December 30, 2009

3 IDIOTS - A GENIUS MOVIE!





நான் சில நாட்கள் முன் பாத்த ஹிந்தி படங்கள் (Blue, Wanted, London Dreams...etc..etc நீண்ட பட்டியல்......யாவும திருத்தி தரத வகையில்...ரொம்ப நாளைக்கு அப்புறம் வருட இறுதியில் பார்க்கும் ஒரு படம் மனதுக்கு நிறைவாய் அமைவது எவ்வளவு சந்தோஷமான விஷயம்!

எனக்கு பிடித்த ஒரு எழுத்தாளர் என்ற வகையில்...சேட்டன் பகத்தின் "FIVE POINT SOMEONE " நாவலைத் தழுவி எடுக்கப்பட்டாலும், முழுக்க முழுக்க தன் முத்திரையைப் பதித்திருக்கிறார் இயக்குனர்.இதற்கு முன் இவர் எழுதிய நாவல் (One Night @ Call Centre) படம் (Hello) என்னை கவரவில்லை என்றாலும்....


அந்த சந்தோஷத்தைத் தருகிறது 3 Idiots.

வாங்க கதையில் ............... விமானம் எடுக்கப்பட்டு விட்டது. சீட் பெல்ட் போட்டுக் கொண்டிருக்கும் மாதவனுக்கு ஒரு அழைப்பு வருகிறது. பணிப்பெண் செல்ஃபோனை ஆஃப் பண்ணச் சொல்லித் திட்டத்திட்ட எக்ஸ்யூஸ் கேட்டபடி பேசுகிறார். பேசி முடித்ததும் வியர்க்க விறுக்க எழுந்து, நிற்க முடியாமல் தடுமாறி விழுந்து மயக்கமாகிவிட, அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்படுகிறது.


ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சக்கர நாற்காலியில் வைத்து, மாதவனை படு ஸ்பீடில் விமானநிலைய வாசல் நோக்கி மருத்துவக்குழு கொண்டு செல்ல கண்விழிக்கும் மாதவன் - எழுந்து - இரண்டு மூன்று சிம்பிள் எக்ஸர்சைஸ் செய்து காட்டி “I AM OK...... நீங்க போகலாம்” என்றுவிட்டு ஓடிவிடுகிறார்.

அங்கிருந்து கிளம்பும் மாதவன், தன் இன்னொரு நண்பன் ஷர்மானையும் அழைத்துக் கொண்டு அமீர்கானைத் தேடி புறப்படுகிறார்கள்.


படம் முழுவதுமே இந்தத் தேடல்தான். க்ளைமாக்ஸில்தான் அமீர்கானைக் காண்கிறார்கள். அதுவரை இவர்களின் கல்லூரி நினைவுகளின் ஃப்ளாஷ்பேக்தான்.

ஒரு நண்பன் விமானத்திலிருந்து இறங்கியும், இன்னொரு நண்பன் மனைவியை விட்டுவிட்டும் இப்படி ஒரு நண்பனைத் தேடி ஊர் ஊராக அலைகிறார்களா? இதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும் என்று ஒரு இடத்தில்கூட தோன்றவில்லை. அமீர்கானைப் போன்ற நண்பன் கிடைத்தால் இதற்கு மேலும் செய்யலாம்!

இடைவேளைக்கு முன் அமீர்கானைக் கிட்டத்தட்ட நெருங்கிய மாதவனும், ஷர்மானும் போய்ப் பார்க்கும்போது அங்கே ஜாவேத் ஜஃப்ரி அமர்ந்து கொண்டு ‘சொல்லுங்க நான் தான் ரஞ்சோர்தாஸ்’ என்று சொல்ல அதிர்ச்சியடையும் இவர்கள் சுவரில் பார்க்கும்போது இவர்கள் கல்லூரியில் எடுத்த புகைப்படத்தில் அமீர்கானுக்குப் பதில் ஜாவேத் ஜஃப்ரி இருக்கிறார். அப்படியென்றால் அமீர்கான்?


இடவேளைக்குப் பிறகு சூடுபிடிக்கும் படத்தில் பாருங்கள்...... இறுதிக்காட்சியில் ‘நான் ஜெயிச்சுட்டேன்ல’ என்று அந்த படிப்பாளி நண்பன் சதூர் சொல்லும்போது அமீர்கான் தான் யார் என்பதை வெளிக்காட்டும் காட்சி வரை இந்த சஸ்பென்ஸ் ஒவ்வொரு காட்சியிலும் வருகிறது.


ஹிரானி & அபிஜத் ஜோஷி நல்ல சிரிப்பையும், சிரிப்பினூடே சிந்திக்கவும் வைக்கும் வசனங்கள். அதுவும் இந்திய கல்வித் திட்டத்தை படம் முழுக்க கேள்விகளால் கிழித்துத் தொங்க விட்டிருக்கும் என்ன சொல்லிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை.


கேமரா - முரளிதரன். சிம்லாவை இவ்வளவு அழகாய் நான் பார்த்ததில்லை. படத்தில் உள்ள எல்லா கேரக்டரும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். சின்னச் சின்ன கேரக்டருக்கும் இயக்குனர் மிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

அந்த "ALL IS WELL" எல்லா இடங்களிலும் சொல்லப்பட்டாலும், பிறந்த குழந்தை அழாமலிருக்கும்போது நமக்கு ஏற்படும் உணர்ச்சி... எழுத வார்த்தை இல்லை......

3 IDIOTS - எல்லோரும் பார்க்க / சிரிக்க நிச்சயம் சிறந்த படம்!



இந்த வலையுலகில் என்னையும் சேர்த்த எல்லோரும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!






December 20, 2009

வேட்டைக்காரன்- மசாலா வேட்டை (காரம் துக்கல்....உப்பு கம்மி)


மாஸ் மசாலா என்ற வட்டத்தை விட்டு வெளியில் வர முடியாத அல்லது விருப்பமில்லாத விஜய்-யின் மற்றுமொரு வழக்கமான மசாலா வேட்டை இந்த வேட்டைக்காரன்.

ரவி (DR.விஜய்) என்கிற போலீஸ் ரவி ஒரு தூத்துக்குடி பையன். +2-வை நான்காவது அட்டம்டில் தாண்டும் சராசரி மாணவரான அவருக்கு, பெரிய லட்சியம் ஒன்று உண்டு. அது தனது ஆதர்ஸ நாயகனான தேவராஜ் ஐபிஎஸ் மாதிரி பெரிய போலீஸ் ஆஆ......பீஸர் ஆவது. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் சென்னையில் கல்லூரியில் சேர்ந்து படிக்க ரயிலேறுகிறார். அப்போதுதான் அனுஷ்காவைச் சந்திக்கிறார். வழக்கம்போல அந்தக் கணத்திலேயே விஜய்யின் கனவு நாயகியாகி விடும் அனுஷ்கா, வழக்கம் போல டூயட்டெல்லாம் பாடி ஓய்கிறார். அப்போதுதான், செல்லா என்ற மோசமான வில்லனைச் சந்திக்கிறார் விஜய். அழகான பெண்ணைப் பார்த்த கணத்தில் படுக்கைக்குத் தூக்கிச் செல்லும் சைக்கோ கேரக்டர் இந்த செல்லா. தன் வகுப்புத் தோழி ஒருத்திக்கு இந்த சோகம் நிகழ, நாயகன் விஜய் பொங்கியெழுந்து போட்டுப் புரட்டியெடுத்து கொன்று விடுகிறார் செல்லாவை.

இந்த செல்லாவின் அப்பா வேதநாயகம் (சலீம் கவுஸ்) பெரிய டான். மகனைக் கொன்ற விஜய்யை போட்டுத் தள்ள போலீஸ் அதிகாரி சாயாஜி ஷிண்டேக்கு அஸைன்மெண்ட் தருகிறார். ஆனால் அதை உதாசீனப்படுத்தும் சாயாஜி, 'நீயென்ன பெரிய மந்திரியா, எனக்கு உத்தரவு போட' என திருப்பிக் கேட்க, அப்போதே மகன் கொலையை மறந்து, மந்திரியாகும் வெறியில் அரசியல் காய் நகர்த்துகிறார் வேதநாயகம்.

ஒரு கட்டத்தில் விஜய்யின் ஆதர்ச நாயகனான தேவராஜ் ஐபிஎஸ், இந்த வேதநாயகத்தால் பாதிக்கப்பட்டு கண் பார்வை போய், வேலையையும் இழக்கிறார். விஜய்யின் கோபம் இப்போது இன்னும் பல மடங்கு பெருக, வில்லனை வேட்டையாட புறப்படுகிறார்... வேதநாயகத்தை அழிக்கிறார்... (ஹை... டைட்டிலுக்கு காரணம் கண்டுபிடிச்சிட்டோம்)

இதிலென்ன புதுசா இருக்கு என்கிறீர்களா... இந்தக் கேள்வி விஜய் அண்ட் கோவுக்கு போக வேண்டியது......

எனவே படத்தில் கலைஞர்களின் பங்களிப்பைப் பார்க்கலாம்.

கஷ்டப்பட்டு நடிக்க DR.விஜய்க்கு இதில் ஒன்றுமில்லை. காமெடி என்ற பெயரில் ஏதோ செய்கிறார். சத்தியமாக சிரிப்பு வரவில்லை. அதுக்குதான் வடிவேலு, சந்தானம் போல நிறை இருக்கிறார்களே... இவருக்கு ஏன் இந்த வேலை என்று தெரியவில்லை.

அனுஷ்கா அம்சமாக இருக்கிறார். அவரிடமிருந்து நமது ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது நிச்சயம் நடிப்பை அல்ல என்று நன்றாகத் தெரிந்து கொண்டு, தனது அழகால் அசரடித்து விட்டுப் போகிறார்.

கவுண்டரை காப்பியடித்தார் சந்தானம். இப்போது சந்தானத்தை காப்பியடிக்கிறார் இந்தப் படத்தில் விஜய்யுடன் ஒட்டிக் கொண்டே வரும் ஸ்ரீநாத். முடியல!.....டா சாமி

படத்தில் அட பரவாயில்லையே என்று சொல்ல வைப்பவர் ஸ்ரீஹரி என்ற தெலுங்கு பார்ட்டி. இவர்தான் தேவராஜ் எனும் நல்ல போலீசாக வருகிறார். ஆனால் கொடுமை என்னவெனில், இதே கேரக்டரை நாம் தரணியின் தில் படத்தில் பார்த்து விட்டோம்

முதல் பாதியில் காட்சிகள் பழசாக இருந்தாலும் உட்கார்ந்து பார்க்க முடிகிறது. இரண்டாம் பாதியில் ரொம்ப்பக் கஷ்டம்!

கோபிநாத்தின் ஒளிப்பதிவில் பெரிய சாகஸங்கள் எதுவும் இல்லை.

விஜய் ஆண்டனி... பாடல்களைக் கேட்ட பிறகு, அவரிடம் 'ஏன் இந்த கொல வெறி' என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

நல்ல ஸ்கிரிப்ட் என்றால், ஏற்கெனவே ஹிட்டான படங்களின் சீன்களை உருவி புதுசாக உருவாக்குவதுதான் என யாரோ தவறாக சொல்லிவைத்திருக்கிறார்கள் போல, இயக்குநர் பாபு சிவனிடம்.
(இயக்குநர் தரணியின் உதவியாளர்தான் வேட்டைக்காரன் இயக்குநர் பாபு சிவன்!).

படத்தில் விஜய் ஆண்டனியின் பாடலில் நிக்காம "ஓடு..........ஓடு.......ஓடு........" என்று ஒரு வரி அடிக்கடி வருகிறது. அனேகமாக படத்தைப் பார்த்து விட்டு வரும் ரசிகர்கள் இந்த வரியை தங்கள் நண்பர்களிடம் சொல்வதர்கோ...என்னவோ....


ஒரு வேண்டுகோள் : விஜய் இப்போது "காதலுக்கு மரியாதை" போல நல்ல ஸ்கிரிப்ட் தேடிகொண்டிருக்கிறார்..என்று ஒரு செய்தி...யாராவது நல்ல கதை இருந்தால் சொல்லுங்க....பா.....

December 2, 2009

THE OTHERS (2001)-தில்லர் ஒரு புதிய கோணத்தில்



****IMDB RATING:7.8/10****



ரொம்ப நாளா... பதிவு ஏதும் போட முடியல... உண்மையை சொன்னால் இப்போழுது எல்லாம் படங்கள் பார்ப்பது குறைவு.. இருந்தும் என் பதிவில் போட ரொம்ப நாளாய் எழுத நினைத்த ஒரு படம் ..

நாம் வாழும் வீட்டில் நம் கண்ணுக்கு தெரியாமல் மற்றொரு குடும்பமும் வாழ்ந்து வந்தால்? அதுவும் அவர்கள் அனைவரும் இறந்தவராக இருப்பின்....?

வழக்கமான பேய்ப்படங்கள் போல் அல்லாமல், வெறும் அமைதியை வைத்தே மிரட்டுகிறார் டைரக்டர் Alejandro Amenabar....ரத்தம், கொலை, கொடூரமான மேக்கப், துரத்தும் மர்மப்பேய், இவை எதும் இல்லாமல் நம்மை மிரட்டும் த்ரில்லர் திரைப்படம் "THE OTHERS".

