரு பெண்ணை காதலிக்க வைக்க முடியுமா? முடியாது என்று இவுலகில் இல்லை..மனம் இருந்தால் எதையும் வென்றிட முடியும்.. ஒரு பெண்னை காதலில் வீழ வைக்க முடியாத.. நிச்சியம் முடியும் என்று சொல்லுகின்றது இந்த 2 அரை மணி நேர தெலுங்கு படம் பிரயாணம் (Prayanam )...

முன்பே சொல்லிவிடுகிறேன் (பின்னர் தீட்டாதீங்க) சிலருக்கு இந்த படம் பிடிக்காமல் போகலாம்.... ஆனால் என்னை பொறுத்த வரை ஒரு பில் குட் மூவி பார்த்த சந்தோஷ்ம்.

மலேஷியாவில் அழகு கலை டிகிரி படிக்கும் நாயகிக்கு எதிலும் Pratcial-லாக இருக்க வேண்டும் & பிடிக்கும்... நோ செண்டிமென்ட்.... ஆனால் நாயகனோ எதையும் Just like thatயாக எடுத்து கொள்பவன்.... நாயகன் தனது இருண்டு நண்பர்களுடன் சிங்கபூர் போக மலேசியா ஏர் போர்ட் வருகின்றான்...நாயகியோ இந்தியாவில் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்த பையனை பார்க்க ஹைதிராபாத் வருவதற்க்காக தனது தோழியுடன் ஏர் போர்ட் வருகின்றாள்...

பார்த்தவுடன் அவளை பிடித்து கண்டதும் காதல் கொண்ட நம்ம ஹீரோ அவளை சற்றே பாலோ செய்யும் போது அவளுக்கு இந்தியாவில் ஒரு பாய்பிரண்டு இருக்கின்றான்.... அவளுக்கு திருமணம் நிச்சய்க்கபட்டு என்பது தெரிந்து அவளை விடாமல் துரத்துகின்றான்... அதுவும் அந்த முதல் சந்திப்பு எப்படி காதலாக மாறி அவள் மனதில் இடம் பிடித்து அவள் வாயால் எப்படி காதலை சொல்லுகின்றாள் என்பதே படத்தின் கதை...

முதலில் அந்த பையனும் அந்த பெண்ணையும் பிடிக்கவில்லை... படம் ஆரம்பித்து பத்து நிமிடம்... கொஞ்சம் அயற்ச்சியை தருகின்றது... ஆனால் அதன் பிறகு இந்த படம் எடுக்கும் வேகம் அற்புதம்....ஏர் போர்ட்டில் முழுபடபிடிப்பும் நடத்துவது என்பது சாதாரான விஷயம் அல்ல... ஸ்டிவன் ஸ்பீல்பெர்க்கு எடுத்த டெர்மினல் படத்துக்கு அப்புறம் முழுக்க முழுக்க ஏர்போர்ட்டில் எடு்த்த படம் இது என்று தாராளமாக சொல்லிக்கொள்ளலாம்...

May 31, 2010

விடைபெறுகிறேன்.....


நண்பர்களே!!


அநேகமாக இதுவே எனது இறுதி பதிவாகவும் இருக்கலாம். இப்போது இருக்கும் வேலையில் மாற்றம் (வேலை போயிருச்சுனு இல்லைங்க) அடுத்த பணியிடம், தங்குமிடம் எதுவும் உறுதியாகாததால். மீண்டும் எப்போது அடுத்த பதிவு போடுவேன் என்று எனக்கே தெரியாது. கணினி பயன்படுத்தக்கூடிய அலுவலுகமோ + வலையில் ஏறும் வாய்ப்பு கிடைத்தால், மடிக்கணினியோ வாய்க்கும் காலத்தில் மீண்டும் நிச்சயம் எழுத்தை தொடர்வேன்.

அதுவரை நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.
இத்தனை நாள் ஆதரவு அளித்த அத்தனை நண்பர்களுக்கு நன்றி!!

:)) அன்புடன்
அஷ்வின்

May 8, 2010

நன்றிகள்.... (வாசகர்களகிய உங்களுக்கு)




வணக்கம், வணக்கம், வணக்கம்..........

என் வலைபூ படித்துக்கொண்டிருக்கும் வாசகர்களகிய உங்களுக்கு வண்க்கம். [வலைபூ-ல மூன்று தடவை வணக்கம் சொல்லிருக்கிறேன்னு யோசிக்கதீங்க, சன் டிவி காமெடி டைம் Archana style ல வண்க்கம் சொல்லிப்பார்தேன், அதான் மூன்று தடவை உங்களுக்கு வணக்கம்]

"ஏய், அடங்க மாட்டீயா நீ!" என்றது என் உள்மனம் உற்சாகத்திலும் சந்தோஷத்திலும்.

இது என் 25வது பதிவு!! அது மட்டுமல்ல இன்று என் வலைபூ பக்கம் வந்த வாசகர்களின் எண்ணிக்கை 1000 தண்டிவிட்டது.

என்னமோ பெரிய சாதனை செய்துவிட்டதாக நான் பெருமிதத்தில் தத்தளிக்க, என் மனம் என்னை அடக்கியது! :))

இது அவ்வளவு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம் பலருக்கு. ஆனால், என்னை பொறுத்தவரை நான் வாழ்க்கையில் உருப்படியாக செய்து மிக சில விஷயங்களில் இதுவும் ஒன்று!

பிடிச்ச விஷயங்கள் நிறைய .. குறிப்பா சொல்லணுமின்னா புத்தகம், திரைஇசை, அனிமேஷன் கார்டூன் படங்கள்… சொல்லிட்டே போகலாம்.(மேலும் என் Profile-ல இருக்கு).

சற்று வரலாற்றை புரட்டி பார்த்தால் (சரி முறைக்காதீங்க.... ), நான் எப்படி இந்த வலைப்பூ உலகிற்குள் வந்தேன்? என்று எனக்கே சற்று வியப்பாகத்தான் உள்ளது.

