June 9, 2010

prayanam (Telugu)....


ரொம்ப நாட்கள் ஆகிறது இப்படி ஒரு சந்தோஷமாக ஒரு காதல் படத்தை பார்த்து...

இரண்டு மணிநேரத்தில் ஒரு பெண்ணை காதலிக்க வைக்க முடியுமா? முடியாது என்று இவுலகில் இல்லை..மனம் இருந்தால் எதையும் வென்றிட முடியும்.. ஒரு பெண்னை காதலில் வீழ வைக்க முடியாத.. நிச்சியம் முடியும் என்று சொல்லுகின்றது இந்த 2 அரை மணி நேர தெலுங்கு படம் பிரயாணம் (Prayanam )...

முன்பே சொல்லிவிடுகிறேன் (பின்னர் தீட்டாதீங்க) சிலருக்கு இந்த படம் பிடிக்காமல் போகலாம்.... ஆனால் என்னை பொறுத்த வரை ஒரு பில் குட் மூவி பார்த்த சந்தோஷ்ம்.

மலேஷியாவில் அழகு கலை டிகிரி படிக்கும் நாயகிக்கு எதிலும் Pratcial-லாக இருக்க வேண்டும் & பிடிக்கும்... நோ செண்டிமென்ட்.... ஆனால் நாயகனோ எதையும் Just like thatயாக எடுத்து கொள்பவன்.... நாயகன் தனது இருண்டு நண்பர்களுடன் சிங்கபூர் போக மலேசியா ஏர் போர்ட் வருகின்றான்...நாயகியோ இந்தியாவில் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்த பையனை பார்க்க ஹைதிராபாத் வருவதற்க்காக தனது தோழியுடன் ஏர் போர்ட் வருகின்றாள்...

பார்த்தவுடன் அவளை பிடித்து கண்டதும் காதல் கொண்ட நம்ம ஹீரோ அவளை சற்றே பாலோ செய்யும் போது அவளுக்கு இந்தியாவில் ஒரு பாய்பிரண்டு இருக்கின்றான்.... அவளுக்கு திருமணம் நிச்சய்க்கபட்டு என்பது தெரிந்து அவளை விடாமல் துரத்துகின்றான்... அதுவும் அந்த முதல் சந்திப்பு எப்படி காதலாக மாறி அவள் மனதில் இடம் பிடித்து அவள் வாயால் எப்படி காதலை சொல்லுகின்றாள் என்பதே படத்தின் கதை...

முதலில் அந்த பையனும் அந்த பெண்ணையும் பிடிக்கவில்லை... படம் ஆரம்பித்து பத்து நிமிடம்... கொஞ்சம் அயற்ச்சியை தருகின்றது... ஆனால் அதன் பிறகு இந்த படம் எடுக்கும் வேகம் அற்புதம்....ஏர் போர்ட்டில் முழுபடபிடிப்பும் நடத்துவது என்பது சாதாரான விஷயம் அல்ல... ஸ்டிவன் ஸ்பீல்பெர்க்கு எடுத்த டெர்மினல் படத்துக்கு அப்புறம் முழுக்க முழுக்க ஏர்போர்ட்டில் எடு்த்த படம் இது என்று தாராளமாக சொல்லிக்கொள்ளலாம்...

May 31, 2010

விடைபெறுகிறேன்.....


நண்பர்களே!!


அநேகமாக இதுவே எனது இறுதி பதிவாகவும் இருக்கலாம். இப்போது இருக்கும் வேலையில் மாற்றம் (வேலை போயிருச்சுனு இல்லைங்க) அடுத்த பணியிடம், தங்குமிடம் எதுவும் உறுதியாகாததால். மீண்டும் எப்போது அடுத்த பதிவு போடுவேன் என்று எனக்கே தெரியாது. கணினி பயன்படுத்தக்கூடிய அலுவலுகமோ + வலையில் ஏறும் வாய்ப்பு கிடைத்தால், மடிக்கணினியோ வாய்க்கும் காலத்தில் மீண்டும் நிச்சயம் எழுத்தை தொடர்வேன்.

அதுவரை நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.
இத்தனை நாள் ஆதரவு அளித்த அத்தனை நண்பர்களுக்கு நன்றி!!

:)) அன்புடன்
அஷ்வின்

May 8, 2010

நன்றிகள்.... (வாசகர்களகிய உங்களுக்கு)




வணக்கம், வணக்கம், வணக்கம்..........

