September 9, 2011

House of Sand and Fog (2003)- 'சொந்த வீடு' என்பதே கனவாகிப்போன குடும்பங்களின் கதை



இப்போழுதுதான் நேரம் கிடைத்தது.. உங்களை சந்திக்க....

ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் . நமது வாழ்க்கையும கூட ஒரு விசித்திர நாவல் என்றே தோன்றுகிறது.

House of Sand and Fog அதன் மற்றுமொரு அத்தியாயம்.

குடிபழக்கத்தால், மனம் உடைந்து இருந்து மீண்டு வரும் Kathy . வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் விரக்தியின் உச்சத்தில் இருப்பவள். அவளுக்காக தந்தை விட்டுச் சென்ற வீடு, வரி செலுத்தாத காரணத்திற்காக ஏலம் விடப்படுகிறது.

ஓய்வு பெற்ற ஈரானிய இரானுவ அதிகாரியான Behrani அந்த வீட்டை வாங்குகிறார். ஏலத்தில் குறைந்த விலைக்கு வாங்கிய வீட்டை மேம்படுத்தி நல்ல விலைக்கு விற்க நினைக்கிறார். கடற்கரையோரம் இருக்கும் அந்த வீடு அவருக்கு ஈரானில் சிறு வயதில் வாழ்ந்த வீட்டை நினைவுபடுத்துகிறது. ஆதலால்  மனைவி &மகனுடன் அந்த வீட்டுக்கு குடிவருகிறார்.

வீட்டை இழந்ததை வெகு தாமதமாக உணரும்  Kathy  வீட்டை விட்டுச் செல்ல மறுக்கிறாள். அது தன் தந்தையின் வீடென்றும் அதை விட்டால் தனக்கு வேறெதுவும் இல்லையென்றும் அரசாங்கத்தின் குளறுபடியால் ஏலம் விடப்பட்டதாகவும் கூறி காலி செய்ய மறுக்கிறாள்.

தன் சேமிப்பு முழுவதையும் வீடு வாங்க செலவிட்ட Behrani  அவளுடன் சண்டையிடுகிறார். தான் வீட்டை வாங்கியதற்கு ஆதாரங்களைக் காட்டி அவளை வெளியேறச் சொல்கிறார்.

Lester  போலீஸ்காரர் Kathyயின் மேல் ஈர்க்கப்பட்டு அவளுக்கு உதவுகிறார். Behrani யை வீட்டை காலி செய்யுமாறு மிரட்டுகிறார். குடும்பத்தினரை  அறையில் அடைத்து வைத்து மிரட்டுகிறார்.


இறுதியில் Behrani அரசாங்கத்திடம் வீட்டை திருப்பிக்கொடுத்து தான் கட்டிய பணத்தை வாங்கி Kathyயிடம் கொடுத்துவிடுவதாயும் தன் பெயரில் வீட்டை எழுதிக் கொடுக்குமாறும் ஒரு தீர்வைச் சொல்கிறார்.

அரசு அலுவலகத்துக்கு செல்கையில்  எதிர்பாராத சமயத்தில் Behrani மகன் Lester துப்பாக்கியைப் பறித்து தங்களை விட்டுவிடுமாறு மிரட்டுகிறான். இதை கண்ட அங்கு வரும் காவலாளிகள் Behrani   மகனை சுட்டுவிடுகின்றனர். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறக்கிறான்.

Lester  போலீஸிடம் அவருடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் குற்றத்தை ஒத்துக்கொள்கிறான். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான்.

மகனை இழந்த அதிர்ச்சியில் வீடு திரும்பவரும் Behrani தன் மனைவிக்கு தேநீரில் விஷம் கலந்துகொடுத்துவிட்டு, இரானுவ உடை அணிந்து முகத்தை பாலித்தீன் பையால் மூடி மூச்சு முட்டி தற்கொலை செய்துகொள்கிறார்.