சும்மா....ஒரு நாள் நான் கூகுளில் எதையோ தேடிக் கொண்டிருக்கையில் என் கண்களுக்கு தென்பட்டது ஒரு வலைபூ திறந்து உள்ளே நுழைந்தேன். திகைத்து போனேன் தமிழில் தட்டச்சை செய்யபட்டிருந்தது. எனக்கும் அதை போல் திறக்க ஆசை, எனக்கு தெரிந்தவரைக்கும் ஒரு வலை உருவ வேண்டுமென்றால் அதற்கு நிறைய பணம் தேவை, பின் அதில் என் வசதிக்கேற்ப அதை மாற்றி அமைக்க முடியாது, தெரிந்தவர்கள் மட்டும் படிக்க முடியும்,

Blogger-ஒன்னு இருக்கு, G-mail ID இருந்தால் போதும் எனக்கு ஒரு சொந்த வலை ஆரமித்து விடலாம் என தெரிந்து கொண்டேன், அப்படி அரமிக்கபட்டது தான் இந்த வலை.

நான் ஒன்றும் பிறப்பிலேயே எழுத்தளானாய் பிறக்கவில்லை, பின் எப்படி இவன் மட்டும்.... என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.

எதோ ஆர்வத்தில் எழுத்துக்களை சேர்த்து கிறுக்க கொண்டிருந்த என்னை நல்ல பதிவுகளை எழுத வைத்தது நான் கண்ட திரைப்படங்களின் மேல் உள்ள ஆர்வம்.

இந்த வலைபூ ஆரமித்த சில காலங்களில் பழக்க ஆரமித்து எல்லா நிலையிலும் என்னை ஊக்க படுத்தி கொண்டிருக்கும் என் நண்பர் கருந்தேள் கண்ணாயிரம் (ரஜெஷ்-கு) நான் ரொம்பவே நன்றிகடன் பட்டிருக்கிறேன்!....

இது வரையிலும் நான் என்ன எழுதி கிளிச்சளும் என்னை தட்டி கொடுக்கும் என் நண்பர்களாகிய நீங்கள்... என்னையும் மதிச்சு ஃபாலோ பண்ணுறவங்க..

இப்போ எனக்கென்று ஒரு இணையகுடும்பம் இன்றைய அளவில் இருக்கிறார்கள் என்று நினைக்கையில் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

என் வலைப்பூவை படிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்!

என் எழுத்தில், கருத்தில்…..
பிழைகள் இருந்தால்
சுட்டிக் காட்டுங்கள்!
பிடித்திருந்தால்
தட்டிக் கொடுங்கள்!!

நான் எழுதுகையில்
பிறக்கின்ற என் எழுத்துக்கள்!!!
நீங்கள் வாசிக்கையில்
உயிரையும்
பெறுகின்றன,

உங்கள் ஊக்கமும் விமர்சனங்களும்தான் என்னை மேன்மேலும் எழுத தூண்டும்.

பிரியமுடன்
அஷ்வின்.

P2 (PARKING 2) - அழகிய தில்லர்


பிரச்சனை யாருக்கு எந்த வடிவில் எப்போழுது... யார் வடிவில் வரும் என்று யாருக்கும் தெரியாது. இதன் ஒரு பதில் "காலம்".. இதுவே பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம்..அவர்களது அழகே அவர்களுக்கு பிரச்சனை அப்படி ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்சனைதான் இந்த படத்தின் கதை... நேற்று சற்றும் எதிர்பாக்காமல் என் நண்பன் வீட்டில் 2007-ல் வெளிவந்த "PARKING TWO (P2)".பார்த்தேன்.

A christmas evening அலுவலகத்தில் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு அவள் கார் நிறுத்தி இருக்கும் P2 parking-கு போகிறாள்... கார் ஸ்டார்ட் ஆகாமல் அடம் பிடிக்க அவள் நேராக செக்யூரிட்டியிடம் போய் விஷயத்தை சொல்கின்றாள்... செக்யூரிட்டியிடம் அதன் பிறகு டாக்சிக்கு போன் செய்கின்றாள்... டாக்சி வர 15 நிமிடம் ஆகும் என்று தெரிவிக்க...செக்யூரிட்டி தான் தனியாக இருப்பதாகவும் தனக்கு christmas Party கம்பெனி கொடுக்க, அவளை அலுவலகம் தன் அழைக்க... அவளும் டாக்சி வரும் வரையில் அவனுக்கு கம்பெனி கொடுக்கின்றாள்... டாக்சி வந்து விட்டது என்று அழைப்பு வர, அவள் மெயின் கேட்டுக்கு வரும் போது அது பூட்டி இருக்கின்றது. உள்ளிருந்து டாக்சியை நிக்க சொல்ல christmas பிசியில் டாக்சி போய் விடுகின்றது. திரும்பவும் அவள் P2 parking இருக்கும் தன் அந்த வரும் போது செக்யூரிட்டி அலுவலகம் பொழுது லைட் எல்லாம் அனைந்து விடுகின்றது.செல்போன் வெளிச்சத்தில் தடவி தடவி அவள் வரும் போது, இருட்டில் அவளுக்கு கம்பனி கொடுத்த அந்த செக்யூரிட்டி கையில் இருக்கும் கட்டையால் அவளை தாக்க அவள் மயக்கம் ஆகின்றாள். விழித்து பார்த்தாள் அவன் அவளை கட்டி போட்டு வைத்து இருக்கின்றான்...

சிறிது நேரம் கழித்து கண் திறக்கும் அவளிடன் நீ என்னுடன் தான் இந்த christmas-யை கொண்டா வேண்டும் என்றும் தனக்கு அவள் என்றால் ரொம்ப பிடிக்கும் அவன் கூற அவள் மறுக்கிறாள். அவளை தன் காரில் எடுத்து கொண்டு அதன் அடுத்த Parking Floor செல்லும் போது அங்கு தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு நண்பனை கட்டி வைத்திருக்கிறான். அவளை அலுவகத்தில் தொட்டமைகாக கொலை செய்கிறான் ஒரு சைகோவை போல அவன்.