முழுப்படமும் ஒரே வீட்டுக்குள் நடந்து முடிகிறது.
இரண்டாம் உலகப்போரின் முடிவில் தொடங்குவதாய் கதை. தன் வீட்டில் வேலை செய்து வந்த பணியாட்கள் அனைவரும் திடீரென்று ஒரு நாள் காணாமல் போக, புதிதாக வரும் மூன்று பணியாட்களுக்கு வீட்டை சுத்தி காண்பிப்பதிலிருந்து ...... ஒவ்வொரு அறைக்கும் செல்லும் முன் முன்னிருந்த அறையை பூட்டிவிடுகிறார் Grace. காரணம் அவளின் இரு குழந்தைகள்... Grace-ன் குழந்தைகளுக்கு Photo sensetive அலர்ஜி, எனவே பகல் வேளைகளில் அவர்கள் இருக்கும் அறைகளின் திரைகள் எப்போதும் மூடப்பட்டே இருக்கும். அறைகள் அனைத்தும் பூட்டபட்டே இருக்க வேண்டும். இதனாலேயே படம் முழுவதும் விளக்கு வெளிச்சத்திலேயே நகர்கிறது. ஆரம்பம் முதலே Grace-ன் காரக்டர் சற்று வித்தியாசத்துடனே கையாளப்படுகிறது. அதே போல் வரும் மூன்று பணியாட்கள், சற்று மர்மத்துடனே நடமாடும் ஆட்கள்.

முதல் இருவது நிமிடங்கள் படம் வெகு அமைதி. Anne, Graceயிடம் இந்த வீட்டில் நம்மை தவிர இன்னும் சிலர் இருப்பதாக கூறும்போது தான் படம் சற்று விறுவிறுப்புடன் தொடங்குகிறது. Victor என்ற சிறுவனை தான் அடிக்கடி பார்ப்பதாகவும் அவனுடன் பேசுவதாகவும் சொல்லும் Anne-யை நம்ப மறுக்கிறாள் Grace. பொய் சொல்வதாக தண்டிக்கவும் படுகிறாள் Anne .... Victor அவ்வப்போது Anne-ன் கண்களுக்கு மட்டும் காட்சியளிக்கிறான். இது அவனுடைய வீடு, நீங்கள் இந்த வீட்டை உடனே காலி செய்ய வேண்டும் என்றும் தெரியப்படுத்துகிறான். முதலில் Anne சொல்லும் கதைகளை நம்ப மறுக்கிறார் Grace, ஆனால் அதற்க்கு பிறகு வரும் நிகழ்வுகளால், Grace Anne சொல்வது உண்மை தானோ என நம்ப தொடங்குகிறாள்.

Anne தினமும் இவர்களை இந்த வீட்டுக்குள் பார்ப்பதாக நான்கு உருவங்களை ஒரு தாளில் வரைந்து காண்பிக்கிறாள். ஒரு அப்பா,அம்மா மற்றும் சிறுவன் Victor. இவர்களுடன் சூநியிக்காரி போல் இருக்கும் ஒரு கிழவி. யார் அவர்கள் என்ற ஆராய்ச்சியிலும் சிறிது நேரம் இறங்குகிறார் Grace.



யார் இந்த நான்கு பேர் ? மூன்று பணியாகளின் மர்மங்கள் ? Grace-ன் வித்தியாசமான கேரக்டரிசம் எதனால்...? - இவைதான் மீதிப் படம்.


படம் நகர நகர, எப்படி முடியுமோ என்று எதிர்பார்ப்பு கடைசி நிமிடங்கள் வரை கூடிக்கொண்டே தான் போகிறது. கடைசியில் படத்தின் முடிவு படு வித்தியாசம்.

படத்தின் மூழுக்கதையும் எழுத வார்த்தைகள் வரவில்லை..நான் பார்த்த தில்லர் படங்களில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று..படத்தில் குறிப்பிட பட வேண்டிய விஷயங்கள்:

*மொத்தமே ஆறு கேரக்டர்ஸ் தான். இந்த ஆறு கேரக்டர்ஸ் நடிப்பு oowh...குறிப்பாக குழந்தைகள் நடிப்பு.. பிரதான கேரக்டர் Grace-யாக (Nicole Kidman).

*காமெரா மற்றும் படத்தின் பின்னனி இசை படத்தின் உயிர் நாடி என்றே சொல்லலாம். அந்த தனி வீடு, அது அமைந்துள்ள பனி மூட்ட லொகேஷன்,



*என்ன படத்தின் சில காட்சிகள் Sixth sense படத்தை நினைவூட்டுக்கிறது.



*குழந்தையின் அழுகுரல், பியானோ வாசிப்பது இந்த இரு காட்சிகளும், அற்புதம்.
etc etc. கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்...!!

October 24, 2009

KILL BILL- VOL I & II - விறுவிறுப்பான அதிரடி & பழிவாங்குதலும்



****IMDB RATING: (VOL-I)-8.2/10****TOP 250#143***

****IMDB RATING: (VOL-II-8.0/10****TOP 250#233***

சற்றும் ஒரு புள்ளியை கொண்டு 360 டிகிரி ஒரு வலையம் வரைந்து,அந்த வலையத்தை வலைமாக பார்க்கும் தட்டையான மனபாங்கு கொண்ட படைப்பாளிகிளுக்கு நடுவே வேறுகோணத்தில் அந்த வட்டத்தை புள்ளி, புள்ளியாக பிரித்து பார்க்கமுற்படுபவர்களை மனநிலை பிறழ்ந்தவன் என சமுதாயம் முத்திரை குத்தும்.

நாள் முழுதும் நடக்கும் நிகழ்ச்சிகளை மனது அட்டவணைப்படுத்துகையில் சில காட்சிகள் முன்னுக்கு பின்னாக பதியும், காலக்குழப்பம், காட்சிக்குழப்பம் என ஒரு தெளிவான அட்டவணை அமைய சற்று நேரம் எடுத்துக்கொள்ளும்.


அப்படி ஒரு தேர்ந்த புதிரைப்போல மிகுந்த ஆவலை நம்முள் கிளர்த்தும் திறன் கொண்டவை Quentin-னின் படைப்புகள். திரைமொழி அரிச்சுவட்டில் ஒரு திரையில் பல புதிய வார்த்தைகளை, கதைவேறு, களம் வேறு, அனுபவம் வேறு என்று புகுத்திய பெருமை இவருக்கு உண்டு. தன் படைப்புகளுக்கென கட்டமைக்கப்பட்ட படிமங்களுடனே ஒவ்வொரு புதுமுயற்சியையும் தருவதால், பழைய மொந்தை பழைய கள் என ஒதுக்கிவிட முடியாது.

இப்படி பழைய மொந்தை பழைய கள்(ளில்) ஒன்று தான் 2003 மற்றும் 2004-ல் வெளிவந்த KILL BILL VOL I & II.. இரண்டாம் பாகத்தில் கதைக்கான பின்புலனும், முதல் பாகத்தில் அரைவாசி கதையும் சொல்லப்படும் மிகவும் ஆர்வத்திற்குரிய படம்.

முதல் பாகத்தில் மண ஒத்திகை கோலத்தில் கொல்லப்படும் ஒரு பெண், தப்பி பிழைத்து தன்னை கொன்றவர்களை பழிவாங்கும் கதை பழிவாங்கல் ஒரு கலையாக, மிக மிக அழகாக சொல்லப்பட்டிருக்கும் படம். அறுந்து விழும் கால்கள் கைகள் தலைகள், ரத்தம், கத்தி என படம் ஒருவித வன்முறை உலகில் நமை ஆழ்த்துகிறது.


இரண்டாம் பாகத்தில் அந்த மணப்பெண் யார் எதற்காக கொல்லபடுகிறால் என விரிகிறது. முதல் பாகத்தின் விறுவிறுப்போ, ஈர்ப்போ இந்த படத்தில் இல்லை, எனினும் பார்த்தாக வேண்டிய படம். இந்த படத்தைப் பற்றியோ அல்லது படத்தின் கதையையோ எழுத ஆரம்பித்தால், பக்கம் பக்கமாக எழுத வேண்டிவரும்.

இவரது படத்தில் அவர் கையாலும் அடிப்படை யுத்திகள் என்னை பொறுத்த வரை:

*கேமராக்கோணம் என பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் மிகவும் இயல்பான கோணங்கள் ஆனால் பாத்திரங்கள் வித்தியாசமான கோணங்களில் தென்படுகிறார்கள்.
*கூர்மையான வசனம், இயல்பான மொழியில் பக்கம் பக்கமாக பேசும் பாத்திரங்கள் பார்க்கும் போது நமக்கு எதோ ஒரு நாவல் படிப்பதை போன்ற உண்ர்வு வரும்..
*கதைக்களத்தில் நம்மை மெதுமெதுவாக மூழ்கடிக்கும் அவசரமற்ற கதைநகர்த்தல்.
*பெண்களுக்கு அதிக முக்கியத்துவம்.
*ஒருவர் பேசும்போது, பேசுபவரி விட்டு கவனிப்பவரை காண்பிப்பது.
*ஒரு படைப்பிற்கும் அடுத்த படைப்பிற்கும் படிமங்களின் மூலம் தொடர்பு ஏற்படுத்துவது.
*பழைய இசையின் மீதான் அதீத விருப்பம். எப்போழுதும் கார், பப்’களில் வழியும் jAZZ, Country types.

இவரது மற்ற படைப்புகள்: Pulp Fiction, Resrvior Dogs, Jackie Brown, Death Proof & Inglourious Basterds.


மனதை உருக்கும் படங்கள் ஆயிரம் இருக்கிறது. வெவ்வேறு மொழிகளில், அவரவர் கலாச்சாரத்தை முன்வைத்து அவை செல்லும் கருத்துக்கள் ஆயிரம் இருக்கலாம். Quentin-னின் படைப்புகள் அத்தகையன அல்ல. நிச்சயம் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் ஒரு மிக சிறந்த சினிமா அனுபவத்திற்காக..

திரையுக்தி, ஒருவித அழகியல் வன்மம், அதிர்ச்சி எனும் பிரிவிகளில் தவிர்க்க முடியாத இயக்குனர். அவரின் அனைத்து படங்களையும் நீங்கள் ரசிக்கலாம். திரையனுபவத்தின் இன்னொரு பரிமாணம் Quentin Tarantino

My Rating: 8.5/10

October 20, 2009

Eternal Sunshine of the Spotless Mind - நினனவுகளை தொலைத்தல்



****IMDB RATING: 8.5/10****

நாம் எல்லோரும் எதோ ஒரு தருணத்தில் இந்த கேள்வியை நம்மை நாமே கேட்டுக்கொள்வோம், இந்த வாழ்க்கையை
நாம் எல்லோரும் எதோ ஒரு தருணத்தில் இந்த கேள்வியை நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்,......

இந்த வாழ்க்கையை நாம் எப்போழுது வேண்டுமானலும் அடித்து திருத்தி எழுத முடியுமென்றால்? நினைவுகளை நம்மால் அழிக்க முடியுமானால்? மீண்டும் வாழ்வதற்கான வாய்ப்பு கிடைத்தால்?...... அப்படி ஒரு களத்தை கொண்டு 2004-ல் வெளிவந்த திரைப்படம் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற திரைப்படம் தான் Eternal Sunshine of the Spotless Mind.


Joel & Clementine-னும் இருவேறு துருவங்கள். இருவரும் தற்செயலாக சந்தித்து காதல் வயப்படுகின்றனர். சீராகச் செல்லும் அவர்களது உறவில் சிறு சிறு ஊடல்கள். சண்டைகள். எதற்குமே எளிதில் உணர்ச்சி வசப்படும் Clementin Joel-லுடனான உறவைத் துறக்க நினைக்கிறாள்.

Lacuna என்ற நிறுவனம் மூளையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவுகளை மட்டும் அழிப்பதை அறிந்த Clementine அவர்கள் மூலமாக Joel குறித்த நினைவுகளை அழித்துவிடுகிறாள்.

இதை நண்பர்கள் மூலம் அறியும் Joel தானும் அதே நிறுவனத்தின் மூலமாக Clementine-னின் நினைவுகளை அழிக்கச் செல்கிறான். தற்காலத்தில் இருந்து ஆரம்பித்து கடந்த கால நினைவுகள் அழிக்கப்படுகின்றன. அவன் Clementine-னுடன் கழித்த இனிமையான பொழுதுகள் அவன் ஆழ்மனதிற்கு தெரிகின்றது. அவன் Clementine-னை முழுமையாக இழக்கப் போவதை உணர்கிறான். அவளின் நினைவுகளை அழியாமல் காப்பதற்கு முயல்கிறான்.

அவன் அதில் வென்றானா, கடந்த கால நினைவுகள் அழிந்த க்ளெம்ன்டைனும் Joel -லும் மீண்டும் இணைவார்களா?........

படத்தில் Joel -Clementine-ன் காதலைத் தவிர Lacuna நிறுவனத்தின் தலைமை மருத்துவருக்கும் அதில் பணிபுரியும் மேரிக்கும் இடையேயான உறவு ஒரு சிறுகதை. இது சற்றும் எதிர்பாராத நேரத்தில் திரைக்கதையில் ஒரு திருப்பத்தைக் கொண்டு வரும் கிளைக்கதை.

அதேபோல் Clementine-னின் நினைவுகளை அழித்த Patrick அவள்பால் ஈர்க்கப்பட்டு Clementine Lacuna நிறுவனத்திடம் ஒப்படைத்த Joel -லின் அன்பளிப்புகளைக் கொண்டே அவளது அன்பைப் பெற முயற்சிப்பது சுவாரசியம்.


என்னை மன்னிச்சுடுங்க!.....இந்த படத்தின் முழுக்கதையும் கூறிவிட்டால் படம் பார்க்கும்போது அடுத்தடுத்த காட்சிகள் தரும் ஆச்சரியங்களைத் தவறவிடக்கூடும்.