வீட்டுக்கு வரும் Kathy அவர்கள் இறந்துகிடப்பதைப் பார்த்து உடைந்து அழுகிறாள்.

இறுதியில் வரும் போலீஸ் அது அவளுடைய வீடா எனக் கேட்க அவள் "இது என்னுடைய வீடு இல்லை" எனக் கூறி சென்றுவிடுகிறாள். 

யாருக்குமற்றதாய் அந்த வீடு அனைத்தையும் பார்த்தபடி இருக்கிறது.

தான் செய்வது தவறென உணர்ந்தாலும் குற்றவுணர்ச்சி தடுத்தாலும்  இழந்த தன் வாழ்வை மீட்கப் போராடும் Kathy , புதிய நாட்டில் புதிய வாழ்க்கையை எதிர்நோக்கும் Behrani, ......என இரு கதாபாத்திரங்களுக்கிடையேயான போராட்டம் மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டு அந்த கதாபாத்திரங்களின் மேல் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. கதாபாத்திரங்களின் மேலான பச்சாதாபம் படம் முடிகையில் எந்த உருவமும் கொள்ளலாம். அதுவே இந்த படத்தின் சிறப்பும் கூட.இறுக்கமான காட்சிகள் காட்சிகளுடன் ஒத்துப்போகும் பின்னணி இசை நம்மை கதையுடன்  ஒன்ற வைக்கின்றன. .


 பி.கு: மகிழ்வான தருணங்களில் பார்ப்பதற்கு அல்ல....

November 24, 2010

The Disappearance of Alice Creed (2009) ஒரு கடத்தல் மிக நேர்த்தியாய்....

எல்லோரும் நலம் உடன் இருப்பீர்கள்...நீண்ட நாட்களுக்கு பிறகு சி(ச)ந்திக்க வருகிறேன் ஒரு சிறந்த படத்துடன் என்று நம்புகிறேன்.

இந்த படத்தை பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாள் நீனைவில் இருந்தாலும் சமீபத்தில் என்னை ( நிறைய மக்களை பாதித்த ஒரு சம்பவம்).சமீபத்தில் கோவையில் பணத்திற்காக இரண்டு பள்ளி குழந்தகளை கடத்தி கொலை மற்றும் ஆந்திராவில் ஒரு சிறுமியை கடத்தி அடுப்பில் உயிரோடு எறித்ததும் நடந்த இந்த கொடூர கடத்தல் கொலைகளை பத்திரிக்கையில் எல்லோரும் படித்த செய்திதான்.. இந்த சின்ன குழந்தைகளின் போட்டோவை பார்த்து விட்டு நாம் எல்லோரும் பரிதாபபட்டதும் நம் நினைவுக்கு வரலாம்...

இந்த சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்தன... இப்படியும் மக்கள் இருக்கதான் செய்கிறார்கள் இந்த சமுதயத்தில்....எல்லாம் தெரிந்தும் வாழ்க்கையை பணயம் வைத்து கடத்தல் நாடகம் தினமும் அரங்கேறியபடி உள்ளது எல்லாம் பணத்துக்காக.....

THE DISAPPERANCE OF ALICE CREED-கதையும் இது போல ஒரு கதைதான். சரி-படத்தின் கதைக்கு வருவோம்......

கடத்தலில் இரண்டு வகை இருக்கின்றது.. ஒன்று பணத்தை வாங்கி கொண்டு கடைசியில் உயிரோடு விட்டு விடுவது.. இரண்டாவது பணத்தை வாங்கி கொண்டு எப்படியும் நம்மை காட்டிகொடுத்து விடுவார்கள் என்ற பயத்தில் கடத்தியவரை கொன்று விடுவது...