அவளுக்கு எல்லாம் புரிய வருகிறது அவன் செய்த திட்டம் தான் என்று... பின்னர் அவள் என்னவானாள்? எப்படி தப்பினாள்? எப்படி கஷ்டபட்டாள் என்பதை திரையில் காணுங்கள்...

படத்தில் நடித்த இருவரும் தங்கள் கொடுத்த பாத்திரங்களை கலக்கியிருக்கிறார்கள்.
Wes Bentley & Rachel Nichols hats off.

படத்திற்கு பலமே இசையும் ஒளிப்பதிவும் தான்....படம் முழுவதும் இருவர் மட்டுமே கொண்டு திரைக்கதை பயணிக்கிறது.

கதை முழுவதும் இரவில் நடப்பதால் லைட்டிங்கில் எந்த மாற்றமும் இல்லை...படத்தின் கடைசிவரை காஸ்ட்யூமும் கூட மாற்றமில்லை செலவுகளை மிகவும் குறைத்து இருக்கின்றது...

Rachel Nichols சொல்லிய ஆக வேண்டும் நேற்று இரவு என் துக்கத்தை களைத்தவள். படத்தில் Nichols-ன் பாத்திரத்தின் பெயர் "Angela' உன்மையில அவள் ஒரு "Angel"தான்.

முதல் காட்சியில் கதாநாயகியின் அலுவலகமும் அவளது அழகும் & உடையும் சான்சே இல்லை.. (தப்ப நீனைக்காதீங்க அழகை ரசிக்கலாம் தப்பில்லை.. எங்கோ படித்தது) நல்ல
body language.... நல்ல expressions....

முதலில் கார்பரேட் ஸ்டைலில் உடை உடுத்திய Nichols-யை பெண் Bentleyவிடம் மாட்டியதும் பெட்டிக்கோட்டுடன் அலைய வைப்பதும். அதனால் தான் படத்தை இன்னும் உன்னிப்பாக பார்க்க முடிகின்றது என்பது வேறு விஷயம்.... இருத்தும் ஒரு நல்ல டைம்பாஸ் தில்லர்-கு நான் பொறுப்பு..

*****PARKING 2 (P2)- எதுவும் நேரலாம் எங்கும் யாருக்கும்,.... *****

May 6, 2010

BLEU - France ( ஒரு வாழ்க்கை பயணம் )



வெகு நாட்களாக இந்த திரைப்படம் எழுத வேண்டுமென்று என் நினைவில் இருந்தாலும்...இந்த திரைப்படம் என் மனதில் விட்டு சென்ற வலி இன்னும் பசுமையாய்...

நாம் நமது வாழ்வில் எத்தனை உறவுகளை இழந்திருப்போம், எத்தனை உறவுகளை பெற்றிருப்போம்..பழைய உறவால் தொலையும் வாழ்க்கையும், புது உறவுகளால் புதுப்பிக்கப்படும் வாழ்வும் சில நினைவுடளுடன் அறிமுகப்படுத்தப்படுகிறது இந்த திரைப்படம்.

94 நிமிடங்களில் ஒரு வாழ்க்கை, மரணம், கண்ணீர், சோகம், பிரிவின் வலி எதிர்கொள்ளல், போன்ற பல உணர்வுகள்.

1993 ஆம் ஆண்டு வெளிவந்த புகழ்பெற்ற போலந்து நாட்டு இயக்குனர் Krzysztof Kieslowski Trois couleurs: Bleu (Three Colors: Blue).

இப்படத்தை பற்றி சுறுங்க சொன்னால்....

சாலை விபத்தொன்றில் தன் கணவனையும் சிறுவயது மகளையும் பறிகொடுத்த ஜூலி அத்துயரத்தை எவ்வாறு எதிர்கொள்கிறாள். அவள் வாழ்வின் இன்ப துன்பங்கள்,....அவள் இந்த சப்பவத்தை தொடர்ந்து உறவுகளின் பாசப்பிணைப்புகளிலிருந்து விடுதலை அடைய (Spritual Suicide)மனக்கொலை செய்துகொள்ள விரும்புகிறாள். ஆனால் பாரிஸ் நகரத்தில் தெரிந்தவர்களும் புதிய அறிமுகங்களும் விரிக்கும் நேசவலைகள் அவளது வாழ்வை மீட்டெடுக்கின்றன என்பதை இப்படம் சித்தரிக்கிறது.

இந்த திரைப்படத்தை மாற்று கோணத்தில் பார்தால்...

இந்த சப்பவகளுடன் பிரெஞ்சுப் புரட்சியின் விடுதலை கருத்துக்ககளுடன் ஒரு வாழ்வியல் அனுபவத்தையும் இணைந்து திரைப்படத்தின் கதை.

ஜூலி கதாபாத்திரத்ததில் Spiritual Suicide எனப்படும் மனக்கொலை நிலை வெளிப்படுத்தப்படும்போது சற்றே அதிர்ந்து போகிறது மனது. ஒரு நிமிடம் நாம் சொந்த உறவுகளின் பிரிவுகளால் ஏற்படும் நிகழ்வுகள் காட்சி ஓவியங்களாக விரிகின்றன, சற்று வலிகளுடன்.... நமது மனதிரையில்.

உணர்வுகளை எந்த விதத்திலும் விலகிவிடாதவாறு காட்சிப்படுத்தலின் முழுமையைமிக நேர்த்தியுடன் படத்தொகுப்பு படைக்கப்பட்டிருக்கிறது.அத்துடன் இனணந்து பயணப்பட்டிருக்கிறது கேமரா.

படத்தில் பயணிக்கும் போது ஒரு மெல்லிய சலிப்புத்தன்மை கொண்டிருந்தாலும் நெடுகிலும் பட காட்சிகளால் மறக்க செய்கிறார் இயக்குனர்.