கதாநாயகன் Joel-யாக Jim Carrey நடித்திருக்கிறார். Jim Carrey -யின் வழக்கமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் இருந்து வெகுவாக மாறுபட்ட Joel கதாபாத்திரத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் வாழ்க்கையில் விரக்தியடைந்த இளைஞனாகவும் நினைவுகள் அழிக்கப்படும்போது அதை தடுத்து நிறுத்த துடிக்கும் ஆழ் மனதின் மூலமாக Clementine-னின் நினைவுகளை அசைபோடும் போதும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

Kate Winslet Clementine-னாக நடித்திருக்கிறார். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு வேகமாக பேசுவதிலும் முகபாவங்களை சட்டென மாற்றுவதிலும் சிறப்பாக செய்திருக்கிறார். இந்த படத்திற்காக சிறந்த நடிக்கைக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். Kirsten Dunst, Elijah Wood, Mark Ruffalo ஆகியோரும் நடித்துள்ளனர்.

காலத்தில் முன்பின்னாக செல்லும் காட்சியமைப்புகள் பார்வையாளர்களுக்கு குழப்பம் ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளன. Clementine கதாபாத்திரத்தின் மனநிலைக்கு ஏற்றவாறு அவர் தலைமுடி நிறத்தையும் மாற்றிக்கொள்வது போல் அமைத்திருப்பது காட்சி நடக்கும் காலத்தை எளிதாக அறிய உதவுகிறது. கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் திரைக்கதையில் அடுத்தடுத்து ஏற்படும் திருப்பங்களும் நம்மைப் படத்துடன் ஒன்றவைக்கின்றன.

ஒவ்வொரு முறையும் இந்த திரைப்படம் குறித்து எழுத நினைத்து ஆரமிக்க இந்த படம் குறித்த நினைவுகள் என்னை கட்டிப்போட்டு விடுகின்றன.

நினைவுகளை அழிப்பது குறித்தும், இந்த படத்தின் கதாபாத்திரங்கள் குறித்தும் காதல் ஏற்படுத்தும் ஆச்சரியங்கள் குறித்துமான சிந்தனைகள் மனதை ஆட்கொள்கின்றன. உலகில் யாராலும் எளிதில் தீர்க்க முடியாத புதிர் மனித மனம். அதை விடக் கடினமான புதிர் காதல் தான் இல்லையா?.......

October 6, 2009

ஈரம் - சமூக செய்தியோடு ஒரு திர்ல்லர்..


தமிழில் சமிபத்தில் நான் கண்ட மெகா படங்கள் எல்லாம் என்னை கவிழ வைக்க.....சிறிய செலவில் கதையை மட்டும் நம்பி வெளிவந்த எனக்கு பிடித்த படங்கள் நாடோடிகள், சுப்பிரமணியபுரம், யாவரும் நலம்,......இப்போது இந்த பட்டிலில் இடம் பிடித்த படம் தான் "S" பிக்ச்சரிலிருந்து வெளிவந்திருக்கும் "ஈரம்"தமிழில் மீண்டும் ஒரு தில்லர்.

சிந்து மேனன் இறப்பதிலிருந்து கதை தொடங்குகிறது.........

கள்ள காதல் தெரிய வந்த அவமானம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டதாக என்று அப்பார்ட்மென்ட் அக்கம் பக்கத்தினர் முதல், சிந்துவின் கணவன் 'நந்தா' வரை நம்புகின்றனர்.

இந்த சம்பவத்தை விசாரிக்க வரும் அசிஸ்டென்ட் கமிஷனர் 'ஆதி'. சிந்துவின் முன்னாள் காதலன். சிந்து இவரது முன்னால் காதலி என்பதால் இவர் கொஞ்சம் அதிகமா அக்கரை எடுத்து கொள்கிறார்.


பின்பு அந்த அப்பார்ட்மென்ட்டில் இருக்கும் சிலரும் தொடர்ந்து சாக தொடங்க, போலிசின் கவனம் தீவிரமாகிறது. எல்லா மரணத்திலும் இருக்கும் ஒரே தொடர்பு தண்ணீர். படம் மரணங்கள், விசாரணை, சிந்துவை திருச்சியில் கல்லூரியில் படித்த போது காதலித்த ஆதியின் நினைவுகள் என்று மாறி மாறி அழகாய் செல்கிறது.

ஒரு கட்டத்தில், இந்த மரணங்களுக்கு காரணம் "தண்ணீர்" என்னவென்பதை ஆதி அறிகிறார்.
என்ன நடந்தது? என்ன காரணம்? "Invesgation Begins".......

படத்தில் எனக்கு பிடித்ததே படத்தை குளிர்ச்சியா அழகா காட்டுது. மேலும் படத்தின் சுவாரஸ்யம் கெடாமல் படத்தை கொண்டு சென்றது.படத்தின் பின்னனி இசையும், ஒளிபதிவும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. ஸ்பெஷல் எபெக்ட்ஸ் டெக்னிக்கலா நல்லா இருக்கு.

படத்தின் மிக முக்கியமான கேரக்டர் தண்ணீர். அதுவும் செமையா இருக்கு படம் முழுதும். நாயகன் ஆதி செம ஸ்டைலா இருக்கிறார். நல்லாவும் நடிச்சிருக்கிறார். நந்தா திரையில் காதல் & நகைச்சுவை பார்த்த எனக்கு இதில் அழுத்தமான நடிப்புடன் கொஞ்சம் வித்தியாமாக தெரிகிறார்.

சிந்து மேனன், சரண்யா இவங்களும் நல்லா பண்ணி இருக்காங்க. (என்னை பொறுத்த வரையில் சிந்து இந்த ப்டத்தில் கொஞ்சம் அழகாய்.......!)

படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள், அதில் ஒன்று தீம் Music. இருக்கும் 'தரை இறங்கிய' மிக அழகான வரிகளை கொண்ட மிக அழகான பாடல்.

படத்தின் சில குறைகள் இருக்கு. படத்தின் நீளம் போன்றவை. ஆனா மேக்கிங் அதை மறைக்கிறது. சில கிளிஷே காட்சிகளை தவிர்த்திருந்தாலும், திர்ல்லர் படத்தில் அப்பார்மேன்ட்டை கீழிருந்து மேலாக எடுத்து போன்ற கிளிஷேக்களையும் தவிர்த்திருந்த்திருக்கலாம்.

படத்தை இன்னொரு பாதையில் பார்த்தால்........

பெண்களுக்கு எதிரான சமூக அவலத்தை படமாக்கி இருக்கிறார்கள். மேலும் இன்றைய நகர கலாச்சாரத்தில் எங்கோ நடக்கும் சில தப்புகளுக்கு, சில அப்பாவி பெண்களும் தவறுதலாக பலியாகின்றனர் என்பதையும்.... இந்த நுகர்வு கலாச்சாரத்தில் மனிதர்களின் குணங்கள் பற்றியும் பேசுகிறது "ஈரம்"- மனதில் ஈரம் இல்லாத மனிதர்களுக்காக.......


My Rating : 8.5/10

September 27, 2009

மெமண்டோவிலிருந்து.....கஜினிக்கு (எனது பயணம்)
















எல்லோருக்கும் தெரிந்த செய்தியாக இருந்தாலும்....ஏனோ இப்டத்தை பற்றி எழுதனும் தோனுச்சு....என் மனசுல....

"மெமண்டோ” - கிறிஸ்டோபர் இயக்கத்தில், 2000-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான. இந்தப் படத்தினை தழுவி, முருகதாஸ் இயக்கத்தில் 2005-ம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படம் “கஜினி”.

நினைவுகள் மறப்பது என்ற பொதுவான அம்சம் இந்த இரண்டு படங்களிலும் இருந்தாலும், கதை சொல்லிய விதத்தில், இரண்டு படங்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.


தலையில் பலமாக அடிபட்ட கதாநாயகனால், புதியதாக நினைவுகள் எதையும் ஏற்படுத்திக் கொள்ள முடியாத நிலைமை. பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை, அந்த பதினைந்து நிமிடங்களில் நடந்த அனைத்தும் மறக்க, மீண்டும் புதிய நினைவுகளுடன் அடுத்த பதினைந்து நிமிடங்களை எதிர்கொண்டாக வேண்டியிருக்கிறது. இந்த நிலையிலும், தனது மனைவியை கொன்றவனின் முகம் மட்டுமே நினைவினில் இருக்க, அவனை பழிவாங்கும் நோக்கத்தில் கதாநாயகன் போராடுவதுதான் இரண்டு படங்களின் கதை.

ஆனாலும், கதை சொன்ன விதத்தில் மெமண்டோ பல படிகள் கஜினியை விட மேலே நிற்கிறது. எப்போதும் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி இப்படி பார்த்த நமக்கு, கடைசி காட்சியில் ஆரம்பித்து முதல் காட்சியை நோக்கி கதையைக் கொண்டு செல்கிறது மெமண்டோ.
தவிர, ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் செய்யும் போது, தமிழுக்கு ஏற்ப கதையில் நிறைய மாற்றங்கள் செய்திருப்பார் இயக்குனர் முருகதாஸ். இந்த மாற்றங்கள்தான் கஜினியின் வெற்றிக்குக் காரணமென நான் நினைக்கிறேன்.

•திரைக்கதை சொல்லும் பாணி-
ஒரு தமிழ் படத்தின் திரைக்கதை எவ்வாறு இருக்க வேண்டுமோ, அதன்படி கஜினியில் திரைக்கதை அமைத்திருப்பார் இயக்குனர். ஒரு புள்ளியில் ஆரம்பித்து, முற்றுப் புள்ளியை நோக்கி நகரும் வழக்கமான பாணிதான். மெமண்டோவைப் போல திரைக்கதையை இடியாப்பச் சிக்கல் ஆக்கியிருந்தால் படம் பப்படம் ஆகியிருக்கும்.

•சூர்யா-
அசின் காதல் காட்சிகள் - தமிழில் இது ஒரு குறிப்பிடத்தக்க அழகான மாற்றம். ஆங்கிலத்தில் காதல் காட்சிகளென்று எதுவும் கிடையாது. ஆனால் தமிழில் இரண்டு மூன்று டூயட்டுகள் இல்லையென்றால், படம் ஓடுவது கடினமாயிற்றே. அதனால் அசின் அறிமுகம். ஆனால் அந்தக் காட்சிகளும், "சுட்டும் விழி சுடரும்" படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

•வில்லன்-
தமிழ்க் கதாநாயகர்கள் அடித்து வீழ்த்த வில்லன்கள் தேவை (விஜய் போன்ற கதாநாயகர்களுக்கு குறைந்த பட்சம் 50 பேராவது தேவை!).கஜினியிலும், ஒன்றல்ல, இரண்டு வில்லன்கள். இப்பத்தின் சண்டைக் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டன. அதிலும் இறுதி சண்டைக் காட்சியில் தொழில்நுட்ப ரீதியிலும் சிறப்பாக செய்திருந்தனர். ஆனால், மெமண்டோவில் சண்டைக்காட்சிகளே இருக்காது.

•மசாலாப் பாட்டு-
'சி' வகுப்பு ரசிகனையும் திருப்திப் படுத்த வேண்டுமே, அதற்காக நயன்தாராவும், அந்த ஒரு பாட்டும். இந்த மாதிரியான பாடல்களை வைக்க மட்டும் தமிழ் இயக்குனர்களுக்கு எப்படியாவது ஒரு காரணம் கிடைத்து விடுகிறது.
 
தமிழ்ப் படங்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த காலங்களிலும், பத்திரிக்கைகளில் 'தமிழ் மசாலாத்தனங்கள் நிறைந்த படம்' என்று வரும் போது, பெரிதாக வித்தியாசம் எதுவும் தெரிந்ததில்லை. ஆனால், இப்போது மற்ற மொழிப் படங்களை பார்க்க ஆரம்பிக்கும் போதுதான் 'தமிழ் மசாலா'வின் அர்த்தம் தெரிகிறது. :) இப்படி, தமிழ்ப் படங்களுக்க்காக, தன் சுயத்தை இழந்த நல்ல திரைக்கதைகள் ஏராளம்.
 
இவ்வாறு திரைக்கதையில் வித்தியாசம் காட்டிய மற்ற தமிழ் படங்கள் ஆய்த எழுத்தும், விருமாண்டியும் ஓரளவுக்கு வெற்றி பெற்றன.


MY Rating: 8 / 10 (Memento)

September 8, 2009

Casablanca - 1942 (காலத்தை வென்ற காதல் / காவியம்)




எத்தனை முறை பார்த்தேன் என்று தெரியவில்லை........உலகின் மிகச் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்களில் தவறாமல் இடம்பிடிக்கும் இந்த திரைப்படம்

Humphrey Bogart நடிப்பு- வசன உச்சரிப்பு, Ingrid Bergman அழகு, வசனங்கள், இனிமையான பின்னணி இசை, பாடல்கள், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட காட்சியமைப்புகள் - Casablanca திரைப்படத்தைப் பரிந்துரைக்க இதற்கு மேல் வேறென்ன காரணம் வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.


இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் ஆப்பிரிக்காவிலுள்ள Casablanca என்ற ஊரில் நடக்கும் கதை.