விக் & டேனி இரண்டு பேரும்... ஒரு வேன் திருடுகிறார்கள்...நம்பர்பிளேட் மாற்றபடுகின்றது...கடைக்கு சென்று சாமான்கள் வாங்குகிறார்கள்..உள்ளே என்ன கத்தினாலும் வெளியே கேட்காதது போல் ஒரு ரூம் அதில் ஒரு கட்டிலையும், அதில் ஒருவரை கட்டி போடுவதற்கு ஏற்றது போல் எல்லாம் ரெடி செய்து வைக்கிறார்கள்...

எல்லா முடிந்ததும் ஆலிஸ் என்ற பண்ணகாரர் வீட்டு பெண்ணை கடத்தி வருகின்றார்கள்..

கடத்தி வந்த பின் ஆலிஸ் சத்தம் போட்டாலும் வெளியே கேட்காத அறையில் அடைக்கபடுகிறாள்... அவள் எப்படியும் தப்பிவிடக்ககூடாது என்பதால் கை, கால்களை... கட்டிவிட்ட போதிலும் தங்களிடம் பேசி ஏதாவது மனதை மாற்றிவிடுவாள் என்பதால், வாயில் பால் கேங் வைத்து கட்டி விடுகிறார்கள்...

ஆலிஸ்யிடம் தெளிவாக சொல்லபடுகின்றது.. உன்னை துன்புறுத்துவது எங்கள் நோக்கம் அல்ல.. எங்களுக்கு வேண்டியது பணம் என்று.....

பின்.... கத்திரிக்கோல் எடுத்து ஆலிஸ்-யின் உடைகளை களைந்து முழு நிர்வாணமாக்குகிறார்கள்.. அவளின் பிறப்பு உறுப்பு மேல் ஒரு நியூஸ் பேப்பர் வைத்து மறைத்து விட்டு... அவளை அரைநிர்வாணமாக புகைபடம் எடுத்து அதனை அந்த பெண்ணின் அப்பாவுக்கு அனுப்பிகின்றனர்...

மீண்டும் ஆலிஸ்க்கு வேறு உடை அணிவிக்கின்றனர்.. அந்த உடை கூட எளிதில் அகற்றலாம் அது போல ஒரு உடை... அந்த பெண்ணின் கண்ணை பார்த்தால் இரக்கம் வரும் என்பதால் கறுப்பு துணி தலையில் போட்டு மூடுகின்றார்கள்..

வீடியோவில் துப்பாக்கி முனையில் அலிசை மிரட்டி அவள் அப்பாவிடம் கதறி பணம் கேட்க வைக்கின்றார்கள்....

இதில் ஒரு கட்டத்தில் விக்கி வெளியே செல்ல .. போகும் போது டேனியை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு போக...

டேனி தனியே இருக்கும் போது தனக்கு மலம் வருகின்றது என்று ஆலிஸ் கையால் செய்கை செய்கின்றாள்..... ஒரு பக்கெட் மற்றும் ஒரு பேப்பர் நாப்கின் பேப்ப்ர் ரோல், எடுத்து போய் அவள் பக்கத்தில் வைத்து விட்டு துப்பாக்கி முனையில் அவள் கால்கள் மற்றும் ஒரு கை விலங்கை அவுத்து விட்டு வாயில் இருக்கும் பாலை எடுத்து விடுகின்றான்...

அவள் உடைகளை களைந்து அந்த பக்கெட்டில் உட்கார. துப்பாக்கி முனையில் அவளை பார்த்துக்கொண்டே இருக்க... ஆலிஸ்…. டேனியிடம்... இப்படியே பார்த்துக்கொண்டு இருந்தால் எனக்கு எதுவும் வராது என்று சொல்லி அவனை திரும்பி நிற்க்க சொல்ல, டேனியும் பாவம் பார்த்து திரும்பி நிற்க்க...

ஆலிஸ் அப்படியே திரும்பி அந்த பாக்கெட்டை சத்தம் காட்டாமல் எடுத்து அவன் தலையில் ஒரு போடு போட்டு விட்டு அவனிடம் இருக்கும் துப்பாக்கியை பறித்து வைத்துக்கொள்கின்றாள்... இப்போது டேனி அலிஸ்ன் துப்பாக்கி முனையில்... அவள் தப்பி இருக்கலாம் அல்லவா??? இல்லை தப்பிக்க முடியலை ஏன்....