என் வலைபூ படித்துக்கொண்டிருக்கும் வாசகர்களகிய உங்களுக்கு வண்க்கம். [வலைபூ-ல மூன்று தடவை வணக்கம் சொல்லிருக்கிறேன்னு யோசிக்கதீங்க, சன் டிவி காமெடி டைம் Archana style ல வண்க்கம் சொல்லிப்பார்தேன், அதான் மூன்று தடவை உங்களுக்கு வணக்கம்]

"ஏய், அடங்க மாட்டீயா நீ!" என்றது என் உள்மனம் உற்சாகத்திலும் சந்தோஷத்திலும்.

இது என் 25வது பதிவு!! அது மட்டுமல்ல இன்று என் வலைபூ பக்கம் வந்த வாசகர்களின் எண்ணிக்கை 1000 தண்டிவிட்டது.

என்னமோ பெரிய சாதனை செய்துவிட்டதாக நான் பெருமிதத்தில் தத்தளிக்க, என் மனம் என்னை அடக்கியது! :))

இது அவ்வளவு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம் பலருக்கு. ஆனால், என்னை பொறுத்தவரை நான் வாழ்க்கையில் உருப்படியாக செய்து மிக சில விஷயங்களில் இதுவும் ஒன்று!

பிடிச்ச விஷயங்கள் நிறைய .. குறிப்பா சொல்லணுமின்னா புத்தகம், திரைஇசை, அனிமேஷன் கார்டூன் படங்கள்… சொல்லிட்டே போகலாம்.(மேலும் என் Profile-ல இருக்கு).

சற்று வரலாற்றை புரட்டி பார்த்தால் (சரி முறைக்காதீங்க.... ), நான் எப்படி இந்த வலைப்பூ உலகிற்குள் வந்தேன்? என்று எனக்கே சற்று வியப்பாகத்தான் உள்ளது.

சும்மா....ஒரு நாள் நான் கூகுளில் எதையோ தேடிக் கொண்டிருக்கையில் என் கண்களுக்கு தென்பட்டது ஒரு வலைபூ திறந்து உள்ளே நுழைந்தேன். திகைத்து போனேன் தமிழில் தட்டச்சை செய்யபட்டிருந்தது. எனக்கும் அதை போல் திறக்க ஆசை, எனக்கு தெரிந்தவரைக்கும் ஒரு வலை உருவ வேண்டுமென்றால் அதற்கு நிறைய பணம் தேவை, பின் அதில் என் வசதிக்கேற்ப அதை மாற்றி அமைக்க முடியாது, தெரிந்தவர்கள் மட்டும் படிக்க முடியும்,

Blogger-ஒன்னு இருக்கு, G-mail ID இருந்தால் போதும் எனக்கு ஒரு சொந்த வலை ஆரமித்து விடலாம் என தெரிந்து கொண்டேன், அப்படி அரமிக்கபட்டது தான் இந்த வலை.

நான் ஒன்றும் பிறப்பிலேயே எழுத்தளானாய் பிறக்கவில்லை, பின் எப்படி இவன் மட்டும்.... என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.

எதோ ஆர்வத்தில் எழுத்துக்களை சேர்த்து கிறுக்க கொண்டிருந்த என்னை நல்ல பதிவுகளை எழுத வைத்தது நான் கண்ட திரைப்படங்களின் மேல் உள்ள ஆர்வம்.

இந்த வலைபூ ஆரமித்த சில காலங்களில் பழக்க ஆரமித்து எல்லா நிலையிலும் என்னை ஊக்க படுத்தி கொண்டிருக்கும் என் நண்பர் கருந்தேள் கண்ணாயிரம் (ரஜெஷ்-கு) நான் ரொம்பவே நன்றிகடன் பட்டிருக்கிறேன்!....

இது வரையிலும் நான் என்ன எழுதி கிளிச்சளும் என்னை தட்டி கொடுக்கும் என் நண்பர்களாகிய நீங்கள்... என்னையும் மதிச்சு ஃபாலோ பண்ணுறவங்க..

இப்போ எனக்கென்று ஒரு இணையகுடும்பம் இன்றைய அளவில் இருக்கிறார்கள் என்று நினைக்கையில் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

என் வலைப்பூவை படிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்!

என் எழுத்தில், கருத்தில்…..
பிழைகள் இருந்தால்
சுட்டிக் காட்டுங்கள்!
பிடித்திருந்தால்
தட்டிக் கொடுங்கள்!!

நான் எழுதுகையில்
பிறக்கின்ற என் எழுத்துக்கள்!!!
நீங்கள் வாசிக்கையில்
உயிரையும்
பெறுகின்றன,

உங்கள் ஊக்கமும் விமர்சனங்களும்தான் என்னை மேன்மேலும் எழுத தூண்டும்.

பிரியமுடன்
அஷ்வின்.