புரட்சியாளர்களும் பொதுமக்களும் Casablanca வழியாக, போலி விசா மூலமாக ஜெர்மன் நாசி படைகளிடமிருந்து அமெரிக்காவிற்கு தப்பிக்கிறார்கள். விக்டர் ஜெர்மனிக்கு எதிராக கலகம் செய்யும் புரட்சியாளன். மனைவி இல்சாவுடன் (Ingrid Bergman) அமெரிக்கா தப்பிச் செல்ல கேசபிளாங்கா வருகிறான். ஆனால் ஜெர்மன் இராணுவ அதிகாரி உள்ளூர் காவல் அதிகாரி மூலமாக அவர்களுக்கு விசா கிடைக்காமல் தடுக்க முயல்கிறார். ஒரு தரகன் மூலமாக போலி விசா வாங்குவதற்கு ரிக் (Humphrey Bogart) நடத்தும் கஃபே-விற்கு வருகிறார்கள். அந்த தரகன் விசா பத்திரங்களை பாதுகாப்பிற்காக ரிக்கிடம் ஒப்படைத்துவிட்டு வரும்போது போலீசாரால் கொல்லப்படுகிறான்.



ரிக் இல்சாவின் முன்னாள் காதலன். புரட்சியாளனான ரிக், சில வருடங்களுக்கு முன் இல்சாவை பாரீஸில் சந்திக்கிறான். ஏற்கனவே விக்டரை மணந்த இல்சா, விக்டர் போராட்டத்தில் இறந்துவிட்டதாக தகவலறிந்து துக்கத்தில் இருக்கிறாள். ரிக்-கும் இல்சாவும் காதல் வயப்படுகிறார்கள். பாரீஸை ஜெர்மன் ரானுவம் கைப்பற்றிய நாளில் ரிக்-கும் இல்சாவும் அங்கிருந்து தப்பிக்க முடிவெடுக்கிறார்கள். அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் விக்டர் உயிருடன் இருப்பதாக இல்சாவிற்கு செய்தி வருகிறது. ரிக்கைப் பிரிந்து விக்டரைத் தேடிச் செல்கிறாள் இல்சா. அவளைக் காணாத ரிக் கேசபிளாங்காவிற்கு தனியாகக் கிளம்பி வந்து கஃபே நடத்துகிறான். அங்கிருந்தபடியே போராளிகளுக்கும் மறைமுகமாக ஆதரவளிக்கிறான்.பல நாட்களுக்குப் பிறகு கஃபேயில் சற்றும் எதிர்பாராத இந்த சந்திப்பில் ரிக்-கும் இல்சாவும் அதிர்ச்சியடைகிறார்கள். விக்டரும் இல்சாவும் தப்பிச் செல்லத் தேவையான விசா பத்திரங்கள் ரிக் வசம் உள்ளன. விக்டரும் இல்சாவும் பத்திரமாகத் தப்பிச் செல்வார்களா, ரிக்-இல்சா மீண்டும் இணைவார்களா, ஜெர்மன் இராணுவ அதிகாரியால் விக்டருக்கும் ரிச்சர்டிற்கும் இருக்கும் ஆபத்து நீங்குமா என்பதை வெள்ளித் திரையில் காண்க.



முக்கோனக் காதல் கதைகளுக்கெல்லாம் முன்னோடி என்று கூறத்தக்க அளவு மிகச் சிறப்பாக எடுக்கப்பட்ட திரைப்படம் Casablanca. அதே நேரத்தில் இதை காதல் படம் என்று வகைப்படுத்தவும் முடியாது. இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் ஜெர்மன் நாஜிப்படைகள் செய்த கொடுமைகளையும், பொதுமக்கள் பட்ட அவதிகளையும், புரட்சியாளர்கள் சந்தித்த போராட்டங்களையும் வசனங்கள் மூலமாகவும் சிறுசிறு கதாபாத்திரங்கள், ரிக் நடத்தும் கஃபேயில் நடக்கும் காட்சிகள் மூலமாகவே உணர்த்தியிருப்பார்கள்.

அமெரிக்கா தப்பிச் செல்ல விசா வாங்குவதற்காக உயிரையும் பணயம் வைக்கத் தயாராய் இருப்பதும், ஜெர்மன் இராணுவ வீரர்களிடமிருந்து தப்பிக்க தங்களை ஆங்கிலேயர்களாகக் காட்டிக்கொள்ள அரைகுறை ஆங்கிலம் பேசும் தம்பதிகளும், தனக்கு விசா கிடைக்காவிட்டாலும் தன் குடும்பத்தார் தப்பித்தால் போதுமெனத் துடிக்கும் கதாபாத்திரங்கள் மூலமாகவும் மிகச் சிறப்பாக அன்றைய சூழலை படம்பிடித்திருக்கிறார்கள்.



இருதலைக் கொள்ளியாகத் துடிக்கும் இல்சா, அவள் மீது கொண்ட காதல் சற்றும் குறையாத ரிக், அதைப் பற்றி ஏதுமறியாமல் தன் மனைவி மேல் அளவுகடந்த அன்பை வைத்திருக்கும் விக்டர் என மூன்று கதாபாத்திரங்களும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

ரிக்-கிற்கும் இல்சாவிற்கு மிடையேயான காதல் காட்சிகளும் வசனங்களுமே இந்த படத்தைத் திரும்பத் திரும்ப என்னை பார்க்க வைக்கிறது.



ரிக்-காக (Humphrey Bogart). வசன உச்சரிப்பும் Body language Facial Expressions ...அவரின் ரசிகனாகிவிட்டன. அதே போல் Ingrid Bergman அழகு, நடிப்பு. ஒரே காட்சியில் வசனங்களுக்கேற்றவாறு சட்டென மாறும் முகபாவங்கள் ரசிக்கவைக்கும். படத்தில் பாடல்களும் உண்டு. குறிப்பாக ரிக்-கின் கஃபேயில் பாடகராக இருக்கும் சாம் இல்சாவின் விருப்பத்திற்காக பாடும் ஒரு பாடல். அந்த பாடலின்போது Ingrid Bergman நடிப்பும் பாடலின் முடிவில் போகார்ட்டின் எண்ட்ரியும் அட்டகாசம். ஓரிரு காட்சிகள் சிறிது நாடகத் தன்மையோடு இருப்பதாகத் தோன்றினாலும் அடுத்தடுத்து வரும் காட்சிகளும் வசனங்களும் அதை மறக்கச் செய்துவிடும்.



My Rating: 9.5/10

August 9, 2009

Mumbai Meri Jaan. (வாழ்க்கையின் தருணங்களில் ஒரு பயணம்)


வலைபதிவில் பதிவு போட்டு ஒரு மாதத்துக்கு மேல ஆச்சு...எல்லோரும் என்னை முதல்ல மன்னிச்சுடுங்க...வேலை பளூ காரணத்தால் என்னால் படம் பார்க்க நேரமில்லை... இருந்தபோதும் என் பொட்டியில் படங்களை சேர்க்க தவறுவது இல்லை...அப்படி நான் சேர்த்த படங்களில் இருந்து நேற்று ஒரு படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது... படம் பார்த்து முடித்த பின் நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல படம் பார்த்த ஒரு............இன்னியும் உங்களை காக்க (அறுக்க) விரும்பல.... படம் 2008-ல் வெளிவந்த Mumbai Meri Jaan.


11, ஜூலை 2006 - மின்சார ரயில்களில் தொடர் குண்டுவெடிப்புகளால் மும்பை மாநகரம் ஸ்தம்பித்த நாள். அந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம், தனிமனித வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கிறது, இத்தகைய கொடூரங்களிலிருந்து ஒரு நகரமும் அதில் வாழ் மக்களும் எப்படி தங்களை மீட்டெடுக்கிறார்கள் என்பதை ஆறு வெவ்வேறு கதாபாத்திரங்கள் மூலமாக திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குனர் நிஷிகாந்த் காமத் எவனோ ஒருவன்).




துக்காராம் பாட்டீல்(பரேஷ் ராவல்) ஓய்வு பெறப் போகும் போலீஸ் கான்ஸ்டபிள். தன் பணிக்காலத்தில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என ஒத்துக்கொள்ளும் ஒரு சராசரி காவலர். தன் நகைச்சுவையுணர்வின் மூலமும் கனிவான பேச்சின் மூலமும் சக காவலரிடமும் மக்களிடமும் அபிமானம் பெற்றவர். நிதர்சனத்தை உணர்ந்து அதற்கேற்றாற்போல் தன் மனதை தயார்படுத்திக் கொண்ட சாதாரண மனிதர்.

ரூபாலி(சோஹா அலி கான்) தொலைக்காட்சி நிருபர். எந்த செய்தியையும் மிகைப்படுத்தி உணர்ச்சிகளை தூண்டி வியாபாரமாக்கும் சராசரி செய்தி நிருபர். அவளின் காதலன் அவள் இவ்வாறு செய்வதைக் குறை சொல்லும்போது அதை நியாயப்படுத்தும் தன் பணியும் அதில் வெற்றியும் மட்டுமே குறிக்கோளாய்க் கொண்ட இளம் நிருபர்.

இர்பான் கான் அந்தேரியில் சேரியில் வாழும் தமிழன். இரவு நேரங்களில் சைக்கிளில் டீ விற்று பிழைப்பு நடத்துபவன். தன் ஏழ்மையின் காரணமாக பல தருணங்களில் பலரின் கேலிக்கும் இளக்காரத்துக்கும் ஆளானவன். பகட்டானதொரு அங்காடியில் தன் குடும்பத்தினர் முன் அவமானப் படுத்தப்படுகிறான்.

சுரேஷ்(கே.கே.மேனன்) சேல்ஸ்மேன். கடனாளி. இந்து அடிப்படைவாதி. முஸ்லீம்களின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவன். வேலையற்ற நண்பர்களுடன் டீக்கடையில் பொழுதைக் கழிப்பவன். குண்டு வெடிப்பு நடந்த தினத்தன்று டீக்கடையில் ரகசியமாகப் பேசிக்கொண்ட மூன்று முஸ்லீம் இளைஞர்கள் மீது சந்தேகம் கொள்கிறான். இயல்பாகவே முஸ்லீம்கள் மீது வெறுப்பு கொண்ட சுரேஷ் அவர்கள் ஏதோ சதித்திட்டம் தீட்டுவதாக எண்ணுகிறான்.

நிகில்(மாதவன்) மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவன். வெளிநாட்டு வாய்ப்புகளை உதறிவிட்டு மும்பையில் வேலை செய்யும் நடுத்தர வயது இளைஞன். சுற்றுப்புற தூய்மை பற்றி கவலை கொள்கிறான். தினமும் அலுவலகத்துக்கு மின்சார ரயிலில் சென்று வருகிறான். ப்ளாஸ்டிக் உபயோகிப்பதைத் தவிர்க்கச் சொல்லி மற்றவர்களை அறிவுறுத்துகிறான்.

சுனில் கதம்(விஜய் மெளரியா) புதிதாக காவல்துறையில் சேர்ந்து துக்காராமுடன் பணிபுரியும் இளம் காவலர். சாதிக்கும் வெறியும் காவல்துறைக்கு தன்னாலான பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற உத்வேகமும் கொண்ட இளைஞர். ஆனால் மேலதிகாரிகளின் ஆணையால் பல சமயங்களில் கைகள் கட்டப்பட்டு அதனால் துறையின் மீது வெறுப்புடனும் சுயபச்சாதபத்துடனும் தவிப்பவர்.

ஜூலை 11, 2006 அன்று நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் இந்த ஆறு பேரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கிறது, அதன் தாக்கம், அதிலிருந்து இவர்கள் எவ்வாறு மீள்கிறார்கள் என்பதை சிறப்பான திரைக்கதையின் மூலம் படமாக்கியிருக்கிறார்கள்.




தினமும் மின்சார ரயிலில் பயணம் செய்த நிகில் ரயில்களைக் கண்டு அச்சம் கொள்கிறான். பாதுகாப்பின்மையுணர்வால் தூக்கமின்றி தவிக்கிறான். பொது இடங்களில் பார்ப்பவரையெல்லாம் சந்தேகிக்கின்றான்.

இர்பான் குண்டுவெடிப்பினால் நேரடியாக பாதிக்கப்படாவிட்டாலும் தன்னை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்க எல்லோர் மனதிலும் உள்ள பயத்தைப் பயன்படுத்திக் கொள்கிறான். அங்காடிகளில் வெடிகுண்டு இருப்பதாக பொய்யாக போலிசுக்கு தகவல் சொல்லி அதில் மகிழ்ச்சியடைகிறான்.


ஏற்கனவே முஸ்லீம்களின் மீது வெறுப்பு கொண்ட சுரேஷ் டீக்கடையில் தான் பார்த்த நபர்களே குண்டு வெடிப்புக்கு காரணமென முடிவு செய்து அவர்களைத் தேடி அலைகிறான். சாலையில் கடக்கும் வயதான முஸ்லீமையும் சந்தேகத்துடன் விசாரிக்கிறான். தன் வேலையையும் கடனையும் மறந்துவிட்டு வெறிகொண்டு அலைகிறான்.






ரூபாலியின் காதலன் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழக்கிறான். இதுநாள் வரை அடுத்தவரின் துயரை அறியாமல் அதை உணர்ச்சி நாடகமாக்கி தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய ரூபாலிக்கு தான் செய்துவந்த செயல் உறைக்கின்றது. ஆனாலும் ரூபாலியின் தொலைக்காட்சி நிர்வாகிகள் அவளை வைத்தே நிகழ்ச்சி நடத்தி டி.ஆர்.பியைக் கூட்ட நினைக்கின்றனர்.






வெடிகுண்டு தாக்குதலினால் துக்காராமும் சுனிலும் இரவு ரோந்துப்பணியில் ஈடுபடுகின்றனர். சந்தேகத்திடமானவர்களை விசாரிக்கும்போது தாக்கப்படுகிறார்கள். போதை மருந்து உட்கொண்டவனைக் கைது செய்யும் போது உயரதிகாரிகளின் தலையீட்டால் பின்வாங்க நேருகிறது. சுனில் இதனால் ஆத்திரமும் தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்று கழிவிரக்கம் கொள்கிறான்.