வெளிவந்த அதே ஆண்டில் வெனிஸ் திரைப்பட விழாவில் முன்று விருதுகளை அள்ளியது.
Silver Ribbon, Sant Jordi Award,César Award,Goya Award,CEC Award, Guild Film Award போன்ற பல பிரிவுகளில் விருதுகளை தட்டிச்சென்றது.இப்படத்தை தொடர்ந்து White and RED அகியவை வெளிவந்தன.
நாயகி தன் பின்கரத்தை சுவற்றோடு உராசிச்சென்று சோகத்தை வெளிப்படுத்தும் காட்சி, இப்படத்தில் வரும் காட்சியைப் போன்று "இந்திரா" திரைப்படத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.(நமது தமிழ் சினிமா இந்த படத்தையும் வீட்டுவைக்கவில்லை)

*****BLEU - one of the world's preeminent flims*****

May 3, 2010

எனக்கு பிடித்த பாடல்...(உங்களுக்கும் பிடிக்குமென்று)


எதோ எனக்கு சொல்ல தெரியவில்லை.. இந்த பாடல் வரிகள் பிடித்து நான் இந்த பதிவை போடுகிறேனா, இல்லை... இளையராஜாவின் இசையில் வந்த்தால் பிடித்து போயிற்றோ எனக்கு சொல்ல தெரியவில்லை... கடந்த வாரத்தில் இருந்து இன்று வரை என் கண்ணியில் ஓலிக்கும் இப்பாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள..

படம்: கோழி கூவுது
பாடியவர்: மலேசியா வாசுதேவன்
இசை: இளையராஜா.








கேட்டுவிட்டுச் சொல்லுங்கள்.

April 21, 2010

அம்முவாகிய நான்


அம்முவாகிய நான்--"தங்களைத் தேய்த்துக்கொண்டு பிறரை உயர்த்தும் கடைநிலை மனிதர்கள்"

ஒரு திரைப்படத்தின் கதைக்களன் தான் பார்வையாளர்களை அந்த திரைப்படத்துடன் ஐக்கியப்படுத்துகிறது. அம்மு என்ற பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை திரைப்படமாக மொழிமாற்றும் முயற்சிதான் 'அம்முவாகிய நான்' திரைப்படத்தின் ஒன்லைன்.

படத்தில் வித்தியாசங்களை வலியத் திணிக்காமல் இயல்பான ஒரு திரைப்ப்டத்தைத் தந்திருக்கும் இயக்குனர் பாராடடப்பட வேண்டியவர்.

அம்மு குழந்தையாக இருக்கும்போதே பாலியல் தொழிலாளியான இராணியிடம் விற்கப்படுகிறாள். ராணி மடத்தில் பாலியல் தொழிலாளிகளிடையே வளரும் அம்மு தானும் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை தன் நாவல்களின் மூலம் பதிவு செய்யும் எழுத்தாளர் கெளரிசங்கர் பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை நாவலாக வடிக்கும் முயற்சியாக ராணி மடத்திற்கு வருகிறார். அங்கு அம்முவின்பால் ஈர்க்கப்படுகிறார். அம்முவை மணக்க விரும்புகிறார். முதலில் மறுக்கும் அம்மு பின்னர் தன் தோழிகளின் அறிவுரையின் பேரிலும் கெளரிசங்கரின் அன்பாலும் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். திருமணம் முடிந்ததுமான அவர்களது வாழ்க்கை அழகான கவிதை.கெளரிசங்கரை வளர்த்த அக்காவாலும் அம்முவுக்கு ஏற்கனவே தெரிந்தவர்களாலும் சிறுசிறு பிரச்சனைகள் வருகின்றன.கெளரிசங்கர் தன் லட்சிய நாவலை முடித்து விருது தேர்வுக்கு அனுப்புகிறார். முன்பொரு முறை அம்முவினால் அவமானப்படுத்தப்பட்ட எழுத்தாளர் தேர்வுக்குழு தலைவராக இருக்கிறார். இலக்கிய விருது கிடைக்க வேண்டுமானால் மனைவியைத் தன்னுடன் அனுப்ப வேண்டும் என விருதுக் குழுத் தலைவர் சொல்ல, கணவனுக்குத் தெரியாமல் அவனிடம் போகும் அம்மு இறுதியில் அவன் தொடும்போது பொறுக்க இயலாமல் அவனைக் கொல்வதுதான் கதை (கொலையும் செய்வாள் பத்தினி!). கதாநாயகனுக்கு விருது கிடைக்கிறது.


படத்தின் பெரும்பலம் கச்சிதமான காட்சியமைப்பு. வில்லன் வரும் காட்சிகளைத் தவிர......இருந்தும் ஒவ்வொரு காட்சியமைப்பும் கதாநாயகன் பாலியல் தொழிலாளிக்கு வாழ்வு கொடுப்பதை உரக்கப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

"எங்கேயோ எப்படியோ பேர் தெரியாத நோயால் காணாமப் போயிருக்க வேண்டிய நான், இன்னிக்கு உன்னால இப்படியொரு வாழ்க்கை வாழ்ந்துக் கிட்டிருக்கேன்" எனக் கதாநாயகனிடம் அம்மு கூறுகிறாள்.

"ஹிஸ்டிரியில ஏதோ ஒரு எடத்துல நின்னுட்டீங்க சார்" என அம்முவை மணந்த கதாநாயகனிடம் அம்முவின் முன்னாள் கஸ்டமர் ஒருவர் சொல்கிறார். இவை கதாநாயகனைப் பாராட்டிப் பேசப்படும் வசனங்கள்.

கதைக்களனுக்கு ஏற்றவாறு வலுவான திரைக்கதையுடன் எடுக்கப்பட்ட படங்கள் பெரும் வெற்றியையும் பாராட்டையும் பெற்று மிகச் சிறந்த திரைப்படங்களாக போற்றப்படுகின்றன. அதே நேரம் அடித்து ஆடவேண்டிய அட்டகாசமான கதைக்களனில் சொதப்பலான திரைக்கதையால் மொக்கையாகிப்போன படங்களும் உண்டு. அம்முவாகிய நான் இந்த இரண்டிற்கும் நடுவில்....

அம்முவாக நடித்திருக்கும் பாரதி அசத்தியிருக்கிறார். கதாபாத்திரத்தை முழுதாக உள்வாங்கி அருமையாக நடித்திருக்கிறார். கண்கள் அப்படியொரு அழகு. அவருக்காகவே இன்னொரு முறை கூட பார்க்கலாம். பார்த்திபனுக்கு அவருக்கேற்ற கதாபாத்திரம்...