நிறைய ஷாட்ஸ், நிறைய டூவிஸ்ட்.. படம் பார்க்கும் போது சஸ்பென்ஸ் போய் விடும் என்பதால் நான் விரிவாய் சொல்லவில்லை...

இந்த படத்தின் சிறப்பு என்ன தெரியுமா???

படம் முழுக்க.... மூன்றே பேர்தான்.. அப்புறம் படத்தில் பயணிக்கும் கேமரா...

அதாவது முதலில் ஒரு டிப்பார்ட்மென்ட் ஸ்டோர் காண்பிக்கும் போது...அப்பா போனில் பேசுவது ... ஏதிர் வீட்டு அப்பார்ட்மென்ட்டில் கதவை திறந்து ஆள் போவது.. பார்க்கிங் ஏரியாவில் யாராவது நடந்து போய் கார் எடுப்பது...என்று லோ ஆங்கிளில் கேமரா பயணிக்கும் போது ஒரு ஆள் இருப்பது போல வரும்.... ஆனால் ஒரு ஆள் கூட பிரேமில் வராதது போல் எடுத்து இருக்கின்றார்கள்... அதை தவிர்த்து பார்த்தால் படம் முடியும் வரை... அந்த மூன்று பேர்தான்.

அது போலான திரைக்கதை மற்றும் பிரேமிங்...அபாரம்...

முக்கியமா கடத்துவதற்கு முன் டென்ஷனா விரல்கள் நடுக்குவது...ரூம் ரெடி செய்யும் போது வைத்து இருக்கும் ஷாட்டுகள்....

ஆலிஸ் உடம்புல கேமரா டிராவல் ஆகும் போது... அவள் தொப்புள் சுற்றி இருக்கும் எல்லா ரோமங்களும் சிலிர்த்து இருப்பது போன்ற காட்சியும்...

ஆலிஸ்ன்... மூத்திரத்தை டேனி பிடித்துக்கொண்டு போய் அதை டாய்லட்டில் கொட்டும் போதும் அதன் மஞ்சள் தன்மையும்...டாய்லட்டி தோட்டா பாகத்தை போட்டு விட்டு பிளஷ் செய்ய, அது போகாமல் அடம் பிடிக்க, என பல காட்சிகளால் நாமும் அந்த கதாபாத்திரங்களுடன் பயணிப்பதை தவிர்க்க முடியவில்லை....

கிளைமாஸ் என்னவென்று சொல்ல....இயக்குனரே சபாஷ்...

இதுல ஒரு கிஸ்சிங் சீன் அந்த சீனை நீங்க வாழ்க்கையில மறக்கவே முடியாது...மற்றும் டேனிக்கும் அலிஸ்க்கும் ஒரு டுவிஸ்ட் மேட்டர் சீன் வச்சி இருக்காங்க..அது போலான காட்சி அது...

ஆலிஸ்யாக நடித்து இருக்கும் Gemma Arterton... நடிப்பு செம நடிப்பு.... படம் முலுக்க கட்டி போட்டு இருப்பது போலான காட்சிதான் பின்னி எடுத்து இருக்குது பொண்ணு....

குறிப்பு: படம் டோரன்டோ,லண்டன் டிரேபிகா என மூன்று உலகபடவிழாவில் திரையிடபட்டு ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்றது.