பணியினூடே சுனிலுக்கு தன் அனுபவங்களைப் பகிர்கிறார். நிதர்சனத்தை உணர்த்துகிறார். இத்தனை வருட காவல்துறை சேவையில் தான் இதுவரை ஒருவரையும் சுட்டதில்லையென்றும் சொல்லிக்கொள்ளும்படி சாதனை எதுவும் செய்துவிடவில்லையென்றும் அதனால் தனக்கு வருத்தமும் இல்லையென்றும் தன் அனுபவத்தைப் பகிர்ந்து அறிவுரைகள் மூலம் சுனிலின் ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் மட்டுப்படுத்துகிறார்.


இந்த ஆறு கதாபாத்திரங்களின் கதைகளும் தனித்தனியாக சொல்லப்படுகிறது. அவர்களை இணைக்கும் களமாக வெடிகுண்டு தாக்குதல். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அத்தனை பேரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.

கூர்மையான வசனங்கள் படத்தின் பெரும்பலம். குறிப்பாக சற்று நகைச்சுவையுடன் கூடிய காவலரான துக்காராமின் வசனங்கள். பெரும்பாலான காட்சிகள் துக்காரமை மையமாகக் கொண்டே நகர்கின்றன. தேவையற்ற பாடல் காட்சிகளோ நகைச்சுவைக் காட்சிகளோ திணிக்கப்படாமல் இயல்பாகப் படமாக்கப்பட்டுள்ளது. ஆறு கதாபாத்திரங்களின் கதையை மாற்றி மாற்றிச் சொன்னாலும் திரைக்கதை தொய்வில்லாமல் அமைந்திருக்கின்றது. கதாபாத்திரங்கள் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

Mumbai Meri Jaan - கதைக்களத்துக்காகவும் நேர்த்தியான திரைக்கதைக்காகவும் கண்டிப்பாக பார்க்கலாம்.

June 23, 2009

Deck The Halls......100% பொழுது போக்கு



****IMDB RATING:4.4 /10****




கிறிஸ்மஸ் பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடுவதில் போட்டியும் பொறாமையும் கொண்ட இரு அண்டை வீட்டுகாரர்களின் பூசல்தான் 2006 நவம்பர்-ல் வெளிவந்த நகைச்வை கலந்த குடுமப திரைப்படம் தான் "Deck The Halls"

சரி வாங்க கதையின் ஒரு சின்ன அறிமுகம்......

Steve தன் குடும்பத்தினருடன் கிறிஸ்மஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட ஆயத்தமாகிறன். அப்போது தான் அவன் பக்கத்துவீட்டிற்கு குடி வருகிறார்கள் Buddy Hall & family.

Hall ஒரு கார் விற்பனையாளார். மிக குறைந்த வருமானம். அவன் மனைவியோ எப்போதும் அவனை பணத்திற்காக அவனை நச்சரிக்கிறாள். Hall தான் எதாவது சாகசம் செய்து புகழ் பெறவேண்டும் என நினைக்கிறான். அதன் முயற்ச்சியாக கிறிஸ்மஸ் பண்டிகையின் போது வீட்டை விளக்குகளால் அலங்கரித்து வானில் இருந்து பார்த்தாலும் தெரியும் படி செய்ய பல முயற்சிகளை மேற் கொள்கிறான்.

ஆனால் பல ஆண்டுகளாய் வாழும் அவர்கள் குடியிருப்பு பகுதியில் Steve குடும்பமே கிறிஸ்மஸ் பண்டிகையை விமர்சனையாக கொண்டாடி புகழ் பெற்று வருகின்றனர். இந்த தருணத்தில் புதிதாக குடி வந்த Buddy யின் முயற்சிகளை கெடுக்க Steve செய்யும் குளறுபடிகளும் அதை Buddy எப்படி முறியடிக்கிறான் என அடிக்கும் லுட்டிகள்...





என்னதான் இவர்கள் இருவரும் போட்டி பொறாமையுடன் இருந்தாலும்.... இவர்கள் குழந்தைகளும் மனைவிகளும் இதை விரும்புவதில்லை. அவர்க்ள் ஒரே குடும்ப்மாக இருக்க வேண்டும் என எவ்வளவோ முயற்ச்சிகின்றனர்.

ஆனால் Buddy , Steve இருவரும் அவர்களின் பேச்சை கேட்க மறுப்பதால் இரு மனைவிகளும் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி கிறிஸ்மஸ் பண்டிகையை விடுதியில் கொண்டாட போவதாய் சொல்லி விட்டு போய் விடுகின்றன்ர்.
இறுதியில் Buddy & Hall தான் நினைத்ததை நிறைவேற்றி எல்லோரும் ஒன்று சேர்ந்து கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட நேரத்தை கொள்ளை கொள்ளும்....அத்தனை பேரின் இயல்பான நகைச்சுவை நடிப்பும் பார்பவர்களுக்கு 100% பொழுது போக்கு.....

குறிப்பாக கிறிஸ்மஸ் பாடல்கள் குறும்பாடல்களாக வந்து போவது இனிமை.


My Rating:6.5/10

June 17, 2009

பராசக்தி (1952).... (ஒரு மைல்கல்)



*****IMBD RATING:9.2/10*****

பராசக்தியை பற்றி எழுதிக் கொண்டே போகலாம். அதனால்தான் எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியாமல் எனக்கு.... அது எனக்கு உண்மையிலேயே பிடித்த படங்களில் ஒன்று.

....

"சக்சஸ், இன்று முதல் நானும் ஒரு ஏமாற்றுக்காரன்" இந்த இடத்தில் ஆரம்பிக்கிறது நடிப்பு சக்ரவர்த்தியின் ஆட்சி. அதிலிருந்து படம் முழுதும் அவர் ஆளுமைதான். இது இவருக்கு முதல் படம் என்று சொன்னால் அதை யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு கச்சிதமாக நடித்திருந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது என்று வசனம் பேசி பார்க்காத தமிழ் நடிகர் இல்லை. ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் என்றும் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்றும் பேசுவதை மறக்க முடியாது.

"பராசக்தி"தமிழ் திரையுலக வரலாற்றில் இன்றும் எட்ட முடியாத ஒரு மைல்கல். கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை, வசனசத்தில் ஒரு காவியமாக எழுந்து நிற்கிறாள் இந்த பராசக்தி. இவள் இன்றும் நம்மை நோக்கி பல கேள்விகளை தொடுத்து நிற்கிறாள்.

சமுதாயத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை. வெறும் ஒரு குடும்பத்தின் கதையாக இருந்திருந்தால் அது இந்த அளவிற்கு வெற்றி பெற வாய்ப்பில்லை. அது பல தமிழர்களின் வாழ்வையும் குறித்த கதையாக இருக்கிறது.

"இட்லிக்கடையா?" என்று கேட்கும் கல்யாணியுடம் "தமிழ்நாட்டில் தாலி இழந்தவர்களுக்கு அது தானே தாசில் உத்யோகம்" என்று அவள் பக்கத்து வீட்டு பெண்மணி சொன்னது இன்றும் எவ்வளவு உண்மை.


படம் நடந்ததாக சொல்லப்படும் கால கட்டம் 1942. இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயமது. படத்தின் கதை இது தான்...

ஞான சேகரன், சந்திர சேகரன், குண சேகரன் மூவரும் சகோதர்கள். பிழைப்புக்காக ரங்கூன் (பர்மா) சென்றிருக்கிறார்கள். அவர்களின் ஒரே தங்கை கல்யாணியின் திருமணத்தைக்காண மூவரும் மதுரை வர முற்படுகிறார்கள். போர் நடக்கும் காரணத்தால் கப்பலில் பயணம் செய்ய ஒருவருக்கு மட்டும் இடம் என்றவுடன் குண சேகரனை அனுப்பி வைக்கிறார் அவர் அண்ணன்.போர் காரணமாக பல மாதங்கள் தாமதமாகி சென்னையை வந்தடைகிறது கப்பல். மதுரை ரயிலுக்கு டிக்கட் கிடைக்காததால் ஒரு நாள் தங்கிவிட்டு காலையில் புறப்படலாம் என்று ஹோட்டலில் தங்குகிறார் குணசேகரன். அங்கே ஒரு வஞ்சியால் வஞ்சிக்கப்பட்டு தன் கையிலிருந்த பணம் அனைத்தையும் இழக்கிறார்.
அவருக்கு அங்க யாரும் உதவ மறுப்பதால் பட்டினியில் வாடுகிறார். பிச்சையெடுக்கிறார், பின் அதுவும் உதவாததால் பைத்தியமாக நடித்து உண்கிறார். ஒரு வழியாக தன் சொந்த ஊருக்கு செல்கிறார். அங்கே விதியின் வசத்தால், கணவனை இழந்து, தந்தையையும் இழந்து கைக்குழந்தையுடன் குடிசை வீட்டில் தங்கி இட்லி வித்து வாழ்கிறாள் அவன் தங்கை கல்யாணி. மாமன் வருவான் நம் நிலைமை மாறும் என்று அவள் கைக்குழந்தைக்கு ஆறுதல் சொல்வதை போல் தனக்கே சொல்லி கொள்கிறாள்.


அவ்வாறு வாழும் கல்யாணியின் நம்பிக்கையில் மண் அள்ளி போட விருப்பமில்லாமல் அவள் முன்னும் பைத்தியமாக நடித்து அவளுக்கு காவலாளியாக இருக்கிறான் குணசேகரன்.கல்யாணியின் வறுமையை பயன்படுத்தி அவளை நாசமாக்க துடிக்கிறான் அந்த ஊர் மைனர் ஒருவன். அவன் குணசேகரனிடம் நன்றாக உதைவாங்கி கொள்கிறான். பிறகு அவளை வேலைக்கமர்த்தி காம லீலைக்கு அழைக்கிறான் நல்லவன் வேடம் போடும் நாட்டாமை ஒருவன். அவனிடமிருந்து தப்பித்து தன் அண்ணன் சந்திர சேகரன் வீட்டில் வைக்கும் விருந்திற்கே சென்று, தன் பிள்ளை ஆறு நாள் பட்டினி கிடப்பதாக சொல்லி, உணவுக்காக அவன் காலை பிடித்து கெஞ்சுகிறாள் கல்யாணி. அவனும் தன் தங்கையென்று தெரியாமல் எட்டி உதைக்கிறான்.பிறகு அருகே இருக்கும் பராசக்தியின் கோவிலுக்கு செல்கிறாள் கல்யாணி. அவளை மானபங்க படுத்த முயல்கிறான் அந்த கோவில் பூசாரி. அவனிடமிருந்து தப்பித்து செல்கிறாள் கல்யாணி. இந்த சுயநலமிக்க வஞ்சக உலகில் வாழ விருப்பமில்லாமல் தன் குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு, தற்கொலை செய்ய முயல்கிறாள் கல்யாணி. அங்கே இருக்கும் காவலரால் காப்பாற்றப்படுகிறாள்.பிறகு நீதிமன்றத்தில் அவள் இன்னாரென்று அவள் அண்ணன் சந்திர சேகரன் உணர்கிறான். தன் தங்கைக்காக கோவில் பூசாரியை தாக்கிவிட்டு நீதிமன்றத்தில் நிற்கிறான் குணசேகரன். அவன் காதலியால் கல்யாணியின் குழந்தை காப்பாற்றப்படுகிறது. ஒரு வழியாக கல்யாணியும், குணசேகரனும் சந்திரசேகரிடம் சேர்கிறார்கள். பிச்சைக்காரர்கள் மாநாட்டிற்கு பொருளுதவி கேட்டு வரும் ஞானசேகரனும் அவர்களுடன் சேர்கிறான். ஒரு வழியாக பிரிந்தவர்கள் சேர்கிறார்கள்.

சுபம்...

இனி படத்தில் என் மனதை தொட்ட காட்சிகள்...

"ஓ ரசிக்கும் சீமானே பாடலும்",
"புது பெண்ணின் மனதை தொட்டு போனவரே" பாடலும் படம் முடிந்து மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

போலிஸ் கான்ஸ்டபிலிடம் குணசேகரன் பேசும் வசனங்கள் அருமையிலும் அருமை......

படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பிற்கு பெரும்பாலும் நீதிமன்ற காட்சியையோ, அல்லது பராசக்தியின் பின்னாலிருந்து எழுந்து பூசாரியிடம் பேசும் வசனத்தையோ சொல்வார்கள்.

ஆனால் எனக்கு பிடித்தது, அவள் தங்கை முன்பு பைத்தியம் போல் முதன் முதலில் நடிக்கும் காட்சி. மன்னனை போல, கூத்தாடியை போல, மந்திரியை போல, ஏழை விவசாயி போல மோனோ ஆக்டிங் செய்திருப்பார்.

அந்த காட்சியை பார்த்ததும் அந்நியன் படத்தில் பிரகாஷ்ராஜ் பேசும் "எம்.ஜி.ஆரை பார்த்திருக்கேன், சிவாஜிய பார்த்திருக்கேன், ரஜினிய பார்த்திருக்கேன், கமலை பார்த்திருக்கேன். ஆனா இந்த மாதிரி ஒரு நடிகனை பார்த்ததில்லைனு" வசனத்தை எழுதியவருக்கு "பராசக்தி" DVD பார்சல் செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.

முதல் படத்திலே தான் ஒரு மகாநடிகன் என்று நிருபித்திருக்கிறார்.- படத்திற்கு பராசக்தி என்று பெயர் வைத்தது எவ்வளவு உண்மை.