வழக்கமான மசாலா திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு சொல்லப்படாத கதைகளை படமாக்கும் 'அம்முவாகிய நான்' ஒரு படி மேலே தான்.

இந்த வாக்கியங்கள் எதோ ஒரு கட்டுரையில் படித்தவை.....

"ஆண் பாலியல் தொழிலாளர்கள் நிச்சயமாக இருக்க வேண்டும். ஆண்களுக்கும் பெண்களுக்குமான விருப்பங்களில் எந்த வேறுபாடும் இல்லை."

மீண்டும் அடுத்த ஒரு நல்ல பதிவில் சந்திக்கிறேன்...

February 27, 2010

A Walk to Remember (2002).....காதலின் நினைவில்



காதல் என்று பெயரில் எழுதப்படும் எந்த ஒரு வார்த்தையும் கவிதையாகிவிடும்..என்று எங்கோ படித்த நினைவில்...

நம்மில், இதுவரை காதலிக்காதவர்கள் எத்தனை பேர்? அந்த காதல் வெற்றியில் முடிந்திருந்தாலும்...... தோல்வில் மூழ்கியிருந்தாலும் சரி, வாழ்வில் ஒருமுறையாவது காதல் நம்மை தொட்டுபார்த்திருக்கும் , ஒருவரையாவது நாம் காதலித்திருக்கிறோம்.

நம் நினனவில் அழிய சித்திரமான அந்த ஒருவர், இந்தக் தருணத்தில் கணத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற எண்ணமும் நமக்குப் பலமுறை வந்திருக்கும்.

எதோ ஒரு இடத்தில் காதலர்களை பார்க்கும் போது, நமது காதலனோ அல்லது காதலியோ நம்மருகே இல்லாமல், ஒரு பெரும் தனிமையைப் பலமுறை அனுபவித்திருக்கிறோம். . . காதலில் மூழ்கியிருந்த நாட்களை எண்ணி நமக்குள்ளே புன்னகைத்திருக்கிறோம்! அவர்களுடன் நாம் சிலகாலமே இருந்தாலும், நமது வாழ்க்கை முழுமைக்குமே அது போதும் என்ற ஒரு நிம்மதியை அளிக்கக்கூடியதே காதல்.

அப்படிப்பட்ட ஒரு அழகான காதல் கதையே இந்த "A WALK TO REMEMBER"..இந்தப் படம். அதே பெயரில் வந்த ஒரு நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.


இரவு சுமார் பத்து மணி. ஐந்தாறு இளைஞர்கள் கொண்ட கூட்டம் தனித்தனியாக காரில் வந்து இறங்குகின்றது. அவர்கள் நண்பர் குழாமில் புதிதாக ஒருவன் சேர விரும்புகிறான். அவனுக்கு அதற்காக வைக்கப்பட்டிற்கும் ஒரு பந்தயம் – இருபதடி உயரத்திலிருந்து ஒரு குளத்தில் குதிப்பது. அவனை ஏற்றிவிட்டு வேடிக்கை பார்க்கிறது பொறுப்பற்ற அந்த கூட்டம். குதித்தவனுக்கு படுகாயம். காவல்துறையினரின் கார் சத்தம் அருகில் கேட்கிறது. அடிபட்டவனை அப்படியே விட்டுவிட்டு அனைவரும் காரில் பறக்கிறார்கள். ஒருவன் மட்டும் மாட்டிக்கொள்கிறான் – லேண்டன்.

லேண்டண் அம்மாவுடன் தனித்து வாழுகிறான். அவனுடைய அப்பா வேறு பெண்ணுடன் இருக்கிறார். அதனால் அவனுக்கு அவர் மேல் வெறுப்பு. அவரோ அவனிடமும் முந்நாள் மனைவியிடமும் நட்பாகவே இருக்க முயல்கிறார். லேண்டன் அதை ஏற்றுக்கொள்வதாயில்லை. அப்பா இல்லாததால் தான் அவன் இத்தகைய காரியங்கள் செயதாக தாய் வருத்தப்படுகிறாள். காவல்துறையின் பரிந்துரையின் பேரில் அவனுடைய பள்ளி அவனுக்கு சில பணிகளை விதித்திருக்கிறது. சேவை மையத்தில் சிறுவர்களுக்கு பாடம் சொல்லித்தருதல் மற்றும் உள்ளூர் நாடக குழுவின் நாடகத்தில் பங்குபெறுதல். வேண்டா வெறுப்பாக வாரம்தோறும் சனிக்கிழமைகளில் அவன் அந்த இடங்களுக்கு செல்கிறான்.

அந்த இடங்களுக்கு ஜேமியும் தவறாமல் வருகிறாள். அவளை ஏற்கனவே அவன் அறிந்திருக்கிறான். தேவாலய போதகரின் ஒரே மகள். சதா படித்துக்கொண்டேயிருப்பதற்காகவும், சேவை மையங்களில் நேரம் செலவழிப்பதற்காகவும், அவள் அணியும் அசுவாரஸ்யமான உடைகளுக்காவும் அவள் அந்த பள்ளியில் பிரபலமானவள். லேண்டன் விரும்பித்தான் சேவை செய்ய முன் வந்திருப்பதாக நினைத்து நட்பு பாராட்ட அவள் முயல, லேண்டன் அதை நிராகரிக்கிறான். அவனுடைய நண்பர் குழாம் அவளுடனான இவனுடைய நட்பை ஏற்காது. அது அவமானமாகவும் கேலியாகவும் கருதப்படும்.