பார்த்தே தீர வேண்டியபடங்களின் ஒன்று….. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் கருத்துகள் போட மாறகதீர்கள்………………………………

August 27, 2010

DOWNFALL - 2004 ( ஒரு சர்வாதிகாரியின் அந்திமகாலம்)



இந்த படம் பார்த்து முடித்து போது மனதில் நான் வடிவமைத்திருந்த ஹிட்லர் அந்த மனிதனின் வேறுமுகம் எனக்கு தெரிந்தது உலகத்தையே தன் வசபடுத்த நினைத்தவனின் வாழ்க்கையை இந்த படத்தில் பார்த்த போது இந்த மாமனிதன் மீது மிகப்பெரிய மதிப்பு வந்தது....இப்படியும் ஒரு மனிதனின் முன்னேற்றம் இருக்குமா? என்று என்னை வியக்கவைத்தன...

ஹிட்லர்- ஜெர்மன் மட்டுமே உலகை ஆள வேண்டும் என்று இரண்டாம் உலக போரை ஆரம்பித்து வைத்து விட்டு 5 கோடி பேரின் இறப்புக்கு கரணமாய் இருந்து, போதமைக்கு 50லட்சம் யூதர்கள் இறக்க காரணமாக இருந்த கொடுர மிருகம் என்பதாய் நாம் எல்லோரும் மனதில் வைத்து இருந்த பிம்பம்.

இரண்டாம் உலக போரை மையபடுத்தி நிறைய படங்கள் வந்து விட்டன...அதில் ஹிட்லரின் கொடுரத்தை சொல்லி அழுத படங்கள் ஏராளம்

முதல் உலக போரில் ஜெர்மனில் இராணுவ சிப்பாய் இரண்டாம் உலக போரின் போது ஜெர்மன் நாட்டை வழி நடத்துபவர் என்றால் அந்த வளர்ச்சியை யோசித்து பாருங்கள்...

ஒரு நாட்டையே ஆண்டவன் எல்லாவ்ற்றிலும் வெற்றி...அவனுக்காக எதையும் செய்ய கண் எதிரில் தயராக ஒரு கூட்டம்... இப்படி இருந்தால் ஒருவனுக்கு என்ன தோன்றி இருக்கும்??? உலகத்தின் பிதா நான் தான் என்று வாழ்ந்த ஒரு சர்வாதிகாரியின் கடைசி நிமிடங்கள்தான் இந்த படம்.... ஆனால் நன்றாக வாழ்ந்தவன் வீழ்வதை ஏனோ மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது...காரணம் அது போல இந்த படத்தை எடுத்து இருக்கின்றார்கள்...

இரண்டாம் உலக போரின் போது ஜெர்மன் படைகள் ரஷ்ய படைகளிடம் தோல்வியை சந்தித்து பெர்லினை நோக்கி முன்னேறி வந்து கொண்டு இருக்க பதுங்கு அறையில் பதுங்கி இருத்த ஹிட்லர்.....அவர் சொல்வதை குறிப்பெடுத்து அதனை டைப்செய்து கொடுக்க சில பெண்களுக்கு நேர்முக தேர்வு நடப்பதில் துவங்கிறது படம்.

ஜெர்மன் தோல்வி செய்திகள் கேட்பதில் இருந்து... நாலாவது படையணி என்ன செய்து கொண்டு இருக்கின்றது ?என்று கேட்டு கத்துவதில் இருந்து...தீவிரவாதி, 40000 குழந்தைகள் கொன்றதில் பங்கு பெற்றவன், எழுத்தாளர், சர்வாதிகாரி, ஓவியன், அரசியல்வாதி, மது பழக்கத்தை விட்டவன்... நான்வெஜ் சாப்பிடாதவன்....என மாற்றும் இல்லாமல் தோல்வியால் துவண்டு திருமணம் செய்து கொண்டு,புதுமனைவியுடன் தற்கொலை செய்து இறப்பது வரை.... ஹிட்லரின் கடைசி காலத்தை நுட்பமாய் பதிவு செய்து இருக்கின்றது.

சமகாலத்தில் வாழ்ந்த ஒரு சர்வாதிகாரியின் அந்திமகாலம் எப்படி இருக்கும் என்பதை நம் கண் முன் நிறுத்தி இருக்கின்றார்கள்...