என்னை நானே கேட்கும் கேள்விகள்:-

குணசேகரன் சென்னையை தொட்டதும் முதலில் கேட்கும் குரல் ஒரு பிச்சைக்காரனின் குரல். இந்த படம் வந்து ஐம்பத்தி ஐந்து வருடம் கழித்து வந்திருக்கும் சிவாஜி படத்திலும் நாயகன் சென்னையில் கேட்கும் முதல் குரல் ஒரு பிச்சைக்காரியின் குரல். ஐம்பத்தி ஐந்து வருடங்களாக பல ஆட்சி மாற்றமும் நம் சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லையா?-

பிச்சைக்காரர்களுக்கு ஓட்டுரிமை....அது இன்றும் நிறைவேறவில்லை என்றே நினைக்கிறேன்-

"மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கிறான்"

"உங்களை சொல்லலைங்க.......
"முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்ஷா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன்.

"சரி தான் போடா. மெட்ராஸுக்கு நீ மேயராகற காலத்துல மிருகத்தை எல்லாம் மனுஷனாக்கலாம்"....... பல மேயர்கள் வந்தாலும் இங்கே எந்த மாற்றமும் இல்லை.

இன்றும் தமிழர்கள் பலருக்கு பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஓரு ஊராகத்தான் இருக்கிறது.
என்று ஏற்படுமோ நல்ல மாற்றம்??????????.....
இன்று இந்த படம் முதல் முறையாக பார்ப்பவர்களுக்கு அதே தாக்கம் ஏற்படுமா என்பது எனக்கு சந்தேகம்தான். ஐம்பதுகளில் அது யதார்த்தமான படம் என்றே கருதப்பட்டிருக்கும். இப்போது நாடகத்தன்மை உள்ளது, melodrama என்று சொல்லலாம். melodrama-வின் ஒரு உச்சம் என்று நான் இந்த படத்தை கருதுகிறேன்.
My Rating:8.5/10

June 11, 2009

"காதலிக்க நேரமில்லை".(1964)


நாடகத்தனமாக சென்று கொண்டிருந்த சினிமாவை இயல்பான கலை வடிவமாக்கியவர் கதை மட்டும் இருந்தால் போதும் யாரை வேண்டுமானலும் நடித்து ஹிட் செய்லாம் என்பது இவரின் ஆணிதானமான கருத்து. அதற்கு எற்றவாறு குறுகிய காலத்திலேயே பல அருமையான படங்களை தந்தவர்.எனது மனம் கவர்ந்த இயக்குனர்களுள் இவரும் ஒருவர்.

இன்னும் நூறு ஆன்டுகள் கழித்து யாரும் தமிழ்சினிமாவின் டாப் டென் காமெடி படங்கள் லிஸ்ட் போட்டாலும் இந்த படம் அதில் இருக்கும்.இந்த இயக்குனர் சிகரம் ஸ்ரீதர் இயக்கி 1964யில் வெளிவந்த "காதலிக்க நேரமில்லை".


நான் இப்படத்தை பல முறை பார்த்திருக்கிறேன்.இப்பொது பார்த்தாலும் இருக்கையில் இருந்து எழவிடாது.

முத்து ராமன், ரவிச்சந்திரன்,பாலையா,நாகேஷ், காஞ்சனா,சச்சு நடித்தது. "காதலிக்க நேரமில்லை"விஸ்வனாதன் வேலை வேணும்" என்ற பாடல் மிக பிரபலம். டைரெக்டராக ஆசைப்படும் நாகேஷ் பாலையாவிடம் கதை சொல்லும் சீன் கிளாசிக்.(இப்பவும் பல தொலைக்காட்சி வரும் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நிச்சியம் வரும்)

அதே போல் சச்சுவை நடிகையாக மாற்றும் முயற்சிகளும். காதலுக்காக சொல்லும் பொய்கள், ஆள்மாறாட்டம், மோதலில் ஆரமித்து காதல்... என படத்தின் ஒவ்வோரு காட்சிகளும் 50 ஆண்டுகளுக்கு முன்பே அவர் கையாண்ட கதை களங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன.

படத்தை பற்றி நான் அதிகம் விமர்சனம் செய்ய விரும்பவில்லை.. சுறுக்கமாக நீங்கள் தமிழில் ஒரு அருமையான நகைச்சுவை படம் பார்க்க விரும்பினால்.. மாறவமல் இந்த படத்தை பாருங்கள்.

மீண்டும் இப்படம் தமிழில் Re-make செய்ய கொண்டிருக்கிறார்கள் என ஒரு செய்தி...என்னை பொறுத்த வரையில் "Original Magic-யை Re-create செய்ய முடியாது.

மேலும் அவர் இயக்கத்தில் வந்து இன்னும் காலத்தால் அழிய காவியங்களில் சில வற்றை....

கல்யாணப்பரிசு (1959), தேன் நிலவு (1961), நெஞ்சில் ஓர் ஆலயம் (1962), சுமை தாங்கி, வெண்ணிற ஆடை (1965).

இவரை பற்றி ஒரு சில தகவல்கள்:(வலைபூவில் இருந்து கிடைத்தது)..

ஜெயலலிதா வை அறிமுகப்படுத்தியவர், இந்தி திரைஉலகின் கனவுக்கன்னி ஹேமமாலினி-யை மேக்கப் டெஸ்டில் நிராகரித்தவர்,ஜெமினி கணேசன் முதல் விக்ரம் வரை மூன்று தலைமுறையையும் இயக்கியவர். பக்கவாத நோய்தாக்கிய நிலையிலும் தினமும் சினிமா பார்க்கும் பழக்கத்தை மட்டும் மாற்றிக்கொள்ளவில்லை இவர்.

இந்த ஒரு பதிவு போதது இவரை பற்றி எழுத....என்னும் அவரை பற்றி ஒரு சில வார்த்தைகள்..

My Rating: 9/10

June 9, 2009

Twitter ரில் நான்.....


ரொம்ப நாள் யோசிச்சி ஒரு வழியாக Twitter ரில் சேர்ந்திட்டேன்.. கணினியைப் பயன்படுத்தும் போது மட்டுமே தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும் என்பது மாறி, இப்ப தொழிட்நுட்பம் எங்கெங்கோ போயிகிட்டு இருக்கு.. அதுனால, கொஞ்சம் tweet செஞ்சிதான் பார்ப்போமேன்னு ஆரம்பிச்சிட்டேன்.
http://twitter.com/ashwinmakes நீங்களும் என்னைத் தொடரலாம். இந்த வலப்பக்கத்திலும் tweet உரையாடல்களைப் பார்க்கலாம். .. :)

June 6, 2009

UP-2009 (Summer Special)




****IMDB RATING:9/10**
****TOP 250#15****









என் வலைபூ நண்பர் விஷ்வா & சரவணா அவர்களுக்கு......
நான் இந்த வலைபூ ஆரமித்தால் இருந்து என் பதிவகளுக்கு மறவாமல் பின்னுட்டி கொண்டிருக்கும் ஒரு நண்பர்...இந்த பதிவு.

இதோடு சேர்த்து மொத்தம் பத்தே படங்கள். போன ஒன்பது படங்களில் மொத்தம் 22 ஆஸ்கர் விருதுகள். ஒரு படம் கூட ஆஸ்கர் வாங்காமல் வந்ததில்லை. So...வரும் வருடம் இன்னும் ஒன்னு / இரண்டு.... வாங்க, UP இப்பவே ரெடி.

அது எப்படி... Pixer மட்டும்.. ஒவ்வொரு வருடமும் சொல்லி சொல்லி அடிக்குது? ஒவ்வொரு Pixer-ரின் படங்களும் அதனோட எதிர்பார்ப்பு எல்லையை உயர்த்திக்கிட்ட இருக்கும் இத்தருணத்தில், மனதில் பல கேள்விகள் ஏல...அதில் ஒன்று தான்....இவர்களால் மட்டும் வெற்றியின் சிகரத்தை எப்படி எட்டிப்பிடிக்க முடிகிறது தளராமல்?.....

Diseny-யின் (தனியான) தயாரிப்போ, Dream Works தயாரிப்போ.. Characterகளை திரையில் மட்டும் ஓடிக்கொண்டிருக்கும் போது, Pixer Films-ல் இருந்து வெளியே வரும் பொம்மைகள்,மீண்கள்,எறும்புகள்,எலிகள்,கார்கள், என எந்த ஒரு பொருளாக இருக்கட்டும்.. அந்த பாத்திரங்களோடு நமக்கு ஒரு இனம் புரியாத ஒட்டுதல் வந்திருக்கும்.

போன ஒன்பது படங்களில் இவ்வறான என அன்னியப்பட்ட Characterகளை வைத்து வித்தை காட்டி நம்மை கட்டி போட்டவர்கள், முதன் முறையாக மனிதர்களை மையமாக வைத்து எடுக்கும் போது... விட்டுவிடுவார்களா....என்ன??

Pixar's Family...., They came back & just done it again.


Carl-லும், Ellie-யும் சிறுவர்களாக இருக்கும் போதே உலகம் சுற்றும் Exploxer ஆகனும்னும், தென் அமெரிக்காவில் இயற்க்கையை அறிந்து அங்கிருக்கும் ‘Pirates Falls’ என்ற அருவியை பார்க்கனும் அவர்களின் விருப்பம்.
கதையின் நாயகன் Carls..... ‘Pirate Falls’-ல் இருக்கும், "Swenni" என்கிற கற்பனையான ஒரு பறக்க முடியாத பறவையின் எலும்புக்கூட்டை Carls, விஞ்ஞானிகளுக்கு காட்ட, அவரை ஏமாற்றுகாரன் என் சொல்லி பட்டம் கட்டி அனுப்பி விடுகிறார்கள். எப்படியாவது ஒரு "Swen"-ஐ பிடித்து காட்டுறேனா இல்லையான்னு பாரு’-ன்னு Carl's சபதம் போட்டுவிட்டு சென்று விட...,

Carl-லும் Ellie-யும் இப்பொழுது வளர்ந்து, பலூன் விற்க ஆரம்பித்து, குழந்தையில்லாமலேயே வயதாகிவிட..., Ellie இறந்துவிட.. இப்பொழுது கார்ல் தனி ஆளாய் அந்த ப்யானோவின் பின்னணி இசை......, அற்புதம்.
Carl's Character நம்மோடு ஒன்றியது அப்போதுதான்!

ஒரு பிரச்சனையில் Carl-லுக்கு, முதியோர் இல்லத்துக்கு போக வேண்டிய கட்டாயம். Ellie-யோடு இருந்த, வாழ்ந்த வீட்டை விட்டு போக மனமில்லாத Carl's, சிறு வயது ‘Pirate Falls’ ஆசையை நிறைவேற்ற, பலூனை வீட்டு மேல் கட்டி, வீட்டையும் சேர்த்து எடுத்துக்கொண்டு தென் அமெரிக்கா கிளம்பிவிட, வேண்டாத ஒட்டுதலாக Charles என்ற சிறுவன் சேர்ந்து கொள்கிறான்.

‘Pirate Falls’ நெருங்கும் நேரத்தில்...,
Falls-ன் எதிர்புறத்தில் வீடு ‘லேண்ட்’ ஆகிவிட.... கலர்ஃபுல்லான ஒரு Swen பறவையும், அந்த பறவையை வேட்டையாட வரும் சில பேசும் நாய்களும் என சேர்ந்து கொள்கின்றன.
பாலுன் உள்ள Helium இறங்குவதற்குள் வீட்டை சரியான இடத்திற்கு கொண்டு போக வேண்டிய கட்டாயத்தில் Carl's, வேட்டையாட துடிக்கும் நாய்களிடமிருந்து, Swen-னைப் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் Charle's,

தன் ‘ஃஏமாற்றுகாரன்’ பெயரை மாற்ற வேண்டிய நிர்பந்தத்தில் Carl's....
Chaseing, Action, Adventure, செண்டிமெண்ட் (எப்பவும் போல்) என... தியேட்டரில்.. குட்டிகளுக்கும், அவ்வளவு ஏன்.... வளர்ந்தவர்களுக்கும் கொண்டாட்டம் தான்.

டெக்னிகல் தொழில் நுட்பங்களின் நேர்த்தியை, இனிமேல் வேறு யாராவது சொல்லித்தான் Pixer-ரை பற்றி தெரியத்தேவையில்லை என்றாலும்,....
இது Pixer-ரின் முதல் 3D படம். சும்மா... புகுந்து விளையாடி கலக்கி இருக்காங்க சொல்ல நினைச்ச.....
Diseny-யின் Monsters VS Aliens -ல் வரும் 3D Effects கூட இல்லாத 3D படம் என்பது தான் பெரிய சோகம்.

இந்த படத்தின் Depth பெரும்பாலும் Flat-யாகவே இருப்பது, மொத்த படத்திற்கும் ‘திருஷ்டி பொட்டு’ வேச்சமாதிறி..

இதை 3D-ன்னு சொல்லி விற்றது, Diseny-யின் வியாபார தந்திரம்....

2D-யில் பார்த்திருந்தாலும் ஒன்றும் கெட்டிருக்காது; Atleast Title-காவது இன்னும் Better-யாக இருந்திருக்கும் என்பது என்னோட கருந்து.

இந்த படத்தில் மனிதர்களை ‘டீல்’ செய்வதாலோ என்னவோ... மற்ற ஒம்பது படங்களை விட இதில் செண்டிமெண்ட் அதிகம் (Wall-E -ஐ விடவும்). அதுவே படத்தின் வேகத்தையும் குறைக்கிறது. Wall-E-யில் முயற்சித்தை போலவே இதிலும், தொடர்ச்சியாக சில நிமிடங்களுக்கு வசனங்களே இல்லாத, பியானோ பின்னணியிசை காட்சிகள்.