ஆயினும், சேவை மையத்திலும் சரி, அவர்கள் காதலர்களாக நடிக்கும் அந்த நாடகத்தின் ஒத்திகையிலும் சரி, அவளின் உதவி இவனுக்கு தேவைப்படுகிறது. யாருக்கும் தெரியாமல் அவளுடைய நண்பனாகிறான். ஜேமி ஒரே ஒரு நிபந்தனை விதிக்கிறாள் – தன்னை காதலிக்கக் கூடாது என்று. லேண்டனுக்கு அடங்க மாட்டாமல் சிரிப்பு வருகிறது – இந்த பெண்ணை யார் காதலிப்பார்கள். நண்பர்கள் இல்லை – தோழிகள் இல்லை – ஆடைகளில் நல்ல தேர்வு இல்லை – அழகு தான் ஆனாலும் – லேண்டனின் கற்பனைக்கு எட்டாத ஒரு அதிசயம் மட்டுமே அவனை அவள் மேல் காதல் கொள்ள வைக்குமென நம்புகிறான்.

அந்த அதிசயமும் நிகழ்கிறது.

ஜேமி யாரும் அறியாத ஒரு புதையலைப் போல இருக்கிறாள். அமைதியான அழகு, அடக்கமான அறிவு், வயதை மீறிய தெளிவு – அத்தனையும் அவளிடம் கொட்டிக்கிடக்கிறது. மெல்ல மெல்ல அவளை காதலிக்கத் தொடங்குகிறான். இதை அறிந்த அவனுடைய நண்பர்கள் அவளை பள்ளியில் மிகவும் கேவலமான முறையில் கேலி செய்ய, அவர்களை எதிர்க்கிறான். ஜேமிக்கு ஆதரவாக நிற்கிறான்.

ஜேமி தன் வாழ்நாளில் தான் செய்ய வேண்டிய wish list ஒன்று வைத்திருக்கிறாள். முன் பின் தெரியாத ஒருவருக்கு காரில் லிஃப்ட் கொடுப்பதில் துவங்கி, ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் இருப்பது, ஒரு பேரதிசயத்தை காண்பது என வளரும் அந்த பட்டியலின் முதல் ஆசை் இறந்து போன அவளுடைய அம்மா திருமணம் செய்துகொண்ட அதே தேவாலயத்தில் அவளும் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்பது. இதை ஒவ்வொன்றாக நிறைவேற்றத் தொடங்குகிறான் லேண்டன். அவளை யாருடனும் வெளியே அனுப்ப மறுக்கும் அவனுடைய தந்தையுடன் வாதிட்டு அவளை வெளியே அழைத்துச்செல்கிறான். பள்ளி முடிகிற தருவாயில் காதலைச் சொல்கிறான்்.

தன்னுடைய நிபந்தனையை கண்ணீருடன் நினைவூட்டுகிறாள் ஜேமி. அவள் யாரையும் காதலிக்க முடியாது என மறுக்கிறாள். அவளுக்கு லுகீமியா. தன்னுடைய வாழ்நாளின் கடைசிகட்டத்தில் இருக்கிறாள் ஜேமி.

கண்ணீருடன் ஜேமி காட்டுத்தனமாக காரில் செல்கிறான். அவனுடைய அப்பாவிடமும்! அவர் ஒரு மருத்துவர். அவனுடைய அத்தனைக் கோபங்களும் உடைந்து அவரிடம் உதவி கேட்டு நிற்கிறான்!

வாழ்க்கையை அப்படியே ஏற்றுகொண்டு, மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்கிறான். தொடர்ந்து அவளின் ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டே வருகிறான். இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவளுடைய பெற்றோர் திருமணம் செய்துகொண்ட அதே தேவாலயத்தில் அவளை மணமுடிக்கிறான்.

ஒரு வருடம் அழகிய ஒரு வாழ்வை வாழ்ந்துவிட்டு இறந்து போகிறாள் ஜேமி.

பின்னர் ஒரு நாளில், லேண்டன் ஜேமியின் தந்தையை சந்திக்கிறான். அவளுடைய இரண்டாவது ஆசையாக ஒரு பேரதிசயத்தை காண விரும்பினாள். ஆனால் அது நடக்காமல் போனதாக வருந்துகிறான். அவனுடைய அப்பா மறுக்கிறார். ஜேமி நிச்சயம் ஒரு பேரதிசயத்தை கண்டாள். அது நீ என்று சொல்கிறார். மனதை நிறைக்கும் இசையுடன் நிறைவு பெறுகிறது படம்.

தெளிவான இதமான ஒரு காதல் கவிதை இந்தப் படம்.


லேண்டனாக வருகிற Shane west, ஜேமியாக வருகிற Mandy moore இருவரும் கச்சிதம். அழகான ஜோடி. ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு.

இருவரின் பெற்றோர் நம் மனதை நெகிழ வைக்கிறார்கள். பெற்றோருடன் பிள்ளைகள் பேசுகிற சில காட்சிகள் அற்புதம். உடல்நிலை மோசமடைந்து ஜேமி மருத்துவமனையில் இருக்கும் போது அவளுடய அப்பா நினைவுகூறும் சிறு வயது ஞாபகங்களும், ஜேமிக்கு வீட்டிலிருந்தே மருத்துவம் செய்ய அத்தனை ஏற்பாடுகளையும் செலவையும் லேண்டனின் தந்தை மேற்கொண்டதை அறிந்து லேண்டன் அவரைத் தேடிச் சென்று அத்தனை வெறுப்பும் கோபமும் மறந்து கட்டியணைத்து அழுகிற காட்சி அழகு.

கண்களை உறுத்தாத ஒளிப்பதிவும், இதமான பிண்ணனி இசையுமாக படத்தின் இரு தூண்களும் பலம்.

காதல் மெதுவாக மெதுவாக தலை காட்டத்துவங்கும் நாட்களின் உச்சமாக, லேண்டனும் ஜேமியும் காதலர்களாக அந்த மேடை நாடகத்தில் அரங்கேறுகிறார்கள். செம்மையான ஒப்பனையுடன், அற்புதமான உடையுடன் இந்தப் பெண் இத்தனை அழகா என்று நாமே வியக்கிற அந்த காட்சியில் அடக்கி வைத்த லேண்டனின் அத்தனைக் காதலும் வெடித்துச் சிதற படபடக்கிறது. காதல் வசனங்களும் அதை தொடரும் அற்புதமான மேடைப்பாடலுமாக லேண்டன் தவிக்கிற அந்த கணங்கள் படம் முடிந்தும் நம் நினைவில் இருக்கும்.

இதமான தரமான சுவையான காதல் படம் என்பதற்கு உறுதி....படம் பார்த்துவிட்டு சொல்லுங்களேன்.

January 31, 2010

THE BUCKET LIST (2007) - எண்ணங்களுக்காகவும் சில புரிதல்களுக்காகவும்.


வாழ்க்கை குறித்தும் வயோதிகம் குறித்தும் மரணம் குறித்துமான எண்ணங்களுக்காகவும் சில புரிதல்களுக்காகவும்.

மரணம் குறித்தான பயம் எப்போதும் அடிமனதில் குடிகொண்டிருக்கிறது. அதிலும் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நாட்களில் இதுநாள் வரை கடந்து வந்த பாதைகளும் மரணத்திற்கு பிறகான புதிரும் மனதை அலைக்கழித்தபடியே இருக்கின்றன. பழைய நினைவுகளும் தவறவிட்ட வாய்ப்புகளும் நிராசைகளும் செய்ய நினைத்திருக்கும் காரியங்களும் வயோதிகத்தை கொடிய நோயாக்கிவிடுகின்றன. இறப்பதற்கு முன் அடைந்துவிடக்கூடியவற்றை மனம் பட்டியலிட்டபடி இருக்கிறது. மனித வாழ்க்கை குறித்த தத்துவார்த்தமான சிந்தனைகளும் அதே நேரத்தில் எஞ்சியிருக்கும் நாட்களில் மனநிறைவோடு வாழ்ந்து மரணத்தை திருப்தியுடன் எதிர்கொள்வது குறித்தான எண்ணங்களும் முட்டி மோதுகின்றன. மரணம் நெருங்கியதை உணர்ந்ததும் தன் சுற்றத்தாருக்கும் உறவினருக்காகவுமே காலமெல்லாம் உழைத்தவர்கள் தங்களுக்காகவும், சுயநலமாக தனக்காக மட்டுமே வாழ்ந்தவர்கள் அடுத்தவர்க்காகவும் வாழ ஆரம்பிக்கிறார்கள். மரணம் இது குறித்தான பிரக்ஞை எதுவுமின்றி அவர்களை அரவணைத்து சென்றுவிடுகிறது.


புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரண தேதி குறிக்கப்பட்ட எட்வர்ட் கோல்(Edward Cole), கார்ட்டர் சேம்பர்ஸ்(Carter Chambers) என்ற இரண்டு முதியவர்களின் வாழ்வில் கடைசி சில மாதங்களை பதிவாக்கியிருக்கும் திரைப்படம் The Bucket List.

கார்ட்டர் சேம்பர்ஸ் கார் மெக்கானிக். அன்பான மனைவி. மூன்று பிள்ளைகள். புகை பிடிக்கும் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். எட்வர்ட் கோல் மருத்துவமனைகள் நடத்திவரும் கோடீஸ்வரர். நான்கு முறை மணமுறிந்து தன்னந்தனியாக வாழ்பவர். தன்னுடைய மருத்துவமனைகளில் ஒவ்வொரு அறையிலும் இரண்டு படுக்கைகள் அமைத்து பணம் பார்ப்பவர். இவரையும் புற்றுநோய் தாக்க கார்ட்டரும் எட்வர்ட்டும் மருத்துவமனையில் ஒரே அறையில் தங்க வைக்கப்படுகிறார்கள். உயிர்கொல்லி புற்றுநோயால் இருவருக்குமே சில மாதங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது.

கார்ட்டர் தன் மரணத்திற்கு முன் நிறைவேற்ற வேண்டிய ஆசைகளை பட்டியலிடுகிறார்.(Bucket List;'Kick the bucket'). நிறைவேற்ற இயலாதவற்றையும் தன் மன திருப்திக்காகப் பட்டியலிடுகிறார். அதைப் பார்த்துவிடும் எட்வர்ட் இருவருமாக சேர்ந்து அந்த பட்டியலில் உள்ளவற்றை செய்துவிட வேண்டுமென்கிறார். தன் பங்கிற்கு தன்னுடைய ஆசைகளையும் பட்டியலிடுகிறார். முதலில் மறுக்கும் கார்ட்டர் எட்வர்ட்டின் வற்புறுத்தலால் ஒத்துக்கொள்ள, கார்ட்டர் மனைவியின் எதிர்ப்பையும் மீறி இருவரும் மருத்துவமனையில் இருந்து கிளம்புகிறார்கள். விமானத்திலிருந்து குதிப்பது, அதிவேகமாக கார் ஓட்டுவது, பல்வேறு நாடுகளைச் சுற்றித் திரிவது, இமாலயத்தைப் பார்ப்பது, முன்பின் தெரியாத அந்நியருக்கு உதவுவது, கண்ணில் நீர் வரும்வரை சிரிப்பதென விருப்ப பட்டியலை தயாரித்து ஒவ்வொன்றாக நிறைவேற்றுகிறார்கள். விருப்பப் பட்டியல் முடியும் நிலையில் குறுகிய நாட்களில் தங்களிடையே உருவாகியிருக்கும் நட்பை உணர்கிறார்கள். இறக்கும் முன் மனதுக்கு நிறைவாக வாழ்ந்த நாட்களை எண்ணி மகிழ்கிறார்கள். மரணிக்கிறார்கள்.