படத்தில் நான் ரசித்த காட்சிகள் சில... ஹிட்லராக Bruno Ganz வாழ்ந்து இருக்கின்றார்

நேர்முக தேர்வில் கலந்து கொண்டு ஹிட்லர் முதல் வருகையை ரொம்ப சிம்பிளாக பதிவு செய்தாலும் அந்த பெண்கள் கண்களில் காட்டும் அந்த ஆர்வம் உற்சாகம் வாய்ப்பே இல்லை...

பதுங்கு குழியில் இருக்கும் போது கூட போரிட்ட சிறுவர்களுக்கு மேடல் கொடுத்து உற்சாகபடுத்தியவன்...அந்த மெடல் கொடுக்கும் போது அந்த சிறுவர்களின் சந்தோஷத்தை பார்க்க வேண்டுமே???...

அப்படி ஒரு பெரிய சர்வாதிகாரியை, ஜெர்மனியில் வாழ்ந்த பல லட்சகணக்கான நேசிப்பை அந்த கண்களில் உள்ள ஆச்சர்யத்தின் மூலம் காட்சி படுத்தி இருப்பார்கள்...

இறக்கும் முன் நடக்கும் திருமணத்துக்கு, பயத்தில் முகத்தில் பவுடர் அதிகமாக அடித்துகொண்டு வரும் ஒரு காட்சி வாழ்கை முடிய போகின்றது என்று சலித்துகொள்ள அந்த ஒரு காட்சி போதும்...

பயம் வந்த பிறகு அதை காட்டிக்கொள்ளாமல் நடப்பது மிக அற்புதம்... எப்ப வேண்டுமானாலும் பிடிபடலாம் என்ற நிலையிலும் ஒருத்தனுக்கு தேச துரோகம் பட்டம் கொடுத்து அவனை சாகடிப்பதும் ஜெர்மனி & ஹிட்லர் வாழ்த்தி விட்டு சாவதும் அருமையான காட்சி.....

நிறைய இளைய படைவீரர்கள் இறந்து போய் விட்டார்கள்... பலருக்கு மருத்துவ உதவி இல்லை என்று சொல்லும் போது அறையில் உட்கார்ந்து கொண்டு.. அது அவர்கள் தலையேழுத்து அதற்கு தானே அவர்களை படையில் எடுத்தது என்று பேசுவது சுயநலத்தையும், கடைசி கட்ட திமிரையும் காட்டுகின்றது....

இன்னும் கொஞ்ச நேரத்தில் ரஷ்ய படையிடம் மாட்ட போகின்றோம் என்பது தெரிந்தும் பெரிய தலைகள் எல்லாம் தண்ணியை போட்டு விட்டு , பெண்களை அரைநிர்வாணமாக ஆடவிட்டு வேடிக்கை பார்பதும்... பலர் எதிரிலேயே உடலுறவு கொள்வதும் போகின்ற போக்கில் காட்டி இருப்பது அற்புதம்....எந்த உதவியும் இல்லாமல் பல வீரகள் இறந்து போவது... தலமை இல்லாமல் ஒரு சாம்ராஜ்யம் எப்படி எல்லாம் சின்னா பின்னமாகிவிடும் என்பதை மிக அழகாக காட்சி படுத்தி இருக்கின்றார்கள்...

இன்னும் நிறைய எழுதும் என்று ஆர்வம் இருத்தாலும்..... நேரமின்மை காரணத்தால் கடைசி ஒரு செய்தியுடன்.... ஹிட்லரோடு சமகாலத்தில் வாழ்ந்த படைதளபதிகள் பதுங்குழியில் இருந்த உதவியாளர்கள் என எல்லோரிடமும் பேசி அவர்கள் தந்த அடிப்படையில் இந்த படம் எடுக்கபட்டது

நான் படத்தை அவ்வளவு ரசித்தேன் நீங்களும் ரசிப்பீர்கள் என்று .. அதுதான் இந்த படத்தின் பலம்.