ஆனால் Carl's-லோ, Charles-லோ சிரித்தால் நாமும் சிரிப்பதும், அவர்கள் சோகமானால் ஒட்டு மொத்த தியேட்டரும் சோகமாவதும் Pixer படங்களில் மட்டுமே நடக்கும் ஒரு அதிசயம்.

ஒரு ஆச்சரியம்/அதிர்ச்சி....! கார்ட்டூன் படங்களில், ‘காட்சி வன்முறை’ என்பது ரொம்ப சகஜம் என்றாலும்... எனக்கு நினைவு தெரிந்த வரை... முதன்முதலில் ‘இரத்தம்’ காட்டும் Pixer படம் இதுவாகத்தான் இருக்கும். இதற்கு முன் இறப்பது மாதிரியான காட்சிகள் (Finding Nemo, The Incredibles) வந்திருந்தாலும் ‘இரத்தம்’ வந்திருக்காது. ஒருவேளை "Rated G" படங்களின் ‘அடுத்த கட்டம்’ போலிருக்கிறது.

Up... Pixer-ரின் (என்னை பொறுத்தவரையில்) ‘The Best' இல்லையென்றாலும், இது வரை வெளிவந்துள்ள கோடை விடுமுறை படங்களில், சந்தேகமில்லாமல் The Best..!

(ஒரு சிறு தகவல் Diseny-யின் எல்லா அனிமேசன் படங்களும் இனி 3D-யில் மட்டுமே வருமாம்).
My Rating: 8.9/10

June 2, 2009

Ratatouille... ஆசை யாருக்குதான் இல்லை.



**** IMDB RATING 8.2/10****TOP 250:#161****


Pixer தயாரிப்பில் 2007-யில் வெளிவந்த மற்றொரு படம் தான் Ratatouille நான் பார்த்து என்னை மறந்த ஒரு படம்.. ஒரு எலிக்கு சிறந்த சமையல்காரர் ஆகும் ஆசை வருகிறது. அதை எப்படிச் சாதிக்கிறது என்பது தான் கதை. இந்த படத்தை பற்றி உங்களுடன்....

உலகின் தலைசிறந்த உணவு வகைகள் செய்யும் நாடான பாரீஸ், அதில் தலைசிறந்த உணவகம் தான் Chef Auguste Gusteau உணவகம் என்றும்,,அவர் எழுதிய புத்தகம் "Anyone Can Cook "மிகவும் பிரபலம் என்று ஒரு தொலைக்காட்சியில் அவரை பற்றி .. என படம் தொடங்குகிறது...




REMY-இப்படத்தின் கதாநாயகன் அல்ல கதையின் நாயகன்.. இவன் மற்ற எலிகளில் இருந்து சற்று மாறுபட்டவன்..இவனிடன் வாசனை பிரிந்து பார்க்கும் சத்தி கொஞ்சம் அதிகமாக காணப்படுகிறது... இதனால் தன் வாழ்கையை உன்னும் உணவை பிரிந்து பார்த்து உன்னும் பழக்கம் கொள்கிறான்.இவனது திறமையை கண்டு அவன் அண்னன் மட்டும் ஆச்சிரியப்பட,வெறு யாரும் எற்று கொள்வதாய் தெரியவில்லை..

ஒரு கட்டத்தில் தன் திறமையை வைத்து தன் கூட்டத்தை ஒரு கட்டத்தில் உன்னும் உணவில் விசம் இருப்பாதாக கண்டு பிடித்து ஆபயாத்தில் இருந்து காப்பாற்ற.. உணவு பரிசோதிக்கும் பணியை கொடுக்கிறார் அவன் அப்பா "எலிகளின் தலைவர்"..... இந்த சம்பவம் நடந்த பிறகு,, தன் அப்பாவிடம் உணவை திருட தான் சாப்பிட வேண்டும்மென்றால் அதையை சமையில் இருந்து திருடலாமே என்று விவாதம் செய்ய,தன் அப்பா நாம் எலிகள்,மனிதர்களிடம் விலகி வாழ வேண்டும் என்று சொல்கிறார்,,


தன் அப்பாவுக்கும் தெரியாமல் சமையல் அறையில் செல்ல கழிக்க,,அங்கே உணவுகளின் வகைகள், அதனை தாயரிக்கும் முறை..எப்படி என்பதையும்
Chef Auguste Gusteau- வின் புத்தகங்களில் மற்றும் அவரது தொலைகாட்சி தொடரில் தெரிந்து கொள்ள தன் நேரங்களை கழிக்கிறான்.

ஒரு நாள் தன் அண்னனை அழைத்து சமையல் அறைக்கு செல்ல தன் குருவாக எற்று கொண்ட Gusteau பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதை சொல்லும் காட்சியை கண்டு அதிர உறக்கத்தில் இருந்த வீட்டின் உரிமையாளர் விழித்து கொள்ள....அவர்கள் இடத்தில் இருந்து தப்பிக்க முயலும் போது தன் குடும்பத்தில் இருந்து பிரிய நேர்கிறது..
தன்னை காப்பற்ற யாரேனும் வருவார்கள் என தன் கையில்யுள்ள புத்தகத்த வாசித்து கொண்டிருக்கிறது..நேரங்கள் நகர..யாரும் வரவில்லை..பசியும் தனிமையும் தன்னை கொள்ள உணவை தேடி புறப்படும் தருணத்தில் தான்... Gusteau-வின் உணவகத்தை கண்டு இத்தனை நாள் தான் பாரீஸ் நகரத்தில் வசிக்கிறோம் என்ற உண்மையை உணர்கிறது..


தன்க்குரிய ஆவலில் அந்த உணவகதிற்கு செல்கிறது..அந்த நேரத்தில் அங்க வேலை செய்யும் Alfredo Linguini (Garbage Boy) ஒரு உணவை சற்று கீழே சிந்த அதை மறைக்க தன் கைக்கு வந்த அத்தனை பொருகளையும் அள்ளி போட்டு குளமாக்கிறான். இதனை கண்ட Remy அவற்றை திருத்தி அமைக்கிறது....
தன் யாரேனும் பார்த்து விடுவார்கள் என்ற நோக்கில் தப்பிக்க முயலும் போது கண்டு Linguiniயிடம் மாற்றி கொள்கிறது. மீண்டும் தப்பிக்க முயலும் போதுதலைமை Chef Remyயை காண Linguini ஒரு bottle-யில் அடைக்க, தலைமைChef அதனை கொள்ளுமாறு சொல்கிறான்.

தன்னை காப்பாற்றிய ஒருவனை கொலை செய்ய மறுத்து Remy-யை விடுவிக்கிறான்.அதற்கு நன்றி கடன் செலுத்தும் வகையில், Linguini-க்கு உணவு தாயரிக்கும் பணியில் உதவுகிறது.

இதற்கிடையில் தன் உடன் வேலை செய்யும் Colette-யிடம் காதல் கொள்கிறான்.காதல் மலர்கிறது என காட்சிகள் நகர்கிறது.......


ஒரு கட்டத்தில் தன்னை குடும்பத்திரை காண நேர்கிறது,.... கண்டு மகிழ்ச்சியில் அவர்களுக்கு உதவும் முயற்ச்சியில் உணவகத்தில் உள்ள பொருகளை எடுத்து தர முயற்ச்சிகள் மேற்கொண்டபோது Linguini-தான் Gusteauவின் மகன் என்ற உண்மையை கானும் போது தலைமைchef (வில்லன்)பார்த்து விட....Remy அவனிடம் இருந்து தப்பிய உண்மையை Linguini-யிடம் சொல்ல.. Linguini தான் அப்பாவின் உணவகதிற்கு முதாலளி ஆயிகிறான்..
Anton Ego (ஒரு பழைய வில்லன் போல) உணவு விமர்சன்ம் மூலம் Gusteauவின் உணவகம் பற்றி எழுத தான் உணவத்திற்கு இருந்த five Star rating குறைக்க படுகிறது.



Gusteauவின் வளர்ச்சியை பத்திரிக்கையில் கண்ட Ego... Linguini Press meet நடக்கும் இடத்திற்கு வருகை தந்து.. தான் மீண்டும் Gusteauவின் உணவகம் பற்றி எழுத உணவத்திற்கு வருகை தர இருப்பதாக சொல்லிவிட்டு செல்கிறார்.

எல்லோரும் Egoவின் உணவை தாயரிக்க சொல்ல தடுமாறுகிறான். அப்போளுது Linguini உண்மையை சொல்ல எல்லோரும் அதனை எற்று கொள்ள மறுத்து சமையில் அறையில் இருந்து வெளியே செல்கிறார்கள்.

இதன் பின், Linguini எல்லாம் முடிந்து விட்டது என்று கவலை கொள்ள, Remy-யை தன் குடும்பத்தினர் வந்து அலைக்க... சற்று தடுமாறிய மீண்டும் உணவகத்திற்கு மீண்டும் உணவகத்திற்கு செல்ல வழியில் தலைமை Chef-யிடம் மாட்டிக் கொள்கிறது.

பின்னர் தான் குடும்பத்தின் உதவியுடன் விடுவிக்கப்பட்டு....பொத்த குடும்பமும் Ego மற்றும் மற்ற Customers காண உணவு வகைகளை தயாரிக்கும் பணியில் இடுபடுகிறார்கள். இதன் இடையில் Health Inspector ஒருவர் அங்கு வருகை தர.....

கோபித்து செல்லும் அவன் காதலி வழியில் Gusteauவின் "Anyone Can Cook " புத்தகம் கண்டு மனம் மாறி மீண்டும் திரும்ப....Remy-யுடன் சேர்ந்து Egoவிற்க்காண உணவை தயரிக்க உதவுகிறாள்.

உணவு Egoவிற்க்கு மிகவும் பிடித்து போக,.. Remy தயரித்த உணவை Linguini தயாரித்தாக எண்ணி பாரட்டுகிறார்.ஆனால் Linguini உண்மையை சொல்ல சற்று குழ்ப்பத்தில் செல்லும் Ego.. விமர்சனத்தில் proclaiming " the chef to be "the finest in Paris" while neglecting to reveal the chefs' true identity என எழுதிகிறார்.

ஆனால் சந்தோஷ்ச நிகழ்வுகள் நீண்ட நாள் நிடிப்பதில்லை,தலைமை Chef-வும், Health Inspector-யும் சேர்ந்து உணவகத்தில் சுகதார கேடு இருப்பதாக சொல்ல உணவகம் சீல் வைக்க படுகிறது.Ego-வும் தன் வேலை இழ்க்கிறார்.


முடிவாக இவ்முவரும் சேர்ந்து Colette, Linguini and Remy சேர்ந்து "La Ratatouille" என்ற பெயரில் உணவகம் ஒன்றை தொடங்க...படம் சுபம் என் முடிகிறது.

நான் எழுதிய வார்த்தைகளை விட பார்த்தல் அசத்தல் என்று நினைக்கிறேன். காட்சிகள் சற்றும் தடுமாறமல் செல்கிறது. நினைத்தைச் செய்வதற்கு அடிப்படை, பிறப்பு, சிறப்புத் தகுதிகள் என்று எதுவும் தேவை இல்லை என்பது தான் படத்தின் அடிப்படைக் கரு.
தப்ப நீனைக்காதிங்க Pixer மீது இருந்த ஒரு நன்மதிப்பு சில காட்சிகளில் சற்று குறைபோயிற்று.. எத்தனை நாள் தான் Sentiment Touch-யோட படத்தை.... இரண்டு மணி நேரம் கவலை மறந்து தாராளமாகப் பார்க்கலாம். Pixar animation studios தயாரிப்பு என்பதால், தனியாக animationஐப் பாராட்டத் தேவை இல்லை தானே?....
My Rating: 9/10

May 30, 2009

One Flew Over The Cuckoo's Nest (1975)







**** IMDB RATING 8.9/10****TOP 250: #8****

ஒரு திரைப்படம் எற்படுத்தி செல்லும் தாக்கம் நீண்ட நாட்களுக்கு அதன் நிலைகுலையாமல் மனதில் நிற்கும் ஆனால் அது உலக அளவில் சிறந்த படமாக கருதப்படும். அப்படிபட்ட ஒரு சில படங்களில் ஒன்றுதான் ......
"ONE FLEW OVER THE "CUCKOO'S NEST.


1975-ல் வெளியான இப்படம் ஆஸ்கரில் பல விருதுகளை (சிறந்த திரைக்கதை,சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை)என வாங்கிவிட்டது. இந்தபடத்தை பற்றி நான் தெரிந்துகொண்டது என் வலைதள நண்பர் திரு.சரவணன் தளத்தில் இருந்துதான். என்னை மீண்டும்..மீண்டும் பார்க்க தூண்டும் சில திரைபடங்களில் இதுவும் ஒன்று... ஒவ்வொரு முறையும் புது புது பரிமாற்றத்தில்.

மேலும் இப்படத்தை பற்றி பல கருத்துகளை பலர் எழுதிவிட்ட நிலையில் நான் இறுதியாக ஒரு சில வரிகள்....


ரம்மிமான இசையில் அழகான காலை பொழுதில் சாலையில் ஒரு கார் செல்கிறது... மன நல காபகத்தின் எல்லாம் உறங்கி எழுகின்றனர் என்று படம் துவங்குகிறது. (R.C McMurphy) கதையின் நாயகன் சிறைச்சாலையில் தன் அடங்காசம் தாங்க முடியாத அதிகரிகள்....மனநோய் இருப்பதாகச் சொல்லி மனநல காப்பகத்திற்குக் கொண்டுவரப்படுகிறான்.