எண்ணங்களிலும் வாழ்க்கை முறையிலும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு மனிதர்கள் மரணத்தால் ஒன்றுபடுகிறார்கள். 'வண்டிச் சக்கரம் போல் காலம் சுழன்றுகொண்டேயிருக்கிறது அவரவர் வாழ்ந்து இறந்துகொண்டிருக்கிறோம்' என்ற எண்ணமுடைய எட்வர்ட்டும் 'நம் வாழ்வின் அளவீடு அடுத்தவர் வாழ்வில் நாம் ஏற்படுத்தும் பங்களிப்பை வைத்தே' எனும் கார்ட்டரும் பயணத்தினூடே தங்களது கடந்த கால வாழ்க்கை குறித்த உரையாடல்களும் வாழ்க்கையைக் குறித்தும் மரணம் குறிததுமான எண்ணப் பகிர்வுகளாகவும் திரைப்படம் நகர்கிறது.
மரணத்திற்காகக் காத்திருக்கும் இரண்டு வயோதிகர்களின் கதை என்றாலும் மரணத்தின் வாசனையில்லாமல் திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. தத்துவார்த்தமான உரையாடல்களிலும் மெல்லிய நகைச்சுவை நிறைந்திருக்கிறது. குறிப்பாக எட்வர்ட்டுக்கும் அவரது உதவியாளர் தாமஸுக்குமான நக்கல் நையாண்டி உரையாடல்கள் அட்டகாசம்.

எட்வர்ட் கோல்'லாக ஜாக் நிக்கல்சன்(Jack Nicholson). கார்ட்டர் சேம்பர்ஸாக மார்கன் ஃப்ரீமேன்(Morgan Freeman). இரண்டு மிகச் சிறந்த நடிகர்கள் திரைப்படத்தை தாங்கிப் பிடிக்கிறார்கள். சொல்லப்போனால் படத்தைப் பார்க்க ஆரம்பித்ததே இவ்விருவருக்காகத்தான். இரண்டாம் பாதியில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் இவ்விருவரின் முக பாவங்களும் வசன உச்சரிப்பும் அதை மறக்கச் செய்கின்றன.

January 20, 2010

முத்திரை- (2009)


திமிழில் இப்போழுதெல்லாம் சிறிய தயாரிப்புபடங்கள் எல்லாம் என்னை மிகவும் கவரபடுகின்றன..அப்படி என்னை கவர்ந்த படம் தான் இந்தப்படம்...எனக்கு தெரிந்து இங்கு இந்த படத்திற்க்கு பெரிய விளம்பரம் எதுவும் செய்யவில்லை..தற்செயல்லாக வலையில் எதையோ தேடும் போது கிடைத்து...

திருட்டு, கொலை, என்கவுண்‌ட்டர் என நெகடிவ் விஷயங்களை வைத்தே தனது முதல் படம் இயக்குனர் ஸ்ரீநாத். நிதின் சத்யாவின் காமெடியும், ராக்கி சாவந்த், லட்சுமிராயின் கவர்ச்சியும் படத்தின் எக்ஸ்ட்ரா போனஸ்.

லோக்கல் பர்ஸ் திருடன் நிதின் சத்யா. ஹைடெக் பாஸ்போர்ட் திருடன் டேனியல் பாலா‌ஜி. இவர்கள் இணைந்து காஸ்‌ட்லியாக கல்லாகட்ட நினைக்கும்போது வழியே போகும் ஒருவனால் வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு லேப்டாப்பால் வரும் அந்தப் பிரச்சனை நான் ஸ்டாப்பாக துரத்த, இருவரும் எப்படி அதிலிருந்து எஸ்ஸாகிறார்கள் என்பது கதை.

டேனியல் பாலா‌ஜிக்கு முதல் ஹீரோ அனுபவம். தெனாவட்டாக தி‌ரிகிறவர் லட்சுமிராயின் முன் ஈரத்துணி போர்த்திய கோழியாக பம்முவதும், அதற்கு காரணமான திருமண ப்ளாஷ்பேக்கும் இனிமையான அதிர்ச்சி. இந்த மூஞ்சியைப் பார்த்தா சிபிஐ ஆபிசர் போலவா இருக்கு என்று மஞ்ச‌ரியிடம் நிதின் சத்யாவை கலாய்க்கும் இடத்தில் டேனியலுக்கு காமெடி டைமிங் கைகூடி வந்திருக்கிறது.

கோவில் உண்டியலில் கைவைத்து ஊரா‌ரிடமிருந்து தப்பித்து ஓடிவரும் நிதின் சத்யா முதல் காட்சியிலேயே மனசுக்குள் ப்ரேம் போட்டு உட்கார்ந்து விடுகிறார். சிபிஐ ஆபிஸர் என்று அவர் விடும் அலப்பறைக்கு திரையரங்குக்குள் சி‌ரிப்பலை. மஞ்ச‌‌ரியை கவர அவர் விடும் காதல் மாஞ்சா செம ரவுசு.

நிதினுக்கு மஞ்ச‌ரி, டேனியலுக்கு லட்சுமிராய் என கோடு கிழித்த மாதி‌ரி இரண்டு ஹீரோயின்கள். பார் டான்சராக வரும் லட்சுமிராய் கவர்ச்சி, சென்டிமெண்ட் என இரண்டிலும் பாஸ் மார்க் வாங்குகிறார்.

முதல்வரை கொலை செய்தவன் யார் என்ற த்‌ரில்லிங்கான சேஸிங் இருந்தும் திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வு. போலீஸ் கமிஷனராக வரும் கிஷோரின் திடீர் வில்லன் அவதாரம் அதிர்ச்சிக்குப் பதில் ஆயாசத்தையே தருகிறது.

என்கவுண்‌ட்ட‌ரில் பலியாகும் சேத்தன், முதலமைச்சர் அழகர் அதியமானாக வரும் சரவணன், அவரது தம்பி தொண்டை அதியமானாக வரும் ஆனந்த், பதவி ஆசை பிடித்த ஆதிகேசவனாக வரும் பொன்வண்ணன் என அனைவரும் தத்தமது பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்கள்.

கிளைமாக்ஸில் வரும் திடீர் திருப்பங்களில் உள்ளேன் ஐயா என ஆஜராகிறார் திரைக்கதையாசி‌ரியர் அனீஸ் தன்வீர். கொலையாளி யார் என்று யூகிக்க முடிவது படத்தின் மிகப் பெ‌ரிய பலவீனம். யுவனின் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை ரகம். சீரான இடைவெளியில் வரும் பாடல்கள் படத்தின் ஸ்பீடு பிரேக்கர்கள்.

அவ்வப்போது காணாமல் போகும் லா‌ஜிக்கை மன்னித்தால் முத்திரையை ரசிக்கலாம்.