அந்த மனநலக் காப்பகத்தில் மனநோயின் பல்வேறு கட்டத்தில் இருப்பவர்கள் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். நாயகன் பதினேழு மன நோயாளிகள் இருக்கும் வார்டில் அனுபதிக்கபடுகிறான். (Ratched) என்னும் நர்ஸ் அந்த வார்டின் தலைமை நிர்வாகியாக இருக்கிறார். நோயாளிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர்களின் மனநோய்க்கான காரணத்தை நினைவூட்டியே அவர்களின் பயத்தை அதிகரித்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.

வாழ்க்கையின் ஓவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டும் என்று கொள்கை கொண்ட McMurphy Ratched-ன் கண்டிப்புக்கு அடங்க மறுக்கிறான். Ratched அவர்களை சுயமாக சிந்திக்க விடாமல் மன நோயாளிகளாகவே வைத்திருப்பதாகச் சொல்கிறான் McMurphy. இதனால் இருவருக்கும் இடையில் கருந்து வேறுபாடு எற்ப்படுகிறது.

Ratched-யுடன் சண்டை போடுவதும், கருத்தில் மறுத்து பேசுவதும் என சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பதை கண்ட மற்ற நோயாளிகள் அவனிடம் நட்பு கொள்கின்றனர். ஆரம்பத்தில் McMurphy வாழ்க்கை மேல் உள்ள பயம் காரணமாக ஊமை செவிடனாக நடிக்கும் Cheif என்ற நோயாளியிடம் நெருங்கிப் பழகுகிறான்.பின்னர் இவர்களின் நட்பு வலுவடைகிறது

அத்தனை நாட்களாக Ratched-ன் கட்டுப்பாட்டில் நோயாளிகளின் பயத்தை குறைக்க காபகத்தின் கண்னில் மண்னை தூவி-விட்டு, அந்த வார்டில் உள்ள நண்பர்களை அழைத்து கொண்டு கப்பல் ஓட்ட,மீன் பிடிக்க கற்றுதருதல்.. என ஒரு நாள் பொழுதை கழிக்க வைக்கிறான்.


இதனால் Ratched-க்கும் McMurphy-க்கும் சண்டை வலுக்கிறது. பின்னர் ஒரு கட்டத்தில்,Ratched இருக்கும்வரை தன்னால் காப்பகத்தில் இருந்து வெளியேற முடியாது என்று உணரும் McMurphy தனது நண்பன் Cheif தப்பிக்க முடிவெடிக்கின்றனர்.

தப்புவதற்கு முந்தைய இரவு நோயாளிகளுடன் குடித்து உல்லாசமாகக் கழிக்கிறான். இரவு எல்லாம் முடிந்து புறப்படம் நேரத்தில்.... அவர்களில் ஒருவன் தன் அழைத்து வந்த பெண்னிடம்..காதல் கொள்ள...அவர்கள் இருவரையும்...போதையில் அனைவரும் உறங்க அடுத்த நாள் அத்தனை பேரும் Ratched-யிடம் சிக்கிவிடுகின்றனர்.

அப்போது நடந்த உரையாடல் எல்லை தாண்ட...Ratched-ன் தோழியின் மகன் தற்கொலை செய்து கொள்கிறான்.இதனால் ஆத்திரம் அடைந்த McMurphy Ratched-யை தாக்க முற்படுகிறான். அதற்குள் காவலாளிகளால் பிடிக்கப்பட்டு தனியாக அழைத்துச் செல்லப்படுகிறான்.

பின்பு அறுவை சிகிச்சை மூலம் மூளையின் ஒரு பகுதியை துண்டித்துவிடுகிறார்கள். கிட்டத்தட்ட நடைபிணமான நிலையில் அவனை மீண்டும் ஒரு விடியலில் கொண்டு வருகிறார்கள். அவனை அந்த நிலையில் காணத் தாங்காமல் Cheif McMurphy-யை கொன்றுவிட்டு தப்பிக்கிறான். வலிமையான பின்னணி இசையுடன் படம் முடிகிறது.


முடிவாக......திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நொடியும் சந்தோஷமாகக் கழிக்கும் McMurphy, காப்ப்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கண்டிப்பான நர்ஸ் Ratched, மனநோயின் பல்வேறு கட்டங்களில் இருக்கும் நோயாளிகள் என இப்படத்தின் கதாபாத்திரங்கள் என்றும் நினைவில் தங்குபவை.அத்தனை நடிகர்களுமே தங்கள் தேர்ந்த நடிப்பால் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு வலுவூட்டியிருக்கிறார்கள். நேர்க்கோட்டில் செல்லும் திரைக்கதையில் பல காட்சிகள் நம்மை கவரும். McMurphy மனநல காப்பகத்திற்கு வரும் ஆரம்பகட்ட காட்சிகள், நோயாளிகள் தங்கள் தயக்கம் நீங்கி அவனுடன் பழகும் காட்சிகள், அவன் தப்பிப்போகும் முன்னிரவு நோயாளிகள் உல்லாசமாக இருக்கும் காட்சி, இறுதியில் Cheif அவனைக் கொன்றுவிட்டு தப்பிக்கும் காட்சிகள் ஏற்படுத்திச் செல்லும் தாக்கம் பெரிது.


One Flew Over the Cuckoo's Nest கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.

My Rating: 10/10

May 27, 2009

WALL-E....

****IMDB RATING: 8.6/10*****


Best Animated Feature Film of the Year
Winner:
WALL·E (2008) - Andrew Stanton

இந்த படத்தை பற்றி நான் சொல்ல வேண்டிதில்லை....நான் இப்படம் வெளிவந்த சில நாட்களில் பார்த்துவிட்டேன், அன்று என் டையிரில் எழுதியதை இன்று என் முதல் பதிவாக பதிக்கிறேன்,அது மட்டும் அல்ல PIXER-films தயரிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் அருமை... அனைத்தும் பார்த்து விட்டேன்... பின் வரும் நாட்களில் எழுதுகிறேன்...

உங்கள் ஆதரவு எப்பவும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்...

Waste Allocation Load Lifter - Earth Class (WALL-E).


1975ல் வெளிவந்த திரைப்படம் ஒன்றின் பாடல் ஒலிக்க படம் துவங்குகிறது. நிர்மூலமாகிவிட்ட பூமித்தாயின் மயானம் போல, மனிதவாடையே இல்லாமல் வெறும் வானுயர்ந்த கட்டிடங்களுடன் படத்தின் முதல் காட்சி விரிகிறது. அவற்றின் மத்தியில் ஆங்காங்கே ஜொளிக்கின்றன BUY LARGE என்ற விளம்பர பலகைகள். நுகர்வு கலாச்சாரத்தின் நிச்சயமான ஆபத்தை முதல் காட்சியிலே கன்னத்தில் அறைந்து சொல்கிறது PIXER நிறுவனம். பின்னர் தான் தெரிகிறது, அவை கட்டிடம் அல்ல குப்பைக் குவியல் என்று. மனிதர்கள் விட்டுச்சென்ற குப்பைகளை அள்ளியெடுத்து சிறு சிறு சதுரகட்டிகளாக்கி, அவற்றை கட்டிடம் போல அடுக்கி வைப்பது WALL-E என்ற தனியொரு ரோபா. இன்றிலிருந்து 700 வருடங்கள் கழித்து மனிதர்கள் நுகர்வு கலாச்சரத்திற்கும், அதீத தொழில்நுட்பத்திற்கும் அடிமைப்பட்டு இயற்கை வளங்களையும், மனிதத்தன்மையும் இழந்து எந்திரமயமாகியிருக்க,
WALL-E அவர்களை மீண்டும் மனிதர்களாய் மாற்றும் அழகான கவிதை.

தினந்தோறும், குப்பைகளை அள்ளி சீர் செய்யும் போது தென்படும் வித்தியாசமான பொருட்களை தனது தனி அறையில் சேகரிக்கும் பழக்கம் கொண்டது WALL-E. அழிந்து போன உலகத்தின் கடைசி மூச்சாய் முளைவிட்ட சிறு செடி ஒன்றை அவ்வாறு கண்டெடுக்கும் WALL-E, அதை ஷீ ஒன்றில் வைத்து பாதுக்காப்பது அழகு.

அழகிய iPod வடிவத்தில் அதிரடியாய் பூமியை சோதனையிட வரும் ஈவா (நாயகி) எனும் மற்றொரு ரோபோவிடம் காதல் கொள்ளும் WALL-E அதற்கு செடியை பரிசாய் அளிக்கிறது. அச்செடியை ஆசையாய் பெற்றுக் கொண்டதும் ஈவா செயலிழந்து விடுகிறது. ஈவாவை பூமியில் இறக்கிவிட்ட எந்திரம் மீண்டும் அதை எடுத்துச் செல்லும் பொது அதைத் தொடர்ந்து WALL-E செல்லும் போது துவங்குகிறது கதை.


BUY LARGE என்ற நிறுவனம், வாண்வெளியில் பிரம்மாண்டமான விமானம் ஒன்றில் மனிதர்களை குடியமர்த்துகிறது. அங்கே அதீத நவீன வசதிகளை மனிதர்களுக்கு வழங்குகிறார்கள். நவீனம் என்றால் அங்குள்ள மனிதர்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அந்தரத்தில் மிதக்கும் சொகுசு இருக்கை ஒன்றில் அமர்ந்தபடியே அவர்கள் வேண்டும் பொருட்களை அவர்கள் அருகில் எடுத்துவர ரோபோ பணியாட்கள். முகத்திற்கு நேரே உள்ள Virtual Monitorல் வேண்டியவர்களின் முகத்தை பார்த்தப்டியே பேசிக்கொள்ளலாம். உண்ணும் உணவு, உடையின் நிறம் அனைத்தையும் கூட தேர்வு தீர்மானிப்பது BUY LARGE நிறுவனம் தான். விளைவு மனிதர்கள் உடல் பருமனடைந்து, நடக்கக் கூடத்தெரியாதவர்களாய், ஸ்வ்விம் பூலில் நீந்தத் தெரியாதவர்களாய், கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே தெரியும் நட்சத்திரங்களையும், அண்ட வெளியையும் ரசிக்கத்தெரியாதவர்களாய் கிட்டத்தட்ட ஜடமாய் ஆகியுள்ளார்கள்.
700 வருட விண்வெளி சொகுசு வாழ்க்கையில் மனிதர்கள் மெல்ல மெல்ல பொம்மைகளைப் போல மாறிவருவதை காலவரிசைப்படி தொங்கவிடப்பட்டுள்ள அவ்விமான கேப்டன்களின் புகைப்படங்களில் தெரிகிறது. பழுதடைந்த ஈவாவை சரி செய்யும் போது அதனுள் உயிருள்ள செடியைக் கண்டெடுக்கிறார்கள். முதன்முதலாக செடியைப்பார்க்கும் விமான கேப்டன் தனது கம்யூட்டரிடம் விளக்கம் கேட்டு செடிகளைப் பற்றிய புத்தகத்தைப் பெறுகிறான். புத்தகத்தை எப்படி பிரித்து படிக்க வேண்டும் என்பதைக் கூட அக்கம்யூட்டர் தான் சொல்லித்தருகிறது. செடியைப் பற்றி அறியும் போது, நடனம் என்னும் புது வார்த்தையையும் கேள்விப்படுகிறான். நடனம் என்றால் என்ன என்பதைக்கூட கம்ப்யூட்டர் தான் வீடியோவுடன் விளக்குகிறது. தனது முன்னோர்களின் நடனக் காட்சியைப் பார்த்து வியக்கும் கேப்டன் தன்னால் நடக்கக் கூட முடியாது என்பதை நினைத்து வருந்துகிறான். தொடர்ந்து முன்னோர்களைப் பற்றி அறியும் போது, பூமியைக் குறித்தும், தண்ணீர், கடல், தாவரம் இன்ன பிறவற்றை பற்றியும் தெரிந்து கொள்கிறான். இதுவரை, மனித குலம் இழந்த இயற்கையோடு இயைந்த வாழ்வை உணர்ந்து, மீண்டும் தாய்பூமிக்கு திரும்ப முயற்சிக்கிறான். தாயகம் திரும்ப விரும்பும் கேப்டனை அதுவரை அடிமாய் சேவகம் செய்த கம்ப்யூட்டர் அவர்களை பூமிக்கு திரும்பவிடாமல் தன் சுயரூபத்தைக் காட்டுகிறது. பசுமை பூத்த அச்செடியை சாவியாய் கொண்டு அனைவரும் பூமி திரும்ப WALL-Eயும், ஈவாவும் உதவுகிறார்கள்.

பூமி திரும்பும் அவர்கள் மீண்டும் விவசாயம் செய்தல், மீன்பிடித்தல், வீடு கட்டுதல் என உடல் உழைப்புடன் வாழ்வதைப் பார்க்கும் போது, நாம் அனைவரும் நகரமயமாக்கலின் அபாயத்திலிருந்து விழித்துக் கொள்ள வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பிளாஸ்டிக், ரசாயனக்கழிவுகள், தொழில்நுட்ப உபகரணங்களின் கழிவுகள் சேர்ந்து பூமியை கொஞ்சம் கொஞ்சமாக குப்பைக் கூடமாக்கி வருகிறது. அதன் அபாயத்தை வெகு அழுத்தமாக, அழகாக கற்பனை கலந்து சொல்லியிருக்கிறது WALL-E. குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்குமான இப்படத்தை செம்மையாக எடுத்து சொல்ல வேண்டியதை சொல்லியிருக்கிறது PIXER ......இனி செய்ய வேண்டியது நாமதானே........


My Rating: 